சங்கர பண்டிதர்

From Tamil Wiki
Revision as of 12:33, 31 October 2022 by Ramya (talk | contribs)

சங்கர பண்டிதர் (1821-1891) ஈழத்து தமிழ் அறிஞர், சைவ அறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சங்கர பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் சுன்னுகம் என்னும் ஊரில், சிவகுருநாதருக்கு மகனாகப் பிறந்தார். நீர்வேலியில் வாழ்ந்தார். கந்தரோடை அப்பாப் பிள்ளை உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். வேதாரணியத்திலே சுவாமிநாத தேசிகரிடத்திற் சமக் கிருத வியாகரணம், தருக்கம், காவியம் ஆகியவற்றைக் கற்றார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சமஸ்கிருத பண்டிதர்களுள் சிறந்தவர் என குறிப்பிடப்படுகிறார். சிவப்பிரகாச பண்டிதர் இவரின் மகன். சபாபதி நாவலர் இவரின் நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

சங்கர பண்டிதர் சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி உரை, கிறிஸ்துமதகண்டனம், சிவதூஷண கண்டனம், அனுட்டான விதி போன்ற சைவ சமய நூல்களை எழுதினார்.

மாணவர்கள்
  • சுன்னகம் முருகேச பண்டிதர்
  • கீரிமலைச் சபாபதிக் குருக்கள்
  • சிவப்பிரகாச பண்டிதர்

நூல் பட்டியல்

  • சைவப்பிரகாசனம்
  • சத்த சங்கிரகம்
  • அகநிர்ணயத் தமிழுரை
  • சிவபூசையந்தாதி உரை
  • கிறிஸ்துமதகண்டனம்
  • சிவதூஷண கண்டனம்
  • அனுட்டான விதி
  • சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம்
  • பிரபந்தத்திரட்டு
  • பிராசாத சட்சுலோகித் தமிழுரை

உசாத்துணை