சாந்திநாதர்
சாந்திநாதர் சமண சமயத்தின் பதினாறாவது தீர்த்தங்கரர். சமண சமய சாத்திரங்களின்படி அனைத்து கர்மத்தளைகளிலிருந்து விடுபட்டு சித்த புருசரானவர்.
புராணம்
இக்சவாகு வம்சத்தில் ஹஸ்தினாபுரத்தில் மன்னர் விஸ்வசேனாவுக்கும் ராணி அசிராவுக்கும் ஆனி மாதம் தேய்பிறை பதின்மூன்றாம் நாள் சாந்திநாதர் பிறந்தார். அவர் தன் 25 வயதில் அரியணை ஏறினார். 25,000 ஆண்டுகளுக்கும் மேலாக அரியணையில் இருந்த பிறகு, அவர் ஒரு சமண துறவியாகி தவம் செய்தார். ஜைன நம்பிக்கைகளின்படி, தன் கர்மாவை அழித்து ஆன்ம விடுதலை அடைந்து ஒரு சித்தராக ஆனார்.
முந்தைய பிறப்புகள்
- அரசன் ஸ்ரீசேனன்
- உத்தர குருக்ஷேத்திரத்தில் யுகாலிகா
- சௌதர்ம சொர்க்கத்தில் தேவா
- அர்ககீர்த்தியின் இளவரசர் அமிததேஜா
- 10வது சொர்க்கமான பிரணத்தில் பரலோக தேவா (20 சாகர்கள் ஆயுட்காலம்)
- கிழக்கு மகாவிதேஹாவில் அபராஜித் பல்தேவா (ஆயுட்காலம் 84,00,000 பூர்வா)
- பரலோக இந்திரன் 12வது சொர்க்கத்தில் அச்யுதா (22 சாகர்கள் ஆயுட்காலம்)
- வஜ்ராயுத் சக்ரி, கிழக்கு மஹ்விதேஹாவில் தீர்த்தங்கரர் க்ஷேமனாகரரின் மகன்
- நவ்கிரைவாயக் சொர்க்கத்தில் பரலோக தேவதை
- தற்போது சிமந்தர் சுவாமிகள் நடமாடும் பகுதியில் கிழக்கு மகாவீதியில் தனரதரின் மகன் மேகராத்.
- சர்வார்த்த சித்த சொர்க்கத்தில் பரலோக தேவா (33 சாகர்கள் ஆயுட்காலம்)
அடையாளங்கள்
- உடல் நிறம்: பொன்னிறம்
- லாஞ்சனம்: மான்
- மரம்: நந்தியாவர்ட் மரம்
- உயரம்: 40 வில் (120 மீட்டர்)
- கை: 160
- முக்தியின் போது வயது: 1 லட்சம் ஆண்டுகள்
- முதல் உணவு: மந்திர்பூரின் மன்னர் சுமித்ரர் அளித்த கீர்
- தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 36 (சக்ரயுத்)
- யட்சன்: கெளர் தேவ்
- யட்சினி: மகாமானசி தேவி
இலக்கியம்
- ஆச்சார்யா அஜித்பிரபாசூரியின் சாந்திநாத சரித்திரம், 16-வது சமண தீர்த்தங்கரரான சாந்திநாதரின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த உரை யுனெஸ்கோவால் உலகளாவிய பொக்கிஷமாக அறிவிக்கப்பட்டது.
- 10-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீபொன்னாவால் எழுதப்பட்ட சாந்திபுராணம், கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- சாந்தியாஷ்டகா என்பது ஐந்தாம் நூற்றாண்டில் ஆச்சார்யா பூஜ்யபாதாவால் இயற்றப்பட்ட சாந்திநாதரைப் போற்றும் ஒரு பாடல்.
- ஏழாம் நூற்றாண்டில் நந்திசேனாவால் தொகுக்கப்பட்ட அஜிதசாந்தி, சாந்திநாதரையும் அஜிதநாதரையும் புகழ்கிறது.
- 15-ஆம் நூற்றாண்டில் முனிசுந்தரசூரி என்பவரால் சாந்திகாரா தொகுக்கப்பட்டது.
- 13 - 14-ஆம் நூற்றாண்டுகளில் மெருதுங்கரால் தொகுக்கப்பட்ட மகாபுருஷ சரித்திரம் சாந்திநாதரைப் பற்றி பேசுகிறது.
உருவப்படம்
சாந்திநாதர் வழக்கமாக உட்கார்ந்து அல்லது நின்று தியான நிலையில் சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு கீழே ஒரு மான் அல்லது மிருகத்தின் சின்னம் உள்ளது.
கோயில்கள்
- சாந்திநாத கோவில், கஜுராஹோ (யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்)
- பிரச்சின் பட மந்திர், ஹஸ்தினாபூர் - சாந்திநாதரின் பிறந்த இடம்
- சாந்திநாத் கோயில், தியோகர்
- சாந்திநாத பசாதி, ஜினநாதபுரா
- சாந்திநாத் ஜெயின் தீர்த்தம்
- சாந்திநாத கோவில், ஹலேபிடு - யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கான தற்காலிக பட்டியல்
- அஹர்ஜி ஜெயின் தீர்த்தம்
- சாந்திநாத் ஜெயின் கோவில், கோத்தாரா
- ஓடேகல் பசடி
- லெய்செஸ்டரில் உள்ள சாந்திநாத் ஜெயின் கோவில் (ஐரோப்பா மற்றும் மேற்கு உலகின் முதல் ஜெயின் கோவில்)
பிரம்மாண்டமான சிலைகள்
- 2016 இல், 54 அடி உயரம் கொண்ட சாந்திநாதரின் மிக உயரமான சிலை அஜ்மீரில் நிறுவப்பட்டது
- ஸ்ரீ மஹாவிர்ஜி, சாந்திநாத் ஜினாலயாவில் உள்ள 32-அடி சாந்திநாதரின் சிலை
- 31-அடி சாந்திநாத் சிலை ஹஸ்தினாபூர் பிரச்சின் படா மந்திரில்
- வாரங்கல், அக்கலய்யா குட்டாவில் உள்ள 30-அடி படம்
- போஜ்பூர் ஜெயின் கோயிலில் உள்ள 22.5-அடி சாந்திநாத் சிலை
- அஹர்ஜியில் 18-அடி சிலை
- ஹாலேபிடு, சாந்திநாத பசாதியில் உள்ள 18-அடி சிற்பம்
- நௌகாசா திகம்பர் ஜெயின் கோவிலில் உள்ள 17.5-அடி சிலை
- கஜுராஹோவில் உள்ள சாந்திநாத கோவிலில் உள்ள 15-அடி படம்
- சந்திரகிரி, சாந்திநாத் பசாதியின் உள்ளே 15-அடி படம்
- பஹுரிபந்தில் உள்ள 12.2-அடி சிலை, 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.