கழுகுமலை முருகன் கோயில்

From Tamil Wiki
Revision as of 15:45, 21 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) முருகனுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயில். == அமைவிடம் == தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) முருகனுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயில்.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை பேரூராட்சியில் அமைந்துள்ள கோயில். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ளது.

பெயர்க்காரணம்

சம்பாதி என்ற கழுகு முனிவர் முருகனை வழிபட்டதால் இந்த ஊர் ‘கழுகு மலை’ என்று பெயர் பெற்றது.

அமைப்பு

முருகன் மேற்கு முகமாக வீற்றிருக்கும் மூன்று தலங்களில், இத்தலத்தை ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது. கோவிலின் கருவறையும், அர்த்த மண்டபமும் கழுகு மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் மூலவராக முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் உள்ளனர்.

சிறப்புகள்

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழகுமலை முருகனைப் பாடியுள்ளார். கழுகுமலை முருகன் கோயில் எதிரே எட்டயாபுரம் சமஸ்தான மன்னரின் சிறு அரண்மனை அமைந்துள்ளது. இக்கோவிலிலுள்ள முருகன் எட்டையபுர மன்னர்களின் குலதெய்வமாக வழிபடப்பட்டார். இம்மன்னர்களின் திருப்பணிகள் பல இக்கோவிலில் உள்ளன.

திருவிழா

வைகாசி விசாகத்தன்று வசந்தமணடபம் பத்து நாள் விழாவக்கக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியில் பதின்மூன்று நாளும், தைப்பூசத்தில் பத்து நாளும், பங்குனி உத்திரம் பதின்மூன்று நாளும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை