under review

சிவப்பு கறுப்பு வெளுப்பு

From Tamil Wiki
Revision as of 07:14, 22 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
சிவப்பு கறுப்பு வெளுப்பு

சிவப்பு கறுப்பு வெளுப்பு (1980) சுஜாதா குமுதத்தில் எழுதிய, முடிக்கப்படாத நாவல். சில அத்தியாயங்களே வெளிவந்தது

வெளியீடு, நிறுத்தம்

சுஜாதா 1980-ல் குமுதம் வார இதழில் 1956-ல் நிகழ்ந்த சிப்பாய் கலவரத்தின் பின்னணியில் ஒரு நாவலை எழுத தொடங்கினார். அதில் நாடார் சாதியைப் பற்றிய இழிவுபடுத்தல் இருப்பதாகச் சொல்லி நாடார் அமைப்புகள் குமுதத்தின் மேல் வன்முறை கலந்த மிரட்டலை விடுத்தன. குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்டது. சுஜாதா 1981-ல் ரத்தம் ஒரே நிறம் என்ற பேரில் சாதிக்குறிப்புகள் இல்லாமல் அந்நாவலை வேறுவகையில் எழுதினார்.

இலக்கிய இடம்

சிவப்பு கறுப்பு வெளுப்பு2

சிவப்பு கறுப்பு வெளுப்பு வெளியான சில அத்தியாயங்களில் மிக விரிவான காட்சிச் சித்திரம் ஒன்றை அளித்து முக்கியமான ஒரு நாவலுக்கான களத்தை உருவாக்கியது. அதில்வந்த சென்னை துறைமுகச் சித்தரிப்பு இலக்கிவாதிகளை கவனிக்கச் செய்தது. ஆனால் அது குமுதம் வாசகர்களுக்குரிய தொடர்கதைத்தன்மை கொண்டிருக்கவில்லை. அது நிறுத்தப்பட்டு மீண்டும் ரத்தம் ஒரே நிறம் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டபோது எளிமையான ஒற்றைக்கோடுக் கதை கொண்ட சாகசநாவலாக சுஜாதா எழுதினார். சுஜாதா உத்தேசித்திருந்த நாவல் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக இருந்திருக்கலாம்

உசாத்துணை


✅Finalised Page