under review

க.வ. திருவேங்கட நாயுடு

From Tamil Wiki
Revision as of 20:10, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

To read the article in English: K.V. Thiruvenkata Naidu. ‎


க.வ. திருவேங்கட நாயுடு (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். இரட்டைமணிமாலை

முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

க.வ. திருவேங்கட நாயுடு சென்னையில் கெளரி குலத்தில் பிறந்தார். தண்டையார்பேட்டையில் வாழ்ந்து வந்தார். இளமைக்கல்வி முடித்து சிதம்பர ஈசானியமடம் இராமலிங்க அடிகளிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கல்லூரியில் ஆசிரியராகவும், இல்லத்தில் மாணவர்களுக்கு நூல்களை ஓதுதல் பணியும் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

உரையாசிரியர். இவரின் உரைச்சிறப்பு நால்வர் நான்மணிமாலைக்கு எழுதிய விரிவுரையில் காணலாம். வட திருமுல்லைவாயில் கொடியிடை அம்மைமீது இரட்டைமணிமாலை

பாடினார். மோசூர் முனிசாமி எழுதிய தொண்டை நாட்டுத் திருப்பதி தோத்திரக்கோவை நூலுக்கு சிறப்புப் பாயிரம் எழுதினார். சேந்தனாருடைய வரலாற்றை புராண முறையில் சேந்தநாயினார் புராணமாக எழுதினார்.

பாடல் நடை

இரட்டைமணிமாலை

ஆயுந்து றவியர்க் காரமு தாயடி யேன் தனக்கோர்
தாயுஞ் சிவமெனும் தாதையைக் காட்டுத் தனித்துணையும்
பாயும் வினைமுத லாமிருள் சீக்கும் பரிதியுமாம்
சாயும் பிறைதவழ் செஞ்சடை யான் பாங்கிற் சார்கொடியே

மறைவு

க.வ. திருவேங்கட நாயுடு, டிசம்பர் மாதம் 1909-ல் காலமானார்

நூல் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page