|
|
Line 1: |
Line 1: |
| This page is being created by Ka. Siva | | This page is being created by Ka. Siva |
| [[File:Kavya 1 (1).jpg|thumb|காவ்யா]]
| |
| சு. சண்முகசுந்தரம், (பிறப்பு: 1949, டிசம்பர் 30 ) தமிழ்ப் பேராசிரியர், நூல் வெளியீட்டாளர் மற்றும் எழுத்தாளர். இவரது பதிப்பகப் பெயரோடு இணைத்து காவ்யா சண்முகசுந்தரம் எனவும் அழைக்கப்படுகிறார்.
| |
| == பிறப்பு மற்றும் கல்வி ==
| |
| சு. சண்முகசுந்தரம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கால்கரை எனும் கிராமத்தில் 1949- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30- ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் வெ.சுடலைமுத்துத் தேவர் மற்றும் இசக்கியம்மாள். சு. சண்முகசுந்தரம் கால்கரை ஆரம்பப் பள்ளியிலும், வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-ல் “திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். 1978 முதல் பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு, செம்மொழி நிறுவனம் ஆகியவற்றில் நான்கு ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார்.
| |
| [[File:Naatupura Ilakiya varalaru.jpg|thumb|நாட்டுப்புற இலக்கிய வரலாறு]]
| |
| சு. சண்முகசுந்தரத்தின் மனைவி முத்துலெட்சுமி. இவர்களுக்கு முத்துக்குமார் என்ற மகனும் காவ்யா என்ற மகளும் உள்ளனர். சு. சண்முகசுந்தரம் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
| |
| == தமிழ்ப் பணி ==
| |
| [[File:Naatupura Deivangal Kalanjiyam.jpg|thumb|நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம்]]
| |
| சு. சண்முகசுந்தரம், பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசியராகப் பணியில் சேர்ந்து 2006 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார். சு. சண்முகசுந்தரம், செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரை முதுநிலை ஆய்வாளராக “நாட்டுப்புற அரங்கியல்” பற்றியும், 2008-2009 -ஆம் ஆண்டுகளில் “காலந்தோறும் கண்ணகி கதைகள்” என்ற தலைப்பில் சிற்றாய்வும், 2008 முதல் 2011- ஆம் ஆண்டு வரை 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' என்ற தலைப்பில் பேராய்வும் செய்தார்.
| |
| == எழுத்துப் பணி ==
| |
| சு. சண்முகசுந்தரம், 20 நூல்களை எழுதியுள்ளார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளும், ஐந்து நாவல்களும், 25 ஆய்வு நூல்களும், தமிழ்த் திரைப்படம், தமிழ் இலக்கியம் தொடர்பாக எழுதியுள்ளார். இவரது ஆய்வு நூல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சாகித்ய அகாதெமி போன்றவை வெளியிட்டுள்ளன. சு. சண்முகசுந்தரத்தின் படைப்புகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், வங்காளம் எனப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
| |
| == பதிப்பு பணி ==
| |
| சு. சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம் எனும் பெயரில் 1981- ஆம் ஆண்டு நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். சு.சண்முகசுந்தரம் காவ்யா பதிப்பகம் சார்பில் இதுவரை 900 நூல்களுக்கும்மேல் பதிப்பித்துள்ளார். காவ்யா என்ற பெயரில் கலை இலக்கிய பண்பாட்டுக்கான காலாண்டிதழை 2012- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வெளியிட்டார்.
| |
| == நூல்கள் ==
| |
| சு.சண்முகசுந்தரம், எழுதிய மற்றும் தொகுத்த நூல்களின் சிறு பட்டியல் அகரவரிசைப்படி
| |
|
| |
| * அகத்தாறும் புறத்தாறும்
| |
| * அண்ணாதிரை
| |
| * இலக்கிய விசாரங்கள்
| |
| * இலக்கியமும் கோட்பாடுகளும்
| |
| * இலக்குவம்
| |
| * இராஜ இராஜ சோழன்
| |
| * ஐந்து கதைப் பாடல்கள்[[File:Valliyur.jpg|thumb|வள்ளியூர் வரலாறு]]
| |
| * கதைப்பாடல்கள்
| |
| * கண்ணகிக் கதைகள்
| |
| * கட்டபொம்மு கதைப்பாடல்
| |
| * கம்பன்கலை அ.ச.ஞா
| |
| * கநாசூயம்
| |
| * கனவு
| |
| * காலந்தோறும் கண்ணகிக் கதைகள்
| |
| * சங்கத் தமிழ்க் களஞ்சியம்
| |
| * சங்கத்தமிழ்
| |
| * சங்க இலக்கிய வரலாறு
| |
| * சமய இலக்கிய வரலாறு
| |
| * சி.கனக சபாபதி கட்டுரைகள்
| |
| * சுடலைமாடன் வழிபாடு
| |
| * செவ்வியல் காலத் தமிழ்
| |
| * சென்னைச் சிறுகதைகள்
| |
| * தமிழ் பழமொழிகள்[[File:Kamban Kalai.jpg|thumb|காவ்யா கம்பன் கலை]]
| |
| * தமிழ் நாடகச் சரித்திரம்
| |
| * தமிழவனோடு ஓர் உரையாடல்
| |
| * திராவிட தெய்வம் கண்ணகி
| |
| * திருத்தொண்டர் காப்பியத்திறன்
| |
| * நாட்டுப்புறவியல்
| |
| * நாமக்கல் தெய்வங்கள்
| |
| * நான்கு கதை பாடல்கள்
| |
| * நீலபத்மநாபம்
| |
| * நெல்லைச் சிறுகதைகள்
| |
| * நெல்லைப் பெண் தெய்வங்கள் நெல்லை மறவர்
| |
| * பகதூர் வெள்ளை
| |
| * பசும்பொன் கருவூலம்
| |
| * பசும்பொன் சரித்திரம்
| |
| * பழமலய் கவிதைகள்
| |
| * பழமொழிக்கதைகள்
| |
| * பழையனூர் நீலி கதைகள்
| |
| * பல்கலைத் தமிழ்
| |
| * பாதர் வெள்ளை
| |
| * பாரதிராஜா [[File:Kanaasuyam.jpg|thumb|கநாசூயம்]]
| |
| * பாவேந்தரின் தமிழ் போராட்டங்கள்
| |
| * பிணம் தின்னும் தேசம்
| |
| * பி.யூ.சின்னப்பா
| |
| * பெங்களூர் சிறுகதைகள்
| |
| * பேராசிரியர் ந. சஞ்சீவி
| |
| * மதுரைவீரன் கதை
| |
| * முக்குலத்தோர் சரித்திரம்
| |
| * முருகன் வழிபாடு
| |
| * வள்ளிக்கண்ணன் நாவல்கள்
| |
| * வள்ளியூர் வரலாறு
| |
| * வள்ளுவர்கள்
| |
| * வல்லிக்கண்ணன் கட்டுரைகள்
| |
| * வைரமுத்து வரை
| |
|
| |
| == உசாத்துணை ==
| |
| * [https://muelangovan.blogspot.com/2012/04/blog-post_1125.html?m=1 காவ்யா, கலை இலக்கிய பண்பாட்டு இதழ், முனைவர் மு. இளங்கோவன்]
| |
| * [https://www.fliptamil.com/books/publisher/1151.kavya-pathippagam?page=6 காவ்யா பதிப்பக நூல்கள்]
| |