குமரகுருபரன் (கவிஞர்): Difference between revisions
(Created page with "Under progress Thangapandiyan Category:Being Created") |
mNo edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Image8.png|thumb|198x198px|குமரகுருபரன் (1974 - 2016) ]] | |||
குமரகுருபரன் (ஜூன் 10, 1974 - ஜூன் 19, 2016) கால்நடை மருத்துவர், கவிஞர், ஊடகவியலாளர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர். | |||
== பிறப்பு, கல்வி == | |||
குமரகுருபரன் திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரம் கிராமத்தில் ஜூன் 10, 1974ல் பிறந்தார். தந்தை ஜெயராமன், உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர். தாய் குருப்ரசாதவல்லி, இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியர். பெற்றோர்களின் தமிழ்ப்பற்று காரணமாக குமரகுருபரன் என பெயரிட்டனர். ராஜபாளையத்தில் பள்ளிக்கல்வியை முடித்தார். மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பயின்ற குமரகுருபரன் பின் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை கால்நடை மருத்துவம் படித்தார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
அந்திமழை இளங்கோவன் நவீனத் தமிழ் இலக்கியத்தை குமரகுருபரனுக்கு அறிமுகப்படுத்தினார். குமரகுருபரன் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் ’அந்திமழை’ என்ற மாணவர் இதழின் ஆசிரியராக இருந்தவர். அதற்காக ஆனந்த விகடனின் 'சிறந்த கல்லூரி இதழ்' களுக்கான போட்டியில் சிறந்த மாணவ ஆசிரியர் விருதைப் பெற்றவர். இந்த இதழ்தான் இப்போது ‘அந்திமழை’ என்ற மாதாந்திர இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ஆனந்த விகடனின் இணைப்பு இதழாக வெளிவந்த அந்திமழை புத்தகத்தில் குமரகுருபரனின் முதல் கவிதை வெளியானது. | |||
பட்டப்படிப்பு முடிந்ததும் முழு நேர பத்திரிகையாளரானார். குமுதம் ஸ்பெஷல் புத்தகத்தின் ஆசிரியராகவும், விண் நாயகன் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். குமுதத்தில் பல கட்டுரைககள், தொடர்களை எழுதியுள்ளார். "பயணிகள் கவனிக்கவும்" தொடர் குமுதத்தில் வெளி வந்தது. பின்னர் தினமலரின் வாரமலர், சிறுவர் மலர், பெண்கள் மலர் உள்ளிட்ட எட்டு இணைப்பு புத்தகங்களுக்கு ஆசிரியாக பணியாற்றினார். தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் தயாரித்து அளிக்கும் Media 4 U நிறுவனத்தை நடத்திவந்தார். பிறகு எல்லாவற்றிலும் இருந்து வெளியேறி முழுநேர எழுத்தாளரானார். | |||
[[File:Image9.png|thumb]] | |||
== இலக்கிய அழகியல் == | |||
குமரகுருபரனின் கவிதையை எழுத்தாளர் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்கள் பத்தியில் அறிமுகப்படுத்தியுள்ளார். ‘மீறல்களின் கனவு’என ’இன்னொருவனின் கனவு’ புத்தகத்திற்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் அணிந்துரையில் மீண்டும் மீண்டும் மீறல்களைச்சார்ந்து பொதுச்சினிமா சென்றுகொண்டிருப்பதற்கான ஆவணமாகவெ அமைந்திருக்கும் நூல் இது என குறிப்பிடுகிறார். | |||
குமரகுருபரனை தான் ஒரு கவிஞராகக் கருதுமளவுக்கு அவர் கவிதைகள் இடம் தருபவை அல்ல லக்ஷ்மி மணிவண்ணன் (கவிஞர்) கூறியிருக்கிறார். ஆனால், குமரகுருபனின் கவிதைகள் நவீனத்தமிழில் அபூர்வமாக மொழியால் கலைக்கப்பட்ட சித்தம் கவிதையாகி வெளிவருவது போன்றது என்றும். பிரமிள், தேவதேவன், ஆத்மாநாம், அபி, சு.வில்வரத்தினம் போன்ற சில விதிவிலக்குகளின் ஆக்கங்களின் சிறிய பட்டியலில் இடம்பெறும் கவிதைகளைக் கொண்டது குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ கவிதை நூல் என்றும் ஜெயமோகன் கூறுகிறார். | |||
[[File:Image10.png|thumb|202x202px]] | |||
== நூல்பட்டியல் == | |||
=== கவிதை நூல்கள் === | |||
ஞானம் நுரைக்கும் போத்தல் (2014 - ஆதிரை பதிப்பகம்) | |||
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது (2015 - உயிர்மை பதிப்பகம்) | |||
[[File:Image11.png|thumb|252x252px]] | |||
=== கட்டுரைத்தொகுப்பு === | |||
இன்னொருவனின் கனவு (உலக சினிமாக்கள் பற்றிய தொகுப்பு. 2014 அந்திமழை வெளியீடு) | |||
பயணிகள் கவனிக்கவும் (பயணக் கட்டுரை, குமுதம் வெளியீடு) | |||
=== சிறுகதைகள் === | |||
பேரரசரின் கோபம் (2014) | |||
மூன்று பெக்குகளும் நான்கு இட்லிகளும் (2014) | |||
== விருதுகள் == | |||
* கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் (பேராசிரியர் மயில்வாகனன் நினைவாக) வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான விருது - 2015. ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற கவிதைத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டது. | |||
* 'ஞானம் நுரைக்கும் போத்தல்' (2015) புத்தகத்திற்கு சிறந்த முதல் கவிதைத் தொகுப்புக்கான நாகர்கோயில் நெய்தல் அமைப்பின் ராஜமார்த்தாண்டன் விருது - 2015 (குமரகுருபரன் இதனை வாங்க மறுத்து விட்டார்). | |||
== குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது == | |||
குமரகுருபரனின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட விருது குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது. இளம் கவிஞர்களுக்குரிய விருதாக 2017ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் கவிதா சொர்ணவல்லி ஆகியோரால் தொடங்கப்பட்டது. பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாய். 2017ல் முதல் விருது கவிஞர் சபரிநாதன் பெற்றார். பிறகு கண்டராதித்தன் (2018), ச.துரை (2019), வேணு வேட்ராயன் (2020), மதார் (2021) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. | |||
== மறைவு == | |||
குமரகுருபரன் தனது 42-வது வயதில், ஜூன் 19, 2016 ல் சென்னையில் மாரடைப்பால் காலமானார். | |||
== உசாத்துணை == | |||
* [https://www.facebook.com/jkbpoetry குமரகுருபரன் கவிதைகள்] | |||
* [https://kumaraasambavam-kumaragurubaran.blogspot.com/?view=timeslide குமாரசம்பவம் - குமரகுருபரன் வலைப்பூ] | |||
* [https://www.jeyamohan.in/44681/ மீறல்களின் கனவு - ஜெயமோகன்] | |||
* [https://www.jeyamohan.in/62687/ வலியிலிருந்து தப்ப முடியாத தீவு - ஜெயமோகன்] | |||
[[Category:Being Created]] | [[Category:Being Created]] |
Revision as of 15:44, 10 February 2022
குமரகுருபரன் (ஜூன் 10, 1974 - ஜூன் 19, 2016) கால்நடை மருத்துவர், கவிஞர், ஊடகவியலாளர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
குமரகுருபரன் திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரம் கிராமத்தில் ஜூன் 10, 1974ல் பிறந்தார். தந்தை ஜெயராமன், உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர். தாய் குருப்ரசாதவல்லி, இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியர். பெற்றோர்களின் தமிழ்ப்பற்று காரணமாக குமரகுருபரன் என பெயரிட்டனர். ராஜபாளையத்தில் பள்ளிக்கல்வியை முடித்தார். மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பயின்ற குமரகுருபரன் பின் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை கால்நடை மருத்துவம் படித்தார்.
இலக்கிய வாழ்க்கை
அந்திமழை இளங்கோவன் நவீனத் தமிழ் இலக்கியத்தை குமரகுருபரனுக்கு அறிமுகப்படுத்தினார். குமரகுருபரன் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் ’அந்திமழை’ என்ற மாணவர் இதழின் ஆசிரியராக இருந்தவர். அதற்காக ஆனந்த விகடனின் 'சிறந்த கல்லூரி இதழ்' களுக்கான போட்டியில் சிறந்த மாணவ ஆசிரியர் விருதைப் பெற்றவர். இந்த இதழ்தான் இப்போது ‘அந்திமழை’ என்ற மாதாந்திர இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ஆனந்த விகடனின் இணைப்பு இதழாக வெளிவந்த அந்திமழை புத்தகத்தில் குமரகுருபரனின் முதல் கவிதை வெளியானது.
பட்டப்படிப்பு முடிந்ததும் முழு நேர பத்திரிகையாளரானார். குமுதம் ஸ்பெஷல் புத்தகத்தின் ஆசிரியராகவும், விண் நாயகன் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். குமுதத்தில் பல கட்டுரைககள், தொடர்களை எழுதியுள்ளார். "பயணிகள் கவனிக்கவும்" தொடர் குமுதத்தில் வெளி வந்தது. பின்னர் தினமலரின் வாரமலர், சிறுவர் மலர், பெண்கள் மலர் உள்ளிட்ட எட்டு இணைப்பு புத்தகங்களுக்கு ஆசிரியாக பணியாற்றினார். தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் தயாரித்து அளிக்கும் Media 4 U நிறுவனத்தை நடத்திவந்தார். பிறகு எல்லாவற்றிலும் இருந்து வெளியேறி முழுநேர எழுத்தாளரானார்.
இலக்கிய அழகியல்
குமரகுருபரனின் கவிதையை எழுத்தாளர் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்கள் பத்தியில் அறிமுகப்படுத்தியுள்ளார். ‘மீறல்களின் கனவு’என ’இன்னொருவனின் கனவு’ புத்தகத்திற்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் அணிந்துரையில் மீண்டும் மீண்டும் மீறல்களைச்சார்ந்து பொதுச்சினிமா சென்றுகொண்டிருப்பதற்கான ஆவணமாகவெ அமைந்திருக்கும் நூல் இது என குறிப்பிடுகிறார்.
குமரகுருபரனை தான் ஒரு கவிஞராகக் கருதுமளவுக்கு அவர் கவிதைகள் இடம் தருபவை அல்ல லக்ஷ்மி மணிவண்ணன் (கவிஞர்) கூறியிருக்கிறார். ஆனால், குமரகுருபனின் கவிதைகள் நவீனத்தமிழில் அபூர்வமாக மொழியால் கலைக்கப்பட்ட சித்தம் கவிதையாகி வெளிவருவது போன்றது என்றும். பிரமிள், தேவதேவன், ஆத்மாநாம், அபி, சு.வில்வரத்தினம் போன்ற சில விதிவிலக்குகளின் ஆக்கங்களின் சிறிய பட்டியலில் இடம்பெறும் கவிதைகளைக் கொண்டது குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ கவிதை நூல் என்றும் ஜெயமோகன் கூறுகிறார்.
நூல்பட்டியல்
கவிதை நூல்கள்
ஞானம் நுரைக்கும் போத்தல் (2014 - ஆதிரை பதிப்பகம்)
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது (2015 - உயிர்மை பதிப்பகம்)
கட்டுரைத்தொகுப்பு
இன்னொருவனின் கனவு (உலக சினிமாக்கள் பற்றிய தொகுப்பு. 2014 அந்திமழை வெளியீடு)
பயணிகள் கவனிக்கவும் (பயணக் கட்டுரை, குமுதம் வெளியீடு)
சிறுகதைகள்
பேரரசரின் கோபம் (2014)
மூன்று பெக்குகளும் நான்கு இட்லிகளும் (2014)
விருதுகள்
- கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் (பேராசிரியர் மயில்வாகனன் நினைவாக) வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான விருது - 2015. ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற கவிதைத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டது.
- 'ஞானம் நுரைக்கும் போத்தல்' (2015) புத்தகத்திற்கு சிறந்த முதல் கவிதைத் தொகுப்புக்கான நாகர்கோயில் நெய்தல் அமைப்பின் ராஜமார்த்தாண்டன் விருது - 2015 (குமரகுருபரன் இதனை வாங்க மறுத்து விட்டார்).
குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது
குமரகுருபரனின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட விருது குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது. இளம் கவிஞர்களுக்குரிய விருதாக 2017ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் கவிதா சொர்ணவல்லி ஆகியோரால் தொடங்கப்பட்டது. பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாய். 2017ல் முதல் விருது கவிஞர் சபரிநாதன் பெற்றார். பிறகு கண்டராதித்தன் (2018), ச.துரை (2019), வேணு வேட்ராயன் (2020), மதார் (2021) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மறைவு
குமரகுருபரன் தனது 42-வது வயதில், ஜூன் 19, 2016 ல் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.