சாகித்ய அகாதெமி
அனைத்து இந்திய மொழிகளிலும் இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும் 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசால் சாகித்ய அகாடமி தோற்றுவிக்கப்பட்டது. இலக்கியப் படைப்புகளை இந்தியா முழுமைக்கும் அறிமுகம் செய்தல், இலக்கியம் மூலம் நாட்டின் கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்துதல், இந்திய மொழிகளுக்கிடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுதல் இவ்வமைப்பின் முக்கிய நோக்கம்.
சாகித்ய அகாடமியின் செயல்பாடுகள்
இந்திய மொழிகளுக்கிடையே இணைப்புப் பாலமாகச் செயல்படும் நோக்கத்தில், இந்திய அரசால், மார்ச் 12, 1954-ல், சாகித்ய அகாடமி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இலக்கியப் படைப்புகளை இந்தியா முழுமைக்கும் அறிமுகம் செய்தல், இலக்கியம் மூலம் நாட்டின் கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் இலக்கியம் மூலம் ஒருங்கிணைவை ஏற்படுத்துதல் இவ்வமைப்பின் நோக்கம்.
ஆண்டு தோறும் 24 இந்திய மொழிகளில், இலக்கியக் கூட்டங்கள், எழுத்தாளர்கள் சந்திப்பு, உரையாடல் நிகழ்வுகள் கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், நூல்கள் வெளியீடு, விருதளிப்பு போன்ற இலக்கியச் செயல்பாடுகளை சாகித்ய அகாடமி மேற்கொண்டு வருகிறது. இதுவரை 6000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
சிறந்த எழுத்தாளர்களை, டாக்டர் ஆனந்த் குமாரசாமி மற்றும் பிரேம்சந்த் ஆகியோரது நினைவு ஃபெலோஸ் மற்றும் கெளரவ ஃபெலோக்களாக (Fellows and Honorary Fellows) தேர்ந்தெடுத்துச் சிறப்பித்து வருகிறது. மொழி வள மேம்பாட்டிற்காக பெங்களூர், அகமதாபாத், கொல்கத்தா மற்றும் டெல்லியில் மொழிபெயர்ப்பு மையங்களையும், டெல்லியில் இந்திய இலக்கியக் காப்பகத்தையும் அமைத்து இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஷில்லாங்கில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழக வளாகத்தில் பழங்குடியினர் மற்றும் வாய்மொழி இலக்கியங்களை மேம்படுத்துவதற்கான சாகித்ய அகாடமியின் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
சாகித்ய அகாடமி விருதுகள்
இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் இருபத்து நான்கிலும் ஆண்டுதோறும் கீழ்காணும் விருதுகளை சாகித்ய அகாடமி நிறுவனம் வழங்கி வருகிறது.
சாகித்ய அகாடமி விருது
பாஷா சம்மான் விருது
மொழிபெயர்ப்பு விருது
பால் சாகித்ய புரஸ்கார்
யுவ புரஸ்கார்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.