being created

கவிமாலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Kavimaalai logo .jpg|right|frameless|214x214px]]
[[File:Kavimaalai logo .jpg|right|frameless|214x214px]]


கவிமாலை என்னும் தமிழ் இலக்கிய அமைப்பு, சிங்கப்பூரில் கவிதை வழி தமிழ் வளர்ப்பதையும் தமிழ்க் கவிஞர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரையில் தீவிரத்துடன் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு சாரா அமைப்பாகும்.  
கவிமாலை என்னும் தமிழ் இலக்கிய அமைப்பு, சிங்கப்பூரில் கவிதை வழி தமிழ் வளர்ப்பதையும் தமிழ்க் கவிஞர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரையில் தீவிரத்துடன் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு சாரா அமைப்பாகும்.  
Line 20: Line 19:
இவ்விருது ஒரு சவரன் தங்கக் கணையாழியுடன்(மோதிரம்) சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது
இவ்விருது ஒரு சவரன் தங்கக் கணையாழியுடன்(மோதிரம்) சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது
[[File:Murugadiyan.jpg|thumb|கவிஞர் முருகடியானுக்கு முன்னாள் நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­னர் முக­மது இர்­ஷாத் கணையாழி விருது வழங்குகிறார். ]]
[[File:Murugadiyan.jpg|thumb|கவிஞர் முருகடியானுக்கு முன்னாள் நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­னர் முக­மது இர்­ஷாத் கணையாழி விருது வழங்குகிறார். ]]
==== '''கணையாழி விருது பெற்றவர்கள்''' ====
==== '''கணையாழி விருது பெற்றவர்கள்''' ====
2003   திரு. பி.கிருஷ்ணன்        
2003   திரு. பி.கிருஷ்ணன்        
Line 38: Line 36:
2010   திரு. ஏ.பி.ராமன்   
2010   திரு. ஏ.பி.ராமன்   


2011   திரு. வை. சுதர்மன்         
2011   திரு. வை. சுதர்மன்       
2012   கவிஞரேறு திரு. அமலதாசன்            
2012   கவிஞரேறு திரு. அமலதாசன்            
[[File:மூத்த கவிஞர்கள் 2018.jpg|thumb|2018, 29ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற தமிழ் மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் 16 மூத்த கவிஞர்களை மேடையேற்றி நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தது கவிமாலை. கவிஞர்கள் சிலர் மறைந்துவிட்டாலும் அவர்களின் குடும்பத்தாரை அழைத்து சிறப்பிக்கப்பட்டனர்.]]
[[File:மூத்த கவிஞர்கள் 2018.jpg|thumb|2018, 29ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற தமிழ் மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் 16 மூத்த கவிஞர்களை மேடையேற்றி நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தது கவிமாலை. கவிஞர்கள் சிலர் மறைந்துவிட்டாலும் அவர்களின் குடும்பத்தாரை அழைத்து சிறப்பிக்கப்பட்டனர்.]]
2013   எழுத்தாளர் இராம.கண்ணபிரான்  
2013   எழுத்தாளர் இராம.கண்ணபிரான்
2014   முனைவர். பேராசிரியர் சுப. திண்ணப்பன்       
2014   முனைவர். பேராசிரியர் சுப. திண்ணப்பன்       



Revision as of 19:46, 13 September 2022

Kavimaalai logo .jpg

கவிமாலை என்னும் தமிழ் இலக்கிய அமைப்பு, சிங்கப்பூரில் கவிதை வழி தமிழ் வளர்ப்பதையும் தமிழ்க் கவிஞர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரையில் தீவிரத்துடன் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு சாரா அமைப்பாகும்.

தொடக்கம், செயல்பாடு

கவிமாலை செயலவை 2019 முதல்

2000ஆம் ஆண்டு, கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளாகிய 24 ஜூன் அன்று கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கவிதைக்காகக் கவிஞர்களே நடத்தும் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. கவிதை ஆர்வமுடையவர்களை ஒன்றிணைக்கும் விதமாக மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மரபுக்கவிதை, நவீன கவிதை உட்பட அனைத்துக் கவிதை வடிவங்களுக்கும் இடமளிக்கிறது. வளர் தமிழ் இயக்கமும், தேசிய நூலக வாரியமும் நடத்திவரும் முக்கிய தமிழ்மொழி சார்ந்த திட்டங்களில் பங்களிக்கிறது. 2007ஆம் ஆண்டு முதல் கவிமாலை அமைப்பை படைப்பாளர் மா.அன்பழகன் வழிநடத்தினார். 2008 முதல் 2015 வரையில் கவிஞர்கள் மா.அன்பழகன், ந.வீ.விசயபாரதி, ந.வீ.சத்தியமூர்த்தி ஆகியோர் அதன் பொறுப்பாளர்களாகச் செயல்பட்டனர். 2015 முதல் 2016 வரை தமிழாசிரியர் பா.கேசவன் கவிமாலையின் தலைவராகப் பணிபுரிந்தார். 2017 முதல் 2019 வரையிலும் கவிஞர் இறைமதியழகன் கவிமாலையின் தலைவராக இருந்தார். 2019 முதல் கவிஞர் இன்பா கவிமாலை அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். கவிமாலையின் பல தமிழ் வெளியீடுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளிவந்துள்ளன. தங்கமுனை விருதுபெற்ற சீன, மலாய், ஆங்கிலக் கவிதைகள் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற தொடராகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிப்பதிவுடன் காணொளிகளாக வெளியிடப்பட்டன. அன்றாடம் ஒரு தமிழ்க் கவிதையை, 2019 முதல், சமூக ஊடகக் குழுக்களில் பகிர்ந்துவருவது முக்கியமான மற்றொரு பங்களிப்பு. இளையரைக் கவிதையின்பால் ஈர்க்கும் முயற்சியாக 2019இல் ‘விதைகள்’ என்னும் மாணவரணி தொடங்கப்பட்டது. தொழில்நுட்ப உதவியுடன் மாணவர்களுக்காக மாணவர்களே வடிவமைக்கும் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்காகக் கவிதைப் பயிலரங்குடன் கவிதை, மொழிபெயர்ப்புப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

மாதாந்திரச் சந்திப்புகள்

கவிமாலைச் சந்திப்பு

2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை தேசிய நூலக வாரியத்தில் மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.  இதுவரையில் 266 மாதாந்திரச் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன.   மாதாந்திரக் கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.   சமூக ஊடகங்களில் போட்டிகள் நடத்துவதோடு நாள்தோறும் ஒரு கவிதையைப் பகிர்ந்து வாசிப்பை ஊக்குவிக்கிறது. சிங்கப்பூர் தமிழ் மொழி மாதம் முழுவதும் முப்பது நாட்களும் மின்னிலக்க காணொளி படைப்புகள், வலையுரைகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது.  சிங்கப்பூரின் மூத்த படைப்பாளர்கள் முப்பது பேரின் வரலாறும் வரிகளும், சிற்றிலக்கிய வலையுரைகள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. 

மாணவர்களுக்கான பரிசுகள்

மாணவருக்கான கவிதைப் பயிலரங்கு 2016

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டி, மொழிபெயர்ப்புப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

கவிமாலை  வழங்கிவரும் முக்கிய விருதுகள், பரிசுகள்

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றிய சான்றோருக்கு 2003 முதல் ஆண்டுதோறும் இலக்கியக் கணையாழி விருது; சிங்கப்பூரில் வெளியிடப்படும் சிறந்த கவிதைப் புத்தகத்துக்கு 2009 முதல் ஆண்டுதோறும்  தங்கப்பதக்கம் விருது; திங்கள்தோறும் நிகழும் போட்டிகளில் பங்கெடுக்கும் சிறந்த இளங்கவிஞருக்கு 2010 முதல் தங்கமுத்திரை விருதுகளை கவிமாலை அமைப்பு வழங்கி வருகிறது.

கணையாழி இலக்கிய விருது

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கும் மொழி வளர்ச்சிக்கும் தொடர்ந்து தொண்டாற்றிய சிறந்த இலக்கியப் படைப்பாளிக்கு  கணையாழி இலக்கிய விருது கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது  . ஆண்டுதோறும் கவிமாலை அமைப்பின் தேர்வுக்குழு விருதுக்குரியவரைத் தேர்வு செய்கிறது. விருதாளரின் மொழிசார்ந்த பட்டறிவு, படைப்பிலக்கியப் பங்களிப்பு,  தமிழ் சார்ந்த பிற செயற்பாடுகளின் அடிப்படையில்  விருதுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவ்விருது ஒரு சவரன் தங்கக் கணையாழியுடன்(மோதிரம்) சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது

கவிஞர் முருகடியானுக்கு முன்னாள் நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­னர் முக­மது இர்­ஷாத் கணையாழி விருது வழங்குகிறார்.

கணையாழி விருது பெற்றவர்கள்

2003   திரு. பி.கிருஷ்ணன்      

2004   வெண்பாச் சிற்பி கவிஞர் இக்குவனம்    

2005   திரு. ஜே.எம்.சாலி          

2006   திரு. பா.கேசவன் (சிங்கப்பூர் சித்தார்த்தன்)   

2007   திரு. பி.பி.காந்தம்         

2008   திரு.மு.தங்கராசன்       

2009   கவிஞர் பெ.திருவேங்கடம்    

2010   திரு. ஏ.பி.ராமன் 

2011   திரு. வை. சுதர்மன்        2012   கவிஞரேறு திரு. அமலதாசன்          

2018, 29ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற தமிழ் மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் 16 மூத்த கவிஞர்களை மேடையேற்றி நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தது கவிமாலை. கவிஞர்கள் சிலர் மறைந்துவிட்டாலும் அவர்களின் குடும்பத்தாரை அழைத்து சிறப்பிக்கப்பட்டனர்.

2013   எழுத்தாளர் இராம.கண்ணபிரான் 2014   முனைவர். பேராசிரியர் சுப. திண்ணப்பன்     

2015   திரு. எஸ்.எஸ். சர்மா    

2016   திரு. பால பாஸ்கரன்   

2017   கவிஞர் பாத்தேறல் இளமாறன்      

2018   கவிஞர் பாத்தூறல் முத்துமாணிக்கம்     

2019   கவிஞர் பாத்தென்றல் முருகடியான்

2020   விருதாளர் இராம்.நாராயணசாமி

2021   எழுத்தாளர் பொன் சுந்தரராசு

2022   தமிழாசிரியர் சி.சாமிக்கண்ணு

தங்க முத்திரை விருது

மாணவர் விருது


வளர்ந்துவரும் இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருது  கடந்த 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அரை சவரன் தங்கக் காசுடன் சான்றிதழும் இவ்விருதுடன் வழங்கப்படுகிறது.

தங்க முத்திரை விருது பெற்றவர்கள்

2010   லலிதா சுந்தர்       2011   பனசை நடராசன்         

2012   பீஷான் கலா       

2013   சபாமுத்து நடராசன்    

2014   தாயுமானவன் மதிக்குமார்   

2015   ராஜு ரமேஷ்       

2016   தாம் சண்முகம்  

2017   காசிநாதன் சுதா

2018   பாலமுருகன்       

2019   ஜோசப் சேவியர்

2020   அ.பிரபாதேவி     

2021   அஷ்ரப் அலி

2022   இரா.அருள்ராஜ்

தங்கப்பதக்க விருது

அந்த ஆண்டில் வெளிவந்த சிங்கப்பூரின் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்க விருது  2009 ஆம் ஆண்டிலிருந்து  வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  வெளியிடப்படும் கவிதை நூல்களுள், சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் நூலின் ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது; கவிமாலை நிர்வாகிகளால் நியமிக்கப்படும் தேர்வுக்குழுவில் சிங்கப்பூரைச் சேர்ந்த நடுவர் ஒருவரும், இரண்டு வெவ்வேறு நாட்டின்  நடுவர்கள் இருவருமாக மூவரின் தேர்வுக்குட்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

வெற்றியாளருக்கு இரண்டு சவரன் தங்கப்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

தங்கப் பதக்க விருது பெற்றவர்கள்

2009   பிச்சினிக்காடு இளங்கோ     2011   மு. தங்கராசன்   

2012   பா.திருமுருகன்  

2013   அ.கி.வரதராசன் 

2014   மாதங்கி     

2015   பார்வதி பூபாலன்          

2016   மலர்விழி இளங்கோவன்        

2017   முத்துப்பேட்டை மாறன்         

2018   சி.கருணாகரசு   

2019   அ. இன்பா

2021  க.பாலமுருகன்

கவிமாலை சார்பில் வெளியிடப்பட்ட நூல்கள்

கவிமாலை கடந்த காலங்களில் பல்வேறு நூல்வெளியீடுகள், இசைவட்டு வெளியீடுகள் ஆகியவற்றை நடத்தி, அவற்றை வெளியிடும் கவிஞர்களையும் படைப்பாளிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது.  இலக்கியம் படைப்புகளை வெளியிட்டும், வெளியீடுகளுக்கு கவிமாலை தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கவிமாலையில் மாதம்தோறும் படைக்கப்படும் கவிதைகளில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, பங்குபெறும் அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெறும் வண்ணம் நூலாகத் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் கவிமாலை கவிதை தொகுப்பு வெளியிடப்படுகிறது.

கவிமாலை நிகழ்ச்சிகளில் வெளியீடு கண்ட நூல்கள்

1) 2003 க. து. மு. இக்பால்  காகிதவாசம் 2) 2003 மா . அன்பழகன்   ஒன்றில் ஒன்று

3) 2003 மா . அன்பழகன்   இப்படிக்குநான்

4) 2003 வை. சுதர்மன்   தணியாத தாகங்கள்

5) 2004 சி. கருணாகரசு   தேடலை சுவாசி

6) 2004 பிச்சினிக்காடு இளங்கோ  உயிர்க்குடை

7) 2004 பிச்சினிக்காடு இளங்கோ  இரவின் நரை

8) 2005 க. து. மு. இக்பால்     வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள்  

9) 2005 ந . வீ .  விசயபாரதி  நிழல்மடி

10) 2005 பிச்சினிக்காடு இளங்கோ  முதலோசை

11) 2005 பிச்சினிக்காடு இளங்கோ  பூமகள்

12) 2005 பிச்சினிக்காடு இளங்கோ  தலைமனம்

13) 2005 பிச்சினிக்காடு இளங்கோ  அதன்பேர் அழகு

14) 2005 பிச்சினிக்காடு இளங்கோ  மழை விழுந்த நேரம்

15) 2005 மா . அன்பழகன்   விடியல் விளக்குகள்

16) 2006 ந. வீ. விசயபாரதி  திரவியதேசம்

17) 2006 மா . அன்பழகன்   உடன்படுசொல்

18) 2007 மா . அன்பழகன்   இன்னும் கேட்கிற சத்தம்

19) 2008 ந . வீ .  சத்தியமூர்த்தி   தூரத்து மின்னல் 

20) 2008 பிச்சினிக்காடு இளங்கோ  காதல்தீ

21) 2008 மலர்விழி இளங்கோவன்  கருவறைப்பூக்கள்

22) 2008 பிச்சினிக்காடு இளங்கோ  அரிநெல்

23) 2008 கவிமாலை    கூடி வாழ்த்தும் குயில்கள்

24) 2009 மா . அன்பழகன்   Bubble of feeling

25) 2009 மா . அன்பழகன்   ஆயபுலம்

26) 2009 மா . அன்பழகன்   என்பா நூறு

27) 2009 கவிமாலை    பொன்மாலை பூக்கள்

28) 2010 நூர்ஜஹான் சுலைமான்  உயிர்நிலவு

29) 2010 மா . அன்பழகன்   என் வானம் நான் மேகம்

30) 2010 ந. வீ. விசயபாரதி  பூட்டுகள்

31) 2010 ந. வீ. விசயபாரதி  புலமைக்கு மரியாதை

32) 2010 ந . வீ. விசாயபாரதி  பூக்கள் உடையும் ஓசை

33) 2010 கி. கோவிந்தராசு  வேர்களின் வியர்வை

34) 2011 கவிமாலை    பளிங்கு மொட்டு

35) 2011 கோ. அருண்முல்லை   பொய்யா நெறி

36) 2011 தியாக ரமேஷ்   நினைவுப் பருக்கைகள்

37) 2011 ந . வீ .  சத்தியமூர்த்தி   சிந்தைகவர்ந்த சிவனடியார்கள்

38) 2011 பா. திருமுருகன்  ஊதாங்கோலும்  ஒருதுண்டு நெருப்பும்

39) 2011 மா . அன்பழகன்   BEYOND THE RELAM

40) 2012 கவிமாலை    ஒருதுளி கடல்

41) 2012 கோ. கண்ணன்   கண்கொத்திப் பறவை

42) 2012 நவநீதம் ரமேஷ்   மௌன மொழிகள்

43) 2012 பால குமரேசன்    முகங்கள்

44) 2012 பிச்சினிக்காடு இளங்கோ  அந்த நான் இல்லை நான்

45) 2012 பூச்சோங்  சேகர்   நண்பன்

46) 2012 மா . அன்பழகன்   கவித் தொகை

47) 2012 முத்துக்குமார்    பக்திப் பாடல்கள்

48) 2013 ஆ . உமாபதி    விழிகள் சுமந்த கனவுகள்

49) 2013 கவிமாலை    கதவு திறந்தது

50) 2013 கி. கோவிந்தராசு   மனவெளிப் பூக்கள்

51) 2013 கி. கோவிந்தராசு  களமாடிய சொற்கள்

52) 2013 சி. கருணாகரசு   நீ வைத்த மருதாணி

53) 2013 ந. வீ. விசயபாரதி  வால் முளைத்த காதுகள்

54) 2013 ந. வீ. விசயபாரதி   தனி வழி

55) 2013 மா . அன்பழகன்   திரைஅலையில் ஓர் இலை

56) 2013 முனைவர் ஆறுமுகம்   தாகம்

57) 2014 கவிமாலை    மீண்டும் ஒருமுறை

58) 2014 கீழை அ. கதிர்வேல்  நகைச்சுவை நானூறு

59) 2014 தவமணி    எளிய  தமிழ் இலக்கணம்

60) 2014 பார்வதி பூபாலன்  அருள் மலர்கள்

61) 2014 பார்வதி பூபாலன்  தமிழ் உலா

62) 2014 உ. செல்வராசு கல்வியில் சிறந்து கலங்கரைவிளக்காய் மின்னிடு

63) 2014 ந. வீ. சத்தியமூர்த்தி   ஏணிப்படிகள்

64) 2014 ந. வீ. சத்தியமூர்த்தி   பார்வை “கள்”

65) 2014 தமிழ்மதி    ஒரு துளி மழை

66) 2014 தமிழ் கிறுக்கன்   முருகன் காவடிச் சிந்து

67) 2014 கோ. அருண்முல்லை   நாத்திகன் வேள்வி

68) 2014 தியாக ரமேஷ்   மரப்பாச்சி பொம்மைகள்

69) 2015 கவிமாலை    இன்னும் கொஞ்சம் வெட்கம்

70) 2015 கவிமாலை    நாடும் நாயகனும்

71) 2015 முனைவர் மு.  இளங்கோவன்  கு.சுந்தரேசனார் ஆவணப் படம் 

72) 2016 எல்ல கிருஷ்ணமூர்த்தி  பாமரை

73) 2016 ஏ . பி. இராமன்    ஏ . பி. இராமன் சிறுகதைகள்

74) 2016 கவிமாலை    சொல்மழை

75) 2016 காரை பெரியசாமி  விதை தேடும் ஈரம்

76) 2016 கி. கோவிந்தராசு  உணர்வுகள்

77) 2016 கி. கோவிந்தராசு  ஒளி ஓசை கவிதைகள்

78) 2016 கி. கோவிந்தராசு  இசைப்பாட்டு இலக்கியம்

79) 2016 கோ. கண்ணன்   அடம் செய விரும்பு

80) 2016 சுப . சத்தியமூர்த்தி   வரம்தரும் வானவன் – இசைதட்டு

81) 2016 தங்கமணி     திரவச்சிலைகள்

82) 2016 தியாக ரமேஷ்   மகரந்தச் சேர்க்கை

83) 2016 துரை முத்துகிருஷ்ணன்   ஒருதலைக் காமம்

84) 2016 துரை முத்துகிருஷ்ணன்   நந்திக்கலம்பகம்

85) 2016 மலர்விழி இளங்கோவன்  அலை பிடுங்கிய சொற்கள்

86) 2016 மலர்விழி இளங்கோவன்  சொல்வதெல்லாம் பெண்மை

87) 2016 மலர்விழி இளங்கோவன்  கடல் சூழ் கவிதைகள்

88) 2016 மா . அன்பழகன்   ஆயிழையில் தாலாட்டு

89) 2016 மா . அன்பழகன்   கூவி அழைக்குது காகம் 2 

90) 2016 மா . அன்பழகன்   கூவி அழைக்குது காகம் 3

91) 2016 மா . அன்பழகன்   எர்கு

92) 2016 மா . அன்பழகன்   Erhu

93) 2016 மா . அன்பழகன்   கூவி அழைக்குது காகம் 1

94) 2016 மா . அன்பழகன்   வாய்க்கால் வழியோடி

95) 2016 மா . அன்பழகன்   புதுமைத் தேனீ

96) 2016 மா . அன்பழகன்   பாதிப்பில் பிறந்த பாடல்கள்

97) 2016 முத்துப்பேட்டை மாறன் ஏதோ ஒரு ஞாபகம்

98) 2016 முனைவர் ஆறுமுகம் தென்தமிழின் உயரிய சிறப்புகள்

99) 2016 லலிதா சுந்தர்      சரித்திரங்கள் பிறப்பதில்லை

100) 2016 கவிமாலை தமிழை நேசிப்போம் கவிதை வாசிப்போம்

101) 2017 சி. கருணாகரசு சிறகின் பசி

102) 2017 சி. கருணாகரசு அரங்கேறிய சலங்கைகள்

103) 2017 சி. கருணாகரசு காதல் தின்றவன்  

104) 2017 நூர்ஜஹான் சுலைமான்  பொன்விழா பூமகள்

105) 2017 நூர்ஜஹான் சுலைமான்  இமையாய்க் காப்போம் 

106) 2017 பிச்சினிக்காடு இளங்கோ  அதிகாலைப் பல்லவன் 

107) 2017 பிச்சினிக்காடு இளங்கோ  ஆதலினால் காதல் செய்தேன்

108 )2017 பிச்சினிக்காடு இளங்கோ  அங்குசம் காணா யானைகள்

109) 2017 பிச்சினிக்காடு இளங்கோ  தூரிகைச் சிற்பங்கள்

110) 2017 பிச்சினிக்காடு இளங்கோ  வியர்வை ஊர் 

111) 2017 மா . அன்பழகன்  காதல் இசைபட வாழ்தல்

112) 2017 மு. ஜஹாங்கீர்    புதிய நிலா மலர்

113) 2017 முனை மு  இளங்கோவன்  விபுலானந்தர் ஆவணப் படம்

114) 2017 வை. சுதர்மன் விடுதலைக்கவி வை. சுதர்மன் கவிதைகள்

115) 2017 கவிமாலை   அழகு மகுடம்

116) 2018 நீதியரசார் மு. புகழேந்தி  வெள்ளத்தாண்டவம்

117) 2018 பாத்தேறல் இளமாறன்  கல்லறை

118) 2018 பாத்தேறல் இளமாறன்  அயல்மொழியும்  அருந்தமிழும்

119) 2018 பாலசுப்பிரமணியன்  விழித்திருக்கும் நினைவலைகள்

120) 2018 மா . அன்பழகன்  அடுத்த வீட்டு ஆலங்கன்று

121) 2018 விஜயன்    அம்மா என்றால் அன்பு

122) 2018 விஜயன்    எம் ஜி ஆரின் பயணம்

123) 2018 சதீஷ்    People of Indian origin in Srilanka

124) 2018 சதீஷ்  இலங்கையில் இந்திய வம்சாவளித்  தமிழர்

125) 2018 ந. வீ. விசயபாரதி நிலவின் தோல்வி

126) 2018 ந. வீ. விசயபாரதி சுந்தரத்  தமிழாடல்

127) 2018 மா . அன்பழகன்  அன்புக்கு அழகு 75

128) 2018 ந. வீ. விசயபாரதி கவியரசர் கண்ணதாசன்

129) 2018 கோ. கண்ணன்  காந்தள் சூடி

130) 2018 பிச்சினிக்காடு இளங்கோ  காதல் வங்கி

131) 2018 பிச்சினிக்காடு இளங்கோ  என்னோடு வந்த கவிதைகள்

132) 2018 தங்கவேல்  முருகன் நினைப்பதற்கு நேரமில்லை

133) 2018 கவிமாலை வெளிச்சம்

134) 2019 இன்பா   மூங்கில் மனசு

135) 2019 இன்பா   மழை வாசம்

136) 2019 துரை  முத்துகிருஷ்ணன்  இரட்டைமணிமாலை

137) 2019 துரை முத்துகிருஷ்ணன்   தமிழ் இலக்கணம்

138) 2019 துரை முத்துகிருஷ்ணன்   அகல் விளக்கு

139) 2019 க . பாலமுருகன்  வைகறைச் சூரியன்

140) 2019 மா . அன்பழகன்  சொல் வெட்டு 555

141) 2019 தங்கமணி க.  பட்டினிப்பாலை

142) 2019 இன்பா  யாதுமாகி

143) 2019 இன்பா  ஙப்போல்  நிமிர்

144) 2019 இன்பா  ஞயம்படச்  சொல்

145) 2019 பிச்சினிக்காடு இளங்கோ  மக்கள் மனம்

146) 2019 துரை முத்துகிருஷ்ணன்  புலவர் குறளுரை

147) 2019 வை. சுதர்மன் வாழ்வியல் வரலாறு

148) 2019 கவிமாலை  அந்த ஒரு சொல்

149) 2021 மா . அன்பழகன்  டுரியானுள் பலாச்சுழை

150) 2021 மா . அன்பழகன்  மேகம் மேயும் வீதிகள்

151) 2021 மா . அன்பழகன்  கூவி அழைக்குது காகம் 4

152) 2021 வை. சுதர்மன் உயிரோவியம்

153) 2021 கவிமாலை  மௌன விதைகள்

154 )2021 இன்பா  சிற்றிலக்கியச்சீர்

155) 2022 மா . அன்பழகன்  டுரியானுக்குள் பலாசுளை

156 )2022 மா . அன்பழகன்  ஐம்பதிலும் வாழ்க்கை வரும்

157) 2022 மா . அன்பழகன்  கூவி அழைக்கிது காகம் – 4

158) 2022 மா . அன்பழகன்  மேகம் மேயும் வீதிகள்


இணை அமைப்பு:  கவிமாலை மாணவரணி

உசாத்துணை

கவிமாலை சிங்கப்பூர் கவிமை facebook/

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் 1990 முதல் 2015 வரை – ஓர் ஆய்வு


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.