being created

கௌதம நீலாம்பரன்: Difference between revisions

From Tamil Wiki
(Para Added, Image Added)
 
(Para Added)
Line 1: Line 1:
[[File:Gouthama Neelambaran.jpg|thumb|கௌதம நீலாம்பரன்]]
[[File:Gouthama Neelambaran.jpg|thumb|கௌதம நீலாம்பரன்]]
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர் என தமிழ் இலக்கியப் பரப்பில் பல களங்களில் செயல்பட்டவர் கௌதம நீலாம்பரன். (கைலாசநாதன்; பிறப்பு: ஜூன் 14, 1948; இறப்பு: செப்டம்பர் 14, 2015) பொது வாசிப்புக்குரிய நாவல்கள் பலவற்றை எழுதியவர். வரலாற்று நாவல்களை அதிகம் எழுதியிருக்கிறார். தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர் என தமிழ் இலக்கியப் பரப்பில் பல களங்களில் செயல்பட்டவர் கௌதம நீலாம்பரன். (கைலாசநாதன்; பிறப்பு: ஜூன் 14, 1948; இறப்பு: செப்டம்பர் 14, 2015) பொது வாசிப்புக்குரிய நாவல்கள் பலவற்றை எழுதியவர். வரலாற்று நாவல்களை அதிகம் எழுதியிருக்கிறார். தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கௌதம நீலாம்பரன், ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல் என்ற கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாசநாதன். அவ்வூரில் பள்ளிக் கல்வி பயின்றார். நாடக ஆர்வத்தால் வீட்டிலிருந்து வெளியேறி,  நவாப் ராஜமாணிக்க நாடகக் குழுவில் இணைந்தார். அங்கு சில வேடங்களில் நடித்து நடிப்புப் பயிற்சி பெற்றார்.  
கௌதம நீலாம்பரன், ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல் என்ற கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாசநாதன். அவ்வூரில் பள்ளிக் கல்வி பயின்றார். நாடக ஆர்வத்தால் வீட்டிலிருந்து வெளியேறி,  நவாப் ராஜமாணிக்க நாடகக் குழுவில் இணைந்தார். அங்கு சில வேடங்களில் நடித்து நடிப்புப் பயிற்சி பெற்றார்.  
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
கௌதம நீலாம்பரன், திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 1965-ல், சென்னைக்கு வந்தார். நடிக்க வாய்ப்புகள் அமையாததால் ஹோட்டல் சப்ளையர், பழங்கள் விற்பனையாளர், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்பனை என்று பல தொழில்களை மேற்கொண்டார். நண்பர்களின் அறைகளில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார். நாளடைவில் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
கௌதம நீலாம்பரன், திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 1965-ல், சென்னைக்கு வந்தார். நடிக்க வாய்ப்புகள் அமையாததால் ஹோட்டல் சப்ளையர், பழங்கள் விற்பனையாளர், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்பனை என்று பல தொழில்களை மேற்கொண்டார். நண்பர்களின் அறைகளில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார். நாளடைவில் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
== இலக்கிய வாழ்க்கை ==


== இலக்கிய வாழ்க்கை ==
தனக்கு அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் வாடகை நூலகங்கள் மூலம் நூல்களை எடுத்து வாசித்தார் கௌதம நீலாம்பரன். கல்கி, நா.பா, மு.வ., அகிலன், சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், ஜாவர் சீதாராமன், மீ.ப.சோமு போன்றோரது நூல்களைத் தொடர்ந்து வாசித்ததில் எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
 
முதல் சிறுகதை, ‘புத்தரின் புன்னகை’, 1970-ல், சுதேசமித்திரன் நாளிதழின் வாரப் பதிப்பில் வெளியானது. அக்பர் - தான்சேன் பற்றிய சரித்திரக் கதையான இவரது இரண்டாவது  சிறுகதை ‘கீதவெள்ளம்’ கலைமகள் இதழில் வெளியானது. நாளடைவில் சமூகக் கதைகளோடு சரித்திரக் கதைகளும் எழுத ஆரம்பித்தார்.
 
முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் ‘புத்தர் பிரான்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. கௌதம நீலாம்பரனின் படைப்புகள் தமிழின் அனைத்து முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. மலேசிய நாட்டின் வானம்பாடி இதழிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
 
சிறுகதைகள், கவிதை, கட்டுரை, நாடகங்கள் என 65க்கும் மேற்பட்ட நூல்களை கௌதம நீலாம்பரன் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சரித்திரச் சிறுகதைகளும், சமூகச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாக "சரித்திரமும் சமூகமும்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.


== இதழியல் வாழ்க்கை ==
நா.பார்த்தசாரதியை நேரில் சந்தித்தார் கௌதம நீலாம்பரன். நீலாம்பரனை ‘தீபம்’ இதழுக்கு உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் நா.பா. கௌதம நீலாம்பரன், சுமார் பத்தாண்டு காலம் தீபத்தில் பணிபுரிந்தார். அது அவருக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரது அறிமுகத்தையும் நட்பையும் பெற்றுத் தந்தது.


தீபத்திற்குப் பின், கி.வா.ஜவின் பரிந்துரையின் பேரில் இதயம் பேசுகிறது இதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இதயம் பேசுகிறது இதழில்  இவர் எழுதிய ‘ஈழ வேந்தன் சங்கிலி’ என்ற வரலாற்றுத் தொடர்  பரவலான வாசக வரவேற்பைப் பெற்றது. இதயம் பேசுகிறது இதழைத் தொடர்ந்து குங்குமம், முத்தாரம், குங்குமச் சிமிழ் என பல பிரபல இதழ்களில் பணியாற்றினார். பின் முழு நேர சுதந்திர எழுத்தாளராக இயங்கினார்.


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:47, 6 August 2022

கௌதம நீலாம்பரன்

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர் என தமிழ் இலக்கியப் பரப்பில் பல களங்களில் செயல்பட்டவர் கௌதம நீலாம்பரன். (கைலாசநாதன்; பிறப்பு: ஜூன் 14, 1948; இறப்பு: செப்டம்பர் 14, 2015) பொது வாசிப்புக்குரிய நாவல்கள் பலவற்றை எழுதியவர். வரலாற்று நாவல்களை அதிகம் எழுதியிருக்கிறார். தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கௌதம நீலாம்பரன், ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல் என்ற கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாசநாதன். அவ்வூரில் பள்ளிக் கல்வி பயின்றார். நாடக ஆர்வத்தால் வீட்டிலிருந்து வெளியேறி,  நவாப் ராஜமாணிக்க நாடகக் குழுவில் இணைந்தார். அங்கு சில வேடங்களில் நடித்து நடிப்புப் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

கௌதம நீலாம்பரன், திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 1965-ல், சென்னைக்கு வந்தார். நடிக்க வாய்ப்புகள் அமையாததால் ஹோட்டல் சப்ளையர், பழங்கள் விற்பனையாளர், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்பனை என்று பல தொழில்களை மேற்கொண்டார். நண்பர்களின் அறைகளில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார். நாளடைவில் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இலக்கிய வாழ்க்கை

தனக்கு அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் வாடகை நூலகங்கள் மூலம் நூல்களை எடுத்து வாசித்தார் கௌதம நீலாம்பரன். கல்கி, நா.பா, மு.வ., அகிலன், சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், ஜாவர் சீதாராமன், மீ.ப.சோமு போன்றோரது நூல்களைத் தொடர்ந்து வாசித்ததில் எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

முதல் சிறுகதை, ‘புத்தரின் புன்னகை’, 1970-ல், சுதேசமித்திரன் நாளிதழின் வாரப் பதிப்பில் வெளியானது. அக்பர் - தான்சேன் பற்றிய சரித்திரக் கதையான இவரது இரண்டாவது  சிறுகதை ‘கீதவெள்ளம்’ கலைமகள் இதழில் வெளியானது. நாளடைவில் சமூகக் கதைகளோடு சரித்திரக் கதைகளும் எழுத ஆரம்பித்தார்.

முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் ‘புத்தர் பிரான்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. கௌதம நீலாம்பரனின் படைப்புகள் தமிழின் அனைத்து முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. மலேசிய நாட்டின் வானம்பாடி இதழிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

சிறுகதைகள், கவிதை, கட்டுரை, நாடகங்கள் என 65க்கும் மேற்பட்ட நூல்களை கௌதம நீலாம்பரன் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சரித்திரச் சிறுகதைகளும், சமூகச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாக "சரித்திரமும் சமூகமும்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

இதழியல் வாழ்க்கை

நா.பார்த்தசாரதியை நேரில் சந்தித்தார் கௌதம நீலாம்பரன். நீலாம்பரனை ‘தீபம்’ இதழுக்கு உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் நா.பா. கௌதம நீலாம்பரன், சுமார் பத்தாண்டு காலம் தீபத்தில் பணிபுரிந்தார். அது அவருக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரது அறிமுகத்தையும் நட்பையும் பெற்றுத் தந்தது.

தீபத்திற்குப் பின், கி.வா.ஜவின் பரிந்துரையின் பேரில் இதயம் பேசுகிறது இதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இதயம் பேசுகிறது இதழில்  இவர் எழுதிய ‘ஈழ வேந்தன் சங்கிலி’ என்ற வரலாற்றுத் தொடர்  பரவலான வாசக வரவேற்பைப் பெற்றது. இதயம் பேசுகிறது இதழைத் தொடர்ந்து குங்குமம், முத்தாரம், குங்குமச் சிமிழ் என பல பிரபல இதழ்களில் பணியாற்றினார். பின் முழு நேர சுதந்திர எழுத்தாளராக இயங்கினார்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.