under review

சிவசம்புப்புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சிவசம்புப்புலவர் (1830 - செப்டம்பர் 29, 1910) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == சிவசம்புப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் அருளம்பல முதலியாருக்கு மகனாகப் பிறந்த...")
 
Line 30: Line 30:
* புலோலி நான்மணிமாலை (1889, வல்வை)
* புலோலி நான்மணிமாலை (1889, வல்வை)
* திருச் செந்திற்றிருவந்தாதி (1888, வல்வை)
* திருச் செந்திற்றிருவந்தாதி (1888, வல்வை)
===== இவரைப்பற்றிய நூல்கள் =====
* சிவசம்புப்புலவர் சரித்திரம்: சுன்னகம் கு. முத்துக்குமாரசுவாமிபிள்ளை
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை

Revision as of 22:06, 7 November 2022

சிவசம்புப்புலவர் (1830 - செப்டம்பர் 29, 1910) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவசம்புப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் அருளம்பல முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். நல்லூர்ச் சரவணமுத்துப்புலவர், நல்லூர்ச்சம்பந்தப்புலவர் ஆகியோரிடம் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சிவசம்புப்புலவர் இளமையில் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். ஈழநாட்டில் பிரபந்தம் பாடிய புலவர்களுள் மிகுதியான பிரபந்தங்களைப் பாடினார். இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதிமீது இவர் கல்லாடக் கலித்துறையும், நான்மணிமாலையும், இரட்டை மணிமாலையும் பாடினார். பாண்டித்துரைத்தேவர் மீது நான்மணிமாலை பாடினார்.

மாணவர்கள்
  • ச. வயித்தியலிங்கபிள்ளை
  • புலோலியூர் ம. தில்லை நாதநாவலர்
  • புலோலியூர் வ. குமாரசுவாமிப்புலவர்
  • அ. வேன்மயில்வாகனப்புலவர்
  • புலோலியூர் ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்

பட்டம்

ஆறுமுக நாவலர் இவருக்குப் ‘புலவர்" பட்டத்தினை வழங்கினர்.

மறைவு

சிவசம்புப்புலவர் செப்டம்பர் 29, 1910-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • மறைசையந்தாதி உரை (1893)
  • யாப்பருங்கலக்காரிகை உரை
  • கந்தபுராணம்-வள்ளியம்மை திருமணப்படலம்உரை
  • மயில்வாகன வம்ச வைபவம்
  • பாற்கர சேதுபதி கல்லாடக் கலித்துறை
  • பாற்கர சேதுபதி நான்மணிமாலை
  • பாற்கரசேதுபதி இரட்டை மணி மாலை
  • பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை
  • கந்தவனநாதர் பதிகம்
  • வல்லிபுரநாதர் பதிகம்
  • செந்தில் யமகவந்தாதி (1888, வல்வை)
  • திருவேரக அந்தாதி
  • எட்டிக்குடிப் பிரபந்தம்
  • புலோலி நான்மணிமாலை (1889, வல்வை)
  • திருச் செந்திற்றிருவந்தாதி (1888, வல்வை)
இவரைப்பற்றிய நூல்கள்
  • சிவசம்புப்புலவர் சரித்திரம்: சுன்னகம் கு. முத்துக்குமாரசுவாமிபிள்ளை

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:சிவசம்புப்புலவர், அருளம்பல முதலியார்: நூலகம்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.