under review

சாற்றுக் கவிகள்: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Je)
(Moved Category Stage markers to bottom and added References)
Line 72: Line 72:


{{ready for review}}
{{ready for review}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:10, 17 April 2022

சாற்றுக் கவிகள் என்பது புதிதாக நூல் இயற்றும் ஆசிரியர் மேல் பாயிரம் அமைப்பது.

சூத்திரம்

ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே

வரலாறு

பொ.யு. 19-ஆம் நூற்றாண்டில் ஏட்டுச் சுவடியாக இருந்த பழய நூல்களை அச்சுப் புத்தகமாக அச்சிட்ட அறிஞர்களும், புதிதாக நூல்களை இயற்றி பதிப்பித்தவர்களும், தம்முடன் பயின்றவர், நண்பர், ஆசிரியர், மாணவர்களிடமிருந்து சாற்றுக் கவிகளைப் பெற்றுத் தமது நூலில் அச்சிட்டனர். சாற்றுக் கவிகள் இல்லாத நூல்கள் அக்காலத்தில் மிகச்சில. சாற்றுக்கவி அச்சிடும் வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இருந்துவந்தது.

விளக்கம்

பாயிரம் வழங்குவோர் நூலாசிரியரின் ஆசிரியரும், அவருடன் பயின்றவரும், அவர் மாணாக்கரும் ஆகிய மூவரில் ஒருவராக இருப்பர். நூலுக்கு உரை எழுதும் உரையாசிரியரும் பாயிரம் கூறுவர். சாற்றுக் கவிகள் எல்லாம் செய்யுளாகவே இருந்தன.

பயன்கள்

  • சாற்றுக் கவிகளின் மூலம் அதன் நூல், ஆசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் பற்றி அறியலாம்.
  • சாற்றுக் கவி வழங்கியவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
  • ஒரே காலத்தில் இருந்த புலவர்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
  • சென்ற 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த நூல்களிலே உள்ள சாற்றுக் கவிகளை தொகுத்து அச்சிட்டால் புலவர்கள் வரலாறும், இலக்கியங்களின் வரலாறும், செய்திகளும் அறிய முடியும்
  • அந்தந்த நூல் வெளியிட்ட ஆசிரியர்களின் காலத்திலிருந்த புலவர்கள் பெயரையும் அவர்களின் தொழில் ஊரையும் தெரிந்து கொள்ளலாம்.

வேறு பெயர்கள்

  • சிறப்புப் பாயிரம்
  • சாத்துக் கவி
  • சார்த்துக்கவி

சாற்றுக்கவி நடை

அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் பதுமபந்த வெண்பாவால் சுந்தரமுதலியார் இசைப்பாடல்களுக்கு சாற்றுக்கவி பாடியுள்ளார்.

சோதிபதி பூதிச்தி சோதிமதி நீதிவிதி
சோதியிலை யென்னி லென்னத் தோன்றியுறை -நீதில்
மயிலைகற் சர்தர மாகலிஞன் செய்யுள்
வியன்முப் பழச்சலைக்கு மேல்.

சாற்றுகவிகள்

  • இராமலிங்க வள்ளலார்
  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  • கொட்டாம்பட்டிக் கருப்பையாப் பாவலர்
  • பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • தியாகராசச் செட்டியார்
  • உ.வே. சாமிநாதையர்
  • திரிசிரபுரம் மாதுருபூதம் பிள்ளை
  • சித்தாந் தரத்திநாகரம் அரன்வாயில் வேங்கடசுப்புப் பிள்ளை
  • திருநெல்வேலி ச. சுப்பிரமணிய பிள்ளை
  • ஸ்ரீவில்லிபுத்தூருக் கடுத்த புனல்வேலி அநந்தசுப்பையர்
  • திருத்தணிகை பெருமாளையர்
  • பெரும்புலவர் காஞ்சிபுரம் சபாபதி முதலிபார்
  • புரசை அட்டாவதானம் சபாபதி விசாகப்ப முதலியார்
  • திருக்கழுக்குன்றம் சிவஞான சுவாமிகள்
  • தொழுவூர் வேலாயுத முதலியார்
  • சென்னை சோதிடக் களஞ்சியம் சிற்றம்பல முதலியார்
  • காஞ்சிபுரம் இராமசாமி நாபுடு
  • திருமயிலை சண்முகம்பிள்ளை
  • தண்டலம் பாலசுந்தர முதலியார்
  • க.வ. திருவேங்கடநாயுடு
  • முத்தமிழ் சத்தாகரம் திருவோத்தூர் பாதுகவி
  • நரசிங்கபுரம் வீராச்சாமி முதலியார்
  • ஈக்காடு இரத்தினவேலு தூர் மதுரகவி - மாணிக்க முதலியார்
  • குன்றத் முதலியார்
  • தசாவதானம் - பேறை செகநாத தள்ளை
  • திருச்சிவபுரம் வேலாயுத முதலியார்
  • திருமயிலை செந்தில்வேல் முதலியார்
  • பூவை - வீரபத்திர முதலியார்
  • திருமயிலை முத்துக்கிருட்டிணமுதலியார்
  • பொன்னேரி சுந்தரம் பிள்ளை
  • திருமயிலை வெ. சுப்பராய முதலியார்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.