சிவசங்கரி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(inserted photo)
Line 1: Line 1:
[[File:Sivasankari.jpg|thumb]]





Revision as of 19:51, 22 January 2022

Sivasankari.jpg


சிவசங்கரி (14 அக்டோபர் 1942) தமிழில் பொது வாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதிய எழுத்தாளர். இவர் சமூக விழிப்புணர்வு மற்றும் மத்திய தர, உயர் மத்திய தர மக்களின் வாழ்க்கையை கதைக்களனாக கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் எழுதியிருக்கிறார். சிவசங்கரியின் சில கதைகள் தமிழில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன.

பிறப்பு, கல்வி

சிவசங்கரி, அக்டோபர் 14, 1942 அன்று சூர்யநாராயணன், ராஜலெக்ஷ்மி இணையருக்கு நான்காவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயத்தில் உயர்நிலை கல்வி கற்றார். பின் சென்னை, SIET மகளிர் கல்லூரியில் விலங்கியலில் இளநிலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சிவசங்கரி 1963ல் சந்திரசேகரன் என்பவரை மணந்தார். கணவர் சந்திரசேகரன், பொறியியலில் பட்டம் பெற்றவர். சிவசங்கரி 'சிடி பாங்க்'கில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். பரத நாட்டியம் முறையாக பயின்று அரங்கேற்றம் செய்திருக்கிறார். கர்நாடக சங்கீத்த்திலும் தேர்ச்சி பெற்றவர்.