being created

குட்டி ரேவதி

From Tamil Wiki
Revision as of 10:28, 4 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "குட்டி ரேவதி எழுத்தாளர் 1974 == வாழ்க்கைக் குறிப்பு == குட்டி ரேவதி 1974-இல் சுயம்புலிங்கம், இணையருக்குப் பிறந்தார். சித்த மருத்துவர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், பெண்ணிய ஆர்வல...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குட்டி ரேவதி எழுத்தாளர் 1974

வாழ்க்கைக் குறிப்பு

குட்டி ரேவதி 1974-இல் சுயம்புலிங்கம், இணையருக்குப் பிறந்தார்.

சித்த மருத்துவர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், பெண்ணிய ஆர்வலர்

இவர் மூன்று கவிதை நுால்களை வெளியிட்டுள்ளார். பெண்களுக்கான இலக்கிய காலாண்டு இதழான பணிக்குடம் என்ற முதல் தமிழ் பெண்ணிய இதழின் ஆசிரியராகவும் உள்ளார். இவ்விதழில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே அதிகம் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. பல இலக்கிய சந்திப்புகள் மற்றும் சக மாணவர்களின் கவிதைத் தொகுப்புகளை மதிப்பாய்வு செய்தபின்னரே தனது சொந்த படைப்புகளில் சிலவற்றை குட்டி ரேவதி உருவாக்கத் தொடங்கினார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தான் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தான் பெண்ணுடலை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச் செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர். சிறகு என்ற ஒரு திரைப்படத்தையும் குட்டி ரேவதி இயக்கியுள்ளார்.

இவர் தனது சக மாணவர்களின் கவிதைத் தொகுப்புகள் தொடர்பான திறனாய்வு இலக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இவர் தனது சுய படைப்புகள் குறித்தும் பணிகளைத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு உலகின் மிகப் பழமையான மருத்துவ முறையாகவும், தமிழ்நாட்டைத் தாயகமாகவும் கொண்ட சித்த மருத்துவத்தைப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். அவர் சென்னையில் உள்ள மெட்ராசு வளர்ச்சிசார் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் சார்ந்த மானிடவியலில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பை மேற்கொண்டார். இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார். சாகித்ய அகாதெமி அமைப்பினரால் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார். இவர் சமகாலத்திய தமிழ் கவிஞராக இருந்து கருத்து முரண்பாடுகளைக் கொண்ட, வாதத்துக்கிடமான பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.


இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இவரே இந்த காலாண்டு இலக்கிய பத்திரிக்கையின் தொகுப்பாசிரியர் ஆவார். இதுவே தமிழகத்தின் முதல் பெண்ணிய செய்தி இதழாகும்.

பள்ளிப்படிப்பிற்குப் பிறகு உலகின் மிகப் பழமையான மருத்துவ முறையாகவும், தமிழ்நாட்டைத் தாயகமாகவும் கொண்ட சித்த மருத்துவத்தைப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். அவர் சென்னையில் உள்ள மெட்ராசு வளர்ச்சிசார் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் சார்ந்த மானிடவியலில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பை மேற்கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

இரண்டாயிரத்துக்குப் பிறகு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட பெண் கவிஞர்களுள் குட்டிரேவதி முக்கியமானவராக. இவரது கவிதைகள் நவீன கவிதையின் எல்லையை விரிவாக்கின; கவிதைகளைத் தொடர்ந்து ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ‘மீமொழி’, ‘இயக்கம்’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘அழியாச் சொல்’ என்ற நாவலும் வெளியாகியுள்ளது. இவர் ‘பனிக்குடம்’ என்ற சிற்றிதழைச் சிலகாலம் நடத்தினார். பனிக்குடம் மூலமாகச் சில சிரத்தையான நூல்களையும் வெளி­யிட்டுள்ளார். திரைத்துறை சார்ந்த பங்களிப்பையும் தொடர்ந்து செய்து வருகிறார். சித்த மருத்துவத்தில் ஆய்வுசெய்தவர். இலக்கியத்திலும் கலையிலும் பெண்களுக்கென தனித்த மொழியை உருவாக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

இலக்கிய இடம்

குட்டிரேவதி சிறுகதைகளின் காலகட்டத்தை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். பெண்களின் புறக்கணிக்கப்பட்ட வெளியை உள்முகமாகப் பேசுபவை குட்டிரேவதியின் தொடக்ககாலச் சிறுகதைகள். பெண்கள்தாம் பெரும்பாலும் கதைகளை நகர்த்துகிறார்கள். சிறுகதை வடிவத்தைக் கலைத்துப்போட்டுத் தனக்கென வடிவம் தேடும் முயற்சிகளாக இக்கதைகள் இருக்கின்றன.

விருதுகள்

இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார். சாகித்ய அகாதெமி அமைப்பினரால் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார்.

நூல்கள் பட்டியல்

கவிதைத் தொகுப்பு

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000) முலைகள் (2002) தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003) உடலின் கதவு (2006) யானுமிட்ட தீ (2010) மாமத யானை (2011) இடிந்த கரை (2012) அகவன் மகள் (2013) காலவேக மதயானை (2016) அகமுகம் (2018)

சிறுகதை

நிறைய அறைகள் உள்ள வீடு , முதல் பதிப்பு (2013), பாதரசம் பதிப்பகம்

கட்டுரை

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009) நிழல் வலைக்கண்ணிகள் (2011) ஆண்களும் மையப்புனைவைச் சிதைத்தபிரதிகள் (2011)

உசாத்துணை

https://tamil.filmibeat.com/celebs/kutti-revathi/biography.html



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.