சிவகுமார் முத்தய்யா
சிவகுமார் முத்தய்யா (பிறப்பு: ஜூலை 3, 1978) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருவாரூர் விளமல் தண்டலையில் மாணிக்கம், லோகம்பாள் இணையருக்கு இரண்டாவது மகனாக ஜூலை 3, 1978-ல் பிறந்தார். இளநிலைதமிழ் கூட்டுறவுபட்டயம், கணினிபட்டயம் பயின்றார்.
தனிவாழ்க்கை
2006 தொடங்கி பதினாறு ஆண்டுகள் நாளிதழில் பகுதி நேர நிருபராக பணியாற்றி வருகிறார். மாலை தினசரி இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருவாரூர் அருகே தாழைக்குடி என்ற ஊரில் வசித்து வருகிறார். மனைவி ராஜலெட்சுமி, மகன் சேகுவேரா மகள் தமிழினி.
இலக்கிய வாழ்க்கை
நாவல், குறுநாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனங்கள் எழுதி வருகிறார். காப்ரியேல் மார்க்வேஸ், லியோ டால்ஸ்டாய். தாஸ்தவஸ்கி, சதத்ஹசன் மண்டோ, முகம்மது பஷீர் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.
திருவாரில் ’வண்டல் இலக்கிய வட்டம் ’மூலமாக மாதம் இருமுறை, தமிழ் இலக்கியங்கள் குறித்து கூட்டங்களை கூட்டி நடத்தியுள்ளார். தமிழ் நாவல்கள், சிறுகதைகள் குறித்து திருவாரூர் மத்திய பல்கலைகழகமம், இலக்கியத்திருவிழாக்கள் போன்றவற்றில் உரையாற்றி வருகிறார். 2016-ல் கேரளாவில் நடைபெற்ற தென்னந்திய படைப்பாளிகள் அமர்வில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு சிறுகதை குறித்து உரையாற்றியுள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள், எளிய மக்களின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்வதாகக் குறிப்பிடுகிறார்.
விருதுகள்
- கல்கிவார இதழ் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு
- அனைத்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க கதைப்போட்டியில் முதல்பரிசு
- புதியகாற்று சிறுகதைப்போட்டியில் பரிசு
- கலை இலக்கிய, பெருமன்றத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு
- போடிமாலன் சிறுகதைபோட்டியில் முதல் பரிசு
- 2016-ல் கணையாழி மாதஇதழ் வழங்கிய சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான ஜெயகாந்தன்விருது
- திருப்பூர் கனவு இலக்கிய விருது
- பிரறம்பு தமிழ்சங்க சிறுகதையாளர் விருது
நூல்கள்
சிறுகதைதொகுப்பு
- செறவிகளின் வருகை
- செங்குருதியில் உறங்கும் இசை
- கிளிகள் வரும்போது
- இளையராஜாவின் காதலிகள்
பிற
- ஆற்றோரக் கிராமம் (குறுநாவல்கள்)
- நினைவுகளின் நாட்குறிப்பு (கட்டுரை)
- தூண்டில் முள்வளைவுகள் (குறுநாவல்கள்தொகுப்பு 2022)