சா. ஞானப்பிரகாசர்: Difference between revisions
(Moved Category Stage markers to bottom and added References) |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான ராசலிங்கம் சாமிநாதப் பிள்ளைக்கும், தங்கமுத்துவுக்கும் மகனாக மானிப்பாய் என்ற ஊரில் ஆகஸ்ட் 30, | ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான ராசலிங்கம் சாமிநாதப் பிள்ளைக்கும், தங்கமுத்துவுக்கும் மகனாக மானிப்பாய் என்ற ஊரில் ஆகஸ்ட் 30, 1875-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். இவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். தங்கமுத்து அம்மையார் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அதன்பின் ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. | ||
அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்றார். யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார். | அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்றார். யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார். | ||
Line 9: | Line 9: | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
தமது படிப்பை முடித்த பின்னர் பெருந் தோட்டமொன்றில் கணக்காளராகப் பணிபுரிந்தார். | தமது படிப்பை முடித்த பின்னர் பெருந் தோட்டமொன்றில் கணக்காளராகப் பணிபுரிந்தார். 1893-ல் இரயில்வேத் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895-ஆம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ் குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். டிசம்பர் 1, 1901-ல் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். | ||
நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார். இறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறை எனும் ஊரில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க, கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தார். | நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார். இறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறை எனும் ஊரில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க, கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தார். | ||
Line 23: | Line 23: | ||
தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி (Studies in TamilEtymology) என்னும் நூலில் தமிழ் அடிச் சொல் இயல்பு, வழிச் சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, ஆரிய மொழிகளில் வழிச் சொல்லாக்கம் முதலிய ஆராய்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. | தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி (Studies in TamilEtymology) என்னும் நூலில் தமிழ் அடிச் சொல் இயல்பு, வழிச் சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, ஆரிய மொழிகளில் வழிச் சொல்லாக்கம் முதலிய ஆராய்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. | ||
ஒப்பியல் நோக்கில் ஆய்வுகளை நிகழ்த்தினார். மரபுவழித் தமிழ்க்கல்வியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். | ஒப்பியல் நோக்கில் ஆய்வுகளை நிகழ்த்தினார். மரபுவழித் தமிழ்க்கல்வியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். 1936-ல், சிந்து சமவெளியின் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை படித்தறிவதில் ஸ்பானிய கிறுஸ்தவ சமயத்துறைவியும், மும்பை பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், இந்திய புதை பொருளாராய்ச்சிக்குக் கழகத் தலைவருமான அறிஞர் ஹெராஸ் பாதிரியாருக்கு ஞானப்பிரகாசர் உதவினார். சிந்து சமவெளி நாகரிகம் திராவிடப் பண்பாடுடன் பொருந்துவதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை உதவின. மொழி ஆராய்ச்சியில் வேர்ச்சொல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதால் ‘வேர்ச்சொல் அறிஞர்’ என்றும் அழைக்கப்பட்டார். | ||
==== யாழ்ப்பாண வைபவ விமரிசனம் ==== | ==== யாழ்ப்பாண வைபவ விமரிசனம் ==== | ||
Line 40: | Line 40: | ||
== நினைவு முத்திரை வெளியீடு == | == நினைவு முத்திரை வெளியீடு == | ||
சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்கும் விதமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் மே 22, | சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்கும் விதமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் மே 22, 1981-ல் வெளியிட்டது. பொதுவாக தலைநகர் கொழும்பில் வெளியிடப்படும் நினைவு முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்திலுள்ள அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை முன்னிலையில், யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு.பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார். | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* தமிழ்நாட்டுப் புலவர்களையும், ஈழநாட்டுப் புலவர்களையும் கொண்ட தமிழ்ப்புலவர் மன்றம் | * தமிழ்நாட்டுப் புலவர்களையும், ஈழநாட்டுப் புலவர்களையும் கொண்ட தமிழ்ப்புலவர் மன்றம் 1944-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுவாமி ஞானப் பிரகாசரின் தமிழ்ப் பணியையும், ஆராய்ச்சித் திறனையும் பாராட்டி நடத்திய விழாவில் அவருக்கு ‘சொற்கலைப் புலவர்’ என்னும் பட்டமளித்தது. | ||
* கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் | * கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் 1936-ல், தமிழ்ச் சொற்பிறப்புக்காக சுவாமி ஞானப் பிரகாசருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. | ||
* ஞானப்பிரகாசரின் ஆராய்ச்சியைப் பாராட்டி ஜெர்மனி நாட்டு அரசு அவரைக் கௌரவித்து, அவரது உருவம் பதித்த முத்திரை வெளியிட்டது. | * ஞானப்பிரகாசரின் ஆராய்ச்சியைப் பாராட்டி ஜெர்மனி நாட்டு அரசு அவரைக் கௌரவித்து, அவரது உருவம் பதித்த முத்திரை வெளியிட்டது. | ||
== மறைவு == | == மறைவு == | ||
ஜனவரி 22, | ஜனவரி 22, 1947-ல் தன்னுடைய 71-வது வயதில் ஞானப்பிரகாசர் காலமானார். | ||
[[File:பண்டைத்தமிழர்.jpg|thumb|பண்டைத்தமிழர்]] | [[File:பண்டைத்தமிழர்.jpg|thumb|பண்டைத்தமிழர்]] | ||
Line 109: | Line 109: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/7628/1/%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html | * [https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/7628/1/%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html சா._ஞானப்பிரகாசர் | ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua] | ||
* யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - தமிழரசர் உகம் A Critical History of Jaffna The Tamil Era - Nallur, Swamy Gnanapirakasar | * யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - தமிழரசர் உகம் A Critical History of Jaffna The Tamil Era - Nallur, Swamy Gnanapirakasar | ||
* [https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may19/37206-2019-05-10-08-33-02 தமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர்] | * [https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may19/37206-2019-05-10-08-33-02 தமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர்] | ||
* [https://www.hindutamil.in/news/blogs/230789-10-2.html சா. ஞானப்பிரகாசம் 10 | சா. ஞானப்பிரகாசம் 10 - hindutamil.in] | * [https://www.hindutamil.in/news/blogs/230789-10-2.html சா. ஞானப்பிரகாசம் 10 | சா. ஞானப்பிரகாசம் 10 - hindutamil.in] | ||
* [http://nakkeran.com/index.php/2022/02/01/commemorating-the-75th-death-anniversary-of-nallur-gnanapragasa-swamigal/ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் (1895 – 1947) மறைந்து 75 ஆவது நிறைவு – Nakkeran] | * [http://nakkeran.com/index.php/2022/02/01/commemorating-the-75th-death-anniversary-of-nallur-gnanapragasa-swamigal/ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் (1895 – 1947) மறைந்து 75 ஆவது நிறைவு – Nakkeran] | ||
{{Standardised}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 16:43, 21 April 2022
சா. ஞானப்பிரகாசர் (ஆகஸ்ட் 30, 1875 - ஜனவரி 22, 1947) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர், பன்மொழிப் புலவர், மறைநூல் வல்லுநர், மொழி வல்லுநர், மத போதகர், மொழி ஆராய்ச்சியாளர், தமிழின் தொன்மையை ஆய்வு செய்தவர், எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி முக்கியமான பங்களிப்பு. ‘சொற்கலைப் புலவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான ராசலிங்கம் சாமிநாதப் பிள்ளைக்கும், தங்கமுத்துவுக்கும் மகனாக மானிப்பாய் என்ற ஊரில் ஆகஸ்ட் 30, 1875-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். இவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். தங்கமுத்து அம்மையார் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அதன்பின் ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்றார். யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.
தனிவாழ்க்கை
தமது படிப்பை முடித்த பின்னர் பெருந் தோட்டமொன்றில் கணக்காளராகப் பணிபுரிந்தார். 1893-ல் இரயில்வேத் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895-ஆம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ் குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். டிசம்பர் 1, 1901-ல் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார். இறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறை எனும் ஊரில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க, கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தார்.
இலக்கிய வாழ்க்கை
இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் புலமை பெற்றார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ் குருமடத்தில் இலத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றார். மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்து, 72 மொழிகள் வரை கற்றுப் புலமை பெற்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார்.
ஆய்வுகள்
வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல் ஒற்றுமை, இடப்பெயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகிய களங்களில் ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற தமிழ் ஒப்பியல் அகராதி நூலை எழுதினார். ஞான உணர்ச்சி எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதென்ற கருத்துரையை மறுத்து சாங்கோபாங்க சுவாமிகள் அந்நூலை எழுதியதை நிறுவினார்.
தமது ஆராய்ச்சி முடிவுகளை ஆங்கிலம், தமிழில் எழுதியுள்ளார். ‘தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்’ எனும் நூலில், பழந்தமிழ், ஆரியத் தொடர்புகள், பழைய தமிழ் நூல்கள், பழந்தமிழர் மத்தியில் நிலவிய சமூக நிலைமைகள் குறித்து ஆராய்ந்து விரிவாக எழுதினார். ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ (How Tamil wasBuilt up) என்ற நூல் தமிழ் சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் நூல். மேலும், இந்நூலில் தமிழ் சொற் தொகுதிகள், இடம் பற்றிய பெயரிடு, முதற் சொல்லடிகள், வழிச் சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் விரிந்த விசித்திரம், பிரதிப் பெயர்கள், பெயர் விகுதிகள், வேற்றுமை உருபுகள், காலங் காட்டும் இடைநிலைகள், செயவெனச்சம், வியங் கோள், எதிர்மறை, பிறமொழிகளிற் தமிழடிகள் முதலிய தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி (Studies in TamilEtymology) என்னும் நூலில் தமிழ் அடிச் சொல் இயல்பு, வழிச் சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, ஆரிய மொழிகளில் வழிச் சொல்லாக்கம் முதலிய ஆராய்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
ஒப்பியல் நோக்கில் ஆய்வுகளை நிகழ்த்தினார். மரபுவழித் தமிழ்க்கல்வியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். 1936-ல், சிந்து சமவெளியின் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை படித்தறிவதில் ஸ்பானிய கிறுஸ்தவ சமயத்துறைவியும், மும்பை பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், இந்திய புதை பொருளாராய்ச்சிக்குக் கழகத் தலைவருமான அறிஞர் ஹெராஸ் பாதிரியாருக்கு ஞானப்பிரகாசர் உதவினார். சிந்து சமவெளி நாகரிகம் திராவிடப் பண்பாடுடன் பொருந்துவதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை உதவின. மொழி ஆராய்ச்சியில் வேர்ச்சொல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதால் ‘வேர்ச்சொல் அறிஞர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
யாழ்ப்பாண வைபவ விமரிசனம்
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார்.
இதழியல்
இலங்கையில் வெளிவந்த, ஈழகேசரி, இந்து சாதனம், பாது காவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். சத்திய வேதப் பாதுகாவலன், குடும்ப வாசகம், அமலோற்பவ ராக்கினி தூதன் உள்ளிட்ட மாத இதழ் களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.
பதவிகள்
- இலங்கைப் பல்கலைக் கழக மூதவை (Senate) உறுப்பினர்
- ஆசிய அரசவையின் இலங்கைக் கிளையின் உறுப்பினர்
- இலங்கை யாழ்ப்பாண வரலாற்று சங்கத்தின் துணைத் தலைவர்
- இலங்கை யாழ்ப்பாண வரலாற்று சங்கத்தின் தலைவர்
- ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவர்.
நினைவு முத்திரை வெளியீடு
சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்கும் விதமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் மே 22, 1981-ல் வெளியிட்டது. பொதுவாக தலைநகர் கொழும்பில் வெளியிடப்படும் நினைவு முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்திலுள்ள அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை முன்னிலையில், யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு.பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார்.
விருதுகள்
- தமிழ்நாட்டுப் புலவர்களையும், ஈழநாட்டுப் புலவர்களையும் கொண்ட தமிழ்ப்புலவர் மன்றம் 1944-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுவாமி ஞானப் பிரகாசரின் தமிழ்ப் பணியையும், ஆராய்ச்சித் திறனையும் பாராட்டி நடத்திய விழாவில் அவருக்கு ‘சொற்கலைப் புலவர்’ என்னும் பட்டமளித்தது.
- கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் 1936-ல், தமிழ்ச் சொற்பிறப்புக்காக சுவாமி ஞானப் பிரகாசருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- ஞானப்பிரகாசரின் ஆராய்ச்சியைப் பாராட்டி ஜெர்மனி நாட்டு அரசு அவரைக் கௌரவித்து, அவரது உருவம் பதித்த முத்திரை வெளியிட்டது.
மறைவு
ஜனவரி 22, 1947-ல் தன்னுடைய 71-வது வயதில் ஞானப்பிரகாசர் காலமானார்.
நூல் பட்டியல்
- சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை
- தமிழர் பூர்வீக சரித்திரம்
- யாழ்ப்பாணத்தரசர்கள்
- யாழ்ப்பாண சரித்திரம்
- இந்திய நாகரிகம்
- சுப்பிரமணியர் ஆராய்ச்சி
- பிள்ளையார் ஆராய்ச்சி
- தமிழர் வரலாறு
- தமிழரிடையே ஜாதி பிறந்த முறை
- தமிழ் சொற்பிதிர்
- தமிழ்த் தாதுக்கள்
- மொழிக்குடும்பம்
- தருக்க சாத்திரம்
சமய நூல்கள்
- ஆண்டவர் சரித்திரம்
- சுப்பிரமணியர் ஆராய்ச்சி
- பிள்ளையார் ஆராய்ச்சி
- மிருகபலி ஆராய்ச்சி
- மறுபிறப்பு ஆட்சேபம்
- சைவர் ஆட்சேப சமாதானம்
- புதுச் சைவம்
- புதுச் சைவமும் புலால் உண்ணாமையும்
- இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை வரலாறு
- ஆதிகாலத்துப் பாப்புமார் சரித்திரம்
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- உபதேசியார் சந்தியாபிள்ளை நற்சரிதை
- பரிமான் என். ஆர். முத்துக்குமாரு
- Life of Cecilia Rasamma
- Chryasanthus Daria
ஆங்கில நூல்கள்
- kings of Jaffna during the portuguers period
- Histroy of Jaffna under the portugues and Dutch Rule
- Ancient kings of Jaffna
- Early History of Tamils and the religion
- 0rigin of caste among the Tamils
- Indian ancient Chronology and Civilization
- Life from the Excavations of the Indus Valley
- Early History of the Ancient popes
- Catholicism in Jaffna
- 25 years of catholic progress inthe Diocase of Jaffna
- Origin and History of the CatholicChurch in Ceylon
- Philosophical Saivaism or SaivaSiddhanta
- Historical aspect of Christianity and Buddhism
- How Tamil was built up
- An English – Tamil Dictionary
- Some laws of Dravidian Etymology
- The Dravidian Element in Sinhalese
- Root words of the Dravidian groupof Languages
- The Proposed comparative Tamil Lexicon
இதர இணைப்புகள்
உசாத்துணை
- சா._ஞானப்பிரகாசர் | ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua
- யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - தமிழரசர் உகம் A Critical History of Jaffna The Tamil Era - Nallur, Swamy Gnanapirakasar
- தமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர்
- சா. ஞானப்பிரகாசம் 10 | சா. ஞானப்பிரகாசம் 10 - hindutamil.in
- நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் (1895 – 1947) மறைந்து 75 ஆவது நிறைவு – Nakkeran
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.