சிவசங்கரி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 19: Line 19:


==== நூல்கள் ====
==== நூல்கள் ====
சிவசங்கரி ஏறத்தாழ 150 சிறுகதைகள், 36 நாவல்கள், 48 குறு நாவல்கள், 15 பயண கட்டுரைகள், 7 கட்டுரை தொகுப்புகள் எழுதியிருக்கிறார். 1996 ம் ஆண்டு,  '''அம்மா சொன்ன கதைகள்''' என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பேசும் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவரது நூல்களில் குறிப்பிட்ட சில:
சிவசங்கரி ஏறத்தாழ 150 சிறுகதைகள், 36 நாவல்கள், 48 குறு நாவல்கள் எழுதியுள்ளார்.   1996 ம் ஆண்டு,  '''அம்மா சொன்ன கதைகள்''' என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பேசும் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  


*
*

Revision as of 22:05, 22 January 2022

Sivasankari.jpg


சிவசங்கரி (14 அக்டோபர் 1942) தமிழில் பொது வாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதிய எழுத்தாளர். இவர் சமூக விழிப்புணர்வு மற்றும் மத்திய தர மக்களின் வாழ்க்கையை கதைக்களனாக கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் எழுதியிருக்கிறார். சிவசங்கரியின் சில கதைகள் தமிழில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன.

பிறப்பு, கல்வி

சிவசங்கரி, அக்டோபர் 14, 1942 அன்று சூர்யநாராயணன், ராஜலெக்ஷ்மி இணையருக்கு நான்காவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயத்தில் உயர்நிலை கல்வி கற்றார். பின் சென்னை, SIET மகளிர் கல்லூரியில் விலங்கியலில் இளநிலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சிவசங்கரி 1963ல் சந்திரசேகரன் என்பவரை மணந்தார். கணவர் சந்திரசேகரன், பொறியியலில் பட்டம் பெற்றவர். சிவசங்கரி 'சிடி பாங்க்'கில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். பரத நாட்டியம் முறையாக பயின்று அரங்கேற்றம் செய்திருக்கிறார். கர்நாடக சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றவர்.

பங்களிப்பு

சிவசங்கரியின் முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" ,1968ம் ஆண்டு கல்கி இதழில் பிரசுரமாகியது. இச்சிறுகதை, குழந்தை இல்லாத தம்பதியினரின் மெல் உணர்வுகளை பேசுவதாக அமைந்தது. 1980 ம் ஆண்டு, ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்த ஒரு மனிதனின் கதை , குடி போதையின் சீரழிவுகளையும் அதிலிருந்து கதாநாயகன் மீளுவதை பற்றியுமானது.

அதே ஆனந்த விகடன் இதழில் 1983 ம் ஆண்டு வெளியான பாலங்கள் தொடர் தமிழ் பிராமண சமூகத்தில் மாறிவரும் பழக்க வழக்கங்களையும், பெண்களின் உளவியல் மாற்றங்களையும் மூன்று தலைமுறையை சார்ந்த பெண்கள் மூலம் சொன்னது.

சிவசங்கரியின் மேற் சொன்ன இரு நாவல்களையும், எழுத்தாளர் ஜெயமோகன், தன்னுடைய "தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்கள்" பட்டியலில், சமூக மிகு கற்பனை படைப்புகள் வரிசையில் சேர்க்கிறார்.

நூல்கள்

சிவசங்கரி ஏறத்தாழ 150 சிறுகதைகள், 36 நாவல்கள், 48 குறு நாவல்கள் எழுதியுள்ளார். 1996 ம் ஆண்டு, அம்மா சொன்ன கதைகள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பேசும் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.