சிங்கை வர்த்தமானி
From Tamil Wiki
சிங்கை வர்த்தமானி (1875) சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழ். இஸ்லாமிய தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று.
வெளியீடு
சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875-ஆம் ஆண்டு நடத்திய இதழ் இது.
சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என ஆய்வாளர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்[1] கருதுகிறார்.
உசாத்துணை
குறிப்புகள்
✅Finalised Page