சம்பவநாதர்
From Tamil Wiki
Revision as of 14:40, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
சம்பவநாதர் சமண சமயத்தின் மூன்றாவது தீர்த்தங்கரர்.
புராணம்
இக்சவாகு குல மன்னர் ஜிடாரிக்கும் அரசி சுசேனாவுக்கும் மகனாக சூரிய வம்சத்தில் சிராவஸ்தி நகரத்தில் பிறந்தவர் சம்பவநாதர். இவரது நினைவிடம் சிராவஸ்தி நகரத்தில் உள்ளது. ஆறு லட்சம் வருடம் உயிர் வாழ்ந்தார் எனவும், 400 வில் உயரம் கொண்டவர் என்றும் சமணர்கள் நம்புகின்றனர். சமண நூல் உத்தரபுராணத்தின் படி, சாம்பவநாதர் பிறப்பிலிருந்தே மூன்று வகையான அறிவைப் பெற்றிருந்தார்.
சிற்பத்தின் பண்புகள்
- நிறம்: தங்க நிறம்
- வாகனம்: குதிரை
- மரம்: சால்
- யட்சன்: பிரஜ்ஞப்தி
- யட்சினி: துரிதாரி
சம்பவநாதர் கோவில்
- ஷோபநாத் கோவில்: சம்பவநாதரின் பிறந்த இடம்
- குஜராத்தின் இடரில் உள்ள சாம்பநாதர் கோவில்
உசாத்துணை
✅Finalised Page