க.தா.செல்வராசகோபால்

From Tamil Wiki
Revision as of 02:55, 11 March 2022 by Tamizhkalai (talk | contribs)

ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால், 13 டிசம்பர், 1928 - 21 டிசம்பர் 2010)) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். ஆசிரியர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர்.

பிறப்பு,கல்வி

செல்வராசகோபால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் செட்டிப்பாளையத்தில் டிசம்பர் 13,1938 அன்று சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்தார். தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.

தொடக்கக்கல்வியைக் குருக்கள்மடம் மெதடிசுத மிசன் தமிழ்ப்பாடசாலையிலும் உயர் கல்வியினை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும்,மருதானை கலைநுட்பக் கல்லூரியிலும்,குடந்தையிலும்(தமிழகம்) பயின்றார்.தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர். இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் இவர்கள் கனடாவில் குடியேறினர்.

தனி வாழ்க்கை

வியற்றிஸ் பசுபதி அம்மையாரைரை மணந்தார். இதய மனோஹர்,இதய சந்திரா இதய ஜோதி, இதய அருள், இதய ராகினி என்ற ஐந்து மக்கள். இருவரும் ஆசிரியப்பணியைத் தொடர்ந்தனர். 30 வருடம் ஆசிரியப் பணி செய்து 1098ல் இனக் கலவரத்தின் போது கனடாவுக்குப் புலம் பெயர்ந்தனர்.