under review

சமண தீர்த்தங்கரர்கள்: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Je)
(Moved Category Stage markers to bottom and added References)
Line 46: Line 46:


{{ready for review}}
{{ready for review}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:10, 17 April 2022

24 சமண தீர்த்தங்கரர்கள்

சமண தீர்த்தங்கரர்கள் (சமணப் பெரியார்கள்) சமண சமயக் கொள்கைகளை உலகில் பரவச் செய்வதற்காகத் தோன்றியவர்கள். இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளனர். இனியும் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றுவர் என்பது சமண சமயத்தாரின் நம்பிக்கை.

தீர்த்தங்கரர் விளக்கம்

இறைவன் நிலையை பெற்றவர்கள், வழிபாட்டுக்குரியவர்கள், ஞான நிலையை அடைந்த மனிதர்கள், பிறவிப்பெருங்கடலைக் கடந்த ஞானி என்றும் சமண மதம் தீர்த்தங்கரர்கள் பற்றி கூறுகின்றது. இவர்கள் ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்களுடைய சிலைகளை தமிழ் கோவில்களில் வைத்து வழிபட்டனர்.

நம் 'அருகில் இருப்பவர்' என்ற பொருளில் அருகன் என்றூம் அழைப்பர். ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு, இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார் என்பது சமண மத நம்பிக்கை.

24 தீர்த்தங்கரர்கள்

சமண சமயத்தின் கொள்கைகளைப் பரவச் செய்ய இதுவரை 24 தீர்த்தங்கரர்களின் தோன்றியுள்ளனர்.

  • ஆதிபகவன் அல்லது விருஷப தேவர்
  • அஜிதநாதர்
  • சம்பவநாதர்
  • அபிநந்தனர்
  • சுமதிநாதர்
  • பதுமநாபர்
  • சுபார்சவ நாதர்
  • சந்திரப் பிரபர்
  • புஷ்ப தந்தர் அல்லது சுவிதிநாதர்
  • சீதளநாதர் அல்லது சித்தி பட்டராகர்
  • சீறியாம்ச நாதர்
  • வாசு பூஜ்யர்
  • விமலநாதர்
  • அநந்தநாதர் அல்லது அநந்தஜித் பட்டாரகர்
  • தருமநாதர்
  • சாந்திநாதர்
  • குந்துநாதர் அல்லது குந்து பட்டாரகர்
  • அரநாதர்
  • மல்லிநாதர்
  • முனிசுவர்த்தர்
  • நமிநாதர் அல்லது நமிபட்டாரகர்
  • நேமிநாதர் அல்லது அரிஷ்டநேமி
  • பார்சுவநாதர்
  • வர்த்தமான மகாவீரர்

தீர்த்தங்கரர் வழிபாடு

சமண சமயக் கடவுளான அருகக் கடவுள் போன்றே சமணர்கள் தீர்த்தங்கரர்களையும் தெய்வமாக வழிபடுகின்றனர். 24 தீர்த்தங்கரர்களில் முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களும் கற்பனைப் பெரியார்கள் என்றும் பார்சுவநாதர் மற்றும் வர்த்தமான மகாவீரர் ஆகிய இருவர் மட்டுமே உண்மையில் வாழ்ந்தவர்கள் என்ற கருத்தும் சமணார்களிடம் உண்டு.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.