களவழி நாற்பது

From Tamil Wiki
Revision as of 16:13, 20 February 2022 by Subhasrees (talk | contribs) (களவழி நாற்பது - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

களவழி நாற்பது சங்கம் மருவிய காலத்தை சேர்ந்த தொகுதியான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. பொய்கையார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் ஆகிய களவழி நாற்பது, சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது. சிற்றிலக்கியங்களில் நானாற்பது (நாற்பது) என்னும் வகையை சேர்ந்தது.

உள்ளடக்கம்

நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி'[1].  தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது.

பொய்கையார் சேர மன்னனுடைய நண்பன். கழுமலத்தில் சோழ மன்னனான கோச்செங்கணானுடன் நடைபெற்ற போரில் சேரமான் கணைக்காலிரும்பொறை தோற்று சிறையிலிடப்படுகிறான். புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது. கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி வர்ணனைகளையும் களவழி நாற்பது விவரிக்கிறது.

இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளும், மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் குறித்தும் எடுத்துக்காட்டுகின்றன.

குறிப்பு:

  • புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
  • களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்

எடுத்துக்காட்டு

சினங்கொண்ட சோழன் செங்கணான் போர் புரிகின்ற களத்திலே, தச்சனுடைய தொழிற்சாலையில் பொருட்கள் இறைந்து கிடப்பதைப்போல, கொலைவெறி கொண்டு பாய்கின்ற யானைகள் புகுந்த இடமெல்லாம் பிணங்கள் விழுந்து கிடக்கின்றன என்னும் பொருள் கொண்ட பாடல்:

கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்"
சினமால் பொருத களத்து.

சோழனைக் குறிக்கும் சொற்கள்

  • புனல் நாடன்[2]  நீர் நாடன்[3]  காவிரி நாடன்[4]  காவிரி நீர்நாடன்[5]
  • செங்கண்மால்[6]  செங்கண் சினமால்[7]
  • செம்பியன்[8]  புனை கழற்கால் செம்பியன்[9]  கொடித் திண்தேர் செம்பியன்[10]  திண்தேர்ச் செம்பியன்[11]
  • சேய்[12]  செரு மொய்ம்பின் சேய்[13]  பைம்பூண் சேய் [14]

உசாத்துணை

https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/kalavazhinarpadhu.html

அடிக்குறிப்பு

  • எண்கள் இந்நூலின் பாடல் வரிசை எண்ணைக் குறிக்கும்.
  1. ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வெற்றி - தொல்காப்பியம், புறத்திணையியல் 17
  2. 1, 2, 9, 10, 14, 16, 17, 25, 26, 27, 28, 31, 36, 37, 39
  3. 3, 8, 19, 20, 32, 41
  4. 7, 12, 35
  5. 24
  6. 4, 5, 11
  7. 15, 21, 30, 40
  8. 6
  9. 38
  10. 23
  11. 33
  12. 18
  13. 13
  14. 34