க.தா.செல்வராசகோபால்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) |
Tamizhkalai (talk | contribs) m (→இலக்கியப் பணி) |
||
Line 1: | Line 1: | ||
ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால், 13 டிசம்பர், 1928 - 21 டிசம்பர் 2010)) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர்,ஆசிரியர், இலக்கணம் மற்றும் நாடக ஆய்வாளர்.புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். தமிழில் முதன்முதலில் கணிப்பொறியைப் பயன்படுத்தி நூல் அச்சிட்டவர்.இருநூற்று ஐம்பதுக்கும் மேல் நூல்களைப் பதிப்பித்தவர். | |||
== பிறப்பு,கல்வி == | == பிறப்பு,கல்வி == | ||
Line 7: | Line 7: | ||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == | ||
வியற்றிஸ் பசுபதி அம்மையாரைரை மணந்தார். இதய | வியற்றிஸ் பசுபதி அம்மையாரைரை மணந்தார். இதய மனோகர்,இதய சந்திரா இதய ஜோதி, இதய அருள், இதய ராகினி என்ற ஐந்து மக்கள். இருவரும் ஆசிரியப்பணியைத் தொடர்ந்தனர். 30 வருடம் ஆசிரியப் பணி செய்து 1098ல் இனக் கலவரத்தின் போது கனடாவுக்குப் புலம் பெயர்ந்தனர். | ||
== இலக்கியப் பணி == | == இலக்கியப் பணி == | ||
ஆசிரியப்பயிற்சி மாணவராக இருந்தபொழுது இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழகேசரி, மின்னொளி, ஶ்ரீலங்கா | ஆசிரியப்பயிற்சி மாணவராக இருந்தபொழுது இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழகேசரி, மின்னொளி, ஶ்ரீலங்கா மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த தமிழன்,கல்கி,திங்கள்,ஆனந்தவிகடன்,கலைமகள் போன்றபத்திரிகைகளில் கதகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். 1954ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வானொலியில் சொற்பொழிவாற்றியிருக்கிறார். | ||
ஈழத்தில் தன் மனோகரா அச்சகம் மற்றும் கனடாவின் ரிஃப்ளக்ஸ் | ஈழத்தில் தன் மனோகரா அச்சகம் மற்றும் கனடாவின் ரிஃப்ளக்ஸ், ஜீவா அச்சகங்கள் மூலமாகப் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நாவலர்பெருமானின் வாழ்க்கைக் குறிப்புகள் (நடராசா, சற்குணம்), விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகள் (கா.சிவப்பிரகாசம்), கிழக்கின் பேரொளி புலவர்மணி ( ச.நவரத்தினம்),சிவகுமாரன் கதைகள். இவை தவிர ஈழத்து அறிஞர்கள் பலரின் நூல்களைத் தாமே பதிப்பித்துள்ளார். | ||
தன் அச்சகம் மூலம் கனடாவில் ''நிழல்'' என்னும் இதழை நடத்தினார். | |||
செல்வராசகோபால் தம்பதியினர் முதல்முதலில் கனடாவில் மொழிக் கல்வி அடிப்படையில் அனுமதி பெற்று தமிழ் கற்பித்தவர்கள் | |||
கனடாவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினை ஆரம்பித்தார். | |||
கனடாவில் தமிழ்த் திரைப்படவரலாற்றை 60 தொகுதிகளாக வெளியிட்டார் | |||
,தம் மக்களுடன் இணைந்து தமிழ்க்கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் வெளியிடப்பட்ட தமிழ்நூல் ''பெத்லேகம் கலம்பகம்(''1986) | |||
சுவாமி விபுலானந்தர் இயற்றிய மதங்க சூளாமணியின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட ''கூத்துநூல்விருத்தம்'' எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதியவர். | |||
தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ்நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக (2070 பக்கங்களில்) உருவாக்கியுள்ளார். | |||
== படைப்புகள் == | == படைப்புகள் == | ||
Line 50: | Line 47: | ||
கிரேக்கத்தின் ஆதி கவிஞரான ஹோமரின் இலியட், ஒடிசி (Iliad ,Odyssey)காப்பியங்களைத் தமிழில் பாட்டுவடிவில் மொழிபெயர்த்துள்ளார். ஒடிசி மொடிபெயர்ப்பு 8355 அடிகள் (2098 செய்யுள்கள்) கொண்டது | கிரேக்கத்தின் ஆதி கவிஞரான ஹோமரின் இலியட், ஒடிசி (Iliad ,Odyssey)காப்பியங்களைத் தமிழில் பாட்டுவடிவில் மொழிபெயர்த்துள்ளார். ஒடிசி மொடிபெயர்ப்பு 8355 அடிகள் (2098 செய்யுள்கள்) கொண்டது | ||
சோபோகிள்ஸ்(Sophocles) நாடகத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். | சோபோகிள்ஸ்(Sophocles) நாடகத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். |
Revision as of 06:11, 11 March 2022
ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால், 13 டிசம்பர், 1928 - 21 டிசம்பர் 2010)) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர்,ஆசிரியர், இலக்கணம் மற்றும் நாடக ஆய்வாளர்.புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். தமிழில் முதன்முதலில் கணிப்பொறியைப் பயன்படுத்தி நூல் அச்சிட்டவர்.இருநூற்று ஐம்பதுக்கும் மேல் நூல்களைப் பதிப்பித்தவர்.
பிறப்பு,கல்வி
செல்வராசகோபால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் செட்டிப்பாளையத்தில் டிசம்பர் 13,1938 அன்று சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்தார். தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.
தொடக்கக்கல்வியைக் குருக்கள்மடம் மெதடிசுத மிசன் தமிழ்ப்பாடசாலையிலும் உயர் கல்வியினை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும்,மருதானை கலைநுட்பக் கல்லூரியிலும்,குடந்தையிலும்(தமிழகம்) பயின்றார். ஓவியம். தட்டச்சு, சுருக்கெழுத்து, அச்சுக்கலை. ஓமியோ மருத்துவம் முதலானவற்றிலும் பயிற்சிபெற்றார். செல்வராசகோபாலனாரின் குடும்பம் தமிழறிவு பெற்ற குடும்பமாகும்.இவரின் பாட்டனார் புலவர் இ.வ.கணபதிப்பிள்ளை,பெரியதந்தை வரகவி சின்னவப் புலவர்,
தனி வாழ்க்கை
வியற்றிஸ் பசுபதி அம்மையாரைரை மணந்தார். இதய மனோகர்,இதய சந்திரா இதய ஜோதி, இதய அருள், இதய ராகினி என்ற ஐந்து மக்கள். இருவரும் ஆசிரியப்பணியைத் தொடர்ந்தனர். 30 வருடம் ஆசிரியப் பணி செய்து 1098ல் இனக் கலவரத்தின் போது கனடாவுக்குப் புலம் பெயர்ந்தனர்.
இலக்கியப் பணி
ஆசிரியப்பயிற்சி மாணவராக இருந்தபொழுது இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழகேசரி, மின்னொளி, ஶ்ரீலங்கா மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த தமிழன்,கல்கி,திங்கள்,ஆனந்தவிகடன்,கலைமகள் போன்றபத்திரிகைகளில் கதகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். 1954ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வானொலியில் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
ஈழத்தில் தன் மனோகரா அச்சகம் மற்றும் கனடாவின் ரிஃப்ளக்ஸ், ஜீவா அச்சகங்கள் மூலமாகப் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நாவலர்பெருமானின் வாழ்க்கைக் குறிப்புகள் (நடராசா, சற்குணம்), விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகள் (கா.சிவப்பிரகாசம்), கிழக்கின் பேரொளி புலவர்மணி ( ச.நவரத்தினம்),சிவகுமாரன் கதைகள். இவை தவிர ஈழத்து அறிஞர்கள் பலரின் நூல்களைத் தாமே பதிப்பித்துள்ளார்.
தன் அச்சகம் மூலம் கனடாவில் நிழல் என்னும் இதழை நடத்தினார்.
செல்வராசகோபால் தம்பதியினர் முதல்முதலில் கனடாவில் மொழிக் கல்வி அடிப்படையில் அனுமதி பெற்று தமிழ் கற்பித்தவர்கள்
கனடாவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினை ஆரம்பித்தார்.
கனடாவில் தமிழ்த் திரைப்படவரலாற்றை 60 தொகுதிகளாக வெளியிட்டார்
,தம் மக்களுடன் இணைந்து தமிழ்க்கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் வெளியிடப்பட்ட தமிழ்நூல் பெத்லேகம் கலம்பகம்(1986)
சுவாமி விபுலானந்தர் இயற்றிய மதங்க சூளாமணியின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட கூத்துநூல்விருத்தம் எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதியவர்.
தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ்நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக (2070 பக்கங்களில்) உருவாக்கியுள்ளார்.
படைப்புகள்
நாடகங்கள்
- கூத்தர் வெண்பா,
- கூத்தர் விருத்தம்,
- கூத்தர் குறள்,
- கூத்தர் அகவல்,
- கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு,
- கூத்துக்கலைத் திரவியம்,
- வடமோடி கூத்து இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும்,
- கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன்,
- தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும்,
- கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை,
- இரு பாங்குக் கூத்துக்கலைஞன் எசு.ஈ.கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும்,
- மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை
மொழிபெயர்ப்புகள்
கிரேக்கத்தின் ஆதி கவிஞரான ஹோமரின் இலியட், ஒடிசி (Iliad ,Odyssey)காப்பியங்களைத் தமிழில் பாட்டுவடிவில் மொழிபெயர்த்துள்ளார். ஒடிசி மொடிபெயர்ப்பு 8355 அடிகள் (2098 செய்யுள்கள்) கொண்டது
சோபோகிள்ஸ்(Sophocles) நாடகத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஆய்வு நூல்கள்
- ஐங்குறுநூற்று அரங்கம்,
- சூளாமணித் தெளிவு,
- கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம்,
- நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக்கண்ணோட்டம்,
- சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்,
- பெருங்கதை ஆய்வுநோக்கு,
- வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
பிற நூல்கள்
இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும்,உலகளவில் தமிழ்ப்பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார்.
தமிழ்த் திரைப்படக்களஞ்சியம் அறுபது தொகுதிகளாக உருவாக்கியுள்ளார்.