காளிமுத்துப் புலவர்
From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
காளிமுத்துப் புலவர் (பொ.யு. 15-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். தனிப்பாடல்கள் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
காளிமுத்துப் புலவர் “கடந்தூங்கு” என்னும் பாடலில் பராக்கிரம பாண்டியனை(பொ.யு. 1422-1482) பற்றிப் பாடியதால் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என கா.சுப்ரமணியபிள்ளை கருதினார்.
இலக்கிய வாழ்க்கை
காளிமுத்துப் புலவர் ஏழு தனிப்பாடல்கள் பாடினார். ஒவ்வொரு பாட்டும் ”வேலப்பன் மைந்தன் குருநாதன்” என முடியும். ஆனால் பாடல்கள் சிற்றின்ப சாரம் பொருந்தியவை. இதில் ஏழாவது பாடல் தஞ்சி எனும் பெண் பற்றியது.
உசாத்துணை
✅Finalised Page