கலாப்ரியா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 78: Line 78:
#மாக்காளை, 2021- சந்தியா பதிப்பகம்  
#மாக்காளை, 2021- சந்தியா பதிப்பகம்  
==உசாத்துணை==   
==உசாத்துணை==   
25 ஆவது தடம் இதழ் - விகடன்  
25 ஆவது தடம் இதழ் - விகடன்
https://www.jeyamohan.in/83/  
https://www.jeyamohan.in/83/  


http://andhimazhai.com/news/view/vilakku-award-for-kalapriya.html  
http://andhimazhai.com/news/view/vilakku-award-for-kalapriya.html  


http://yuvabharathy.blogspot.com/2016/10/2000.html  
http://yuvabharathy.blogspot.com/2016/10/2000.html
 
==இனைப்புகள்==  
==இனைப்புகள்==  
https://kalapria.blogspot.com/  
https://kalapria.blogspot.com/  

Revision as of 17:49, 8 July 2022

கலாப்ரியா

கலாப்பிரியா (ஜுலை 30, 1950). இயற்பெயர் டி.கே சோமசுந்தரம். எழுபதுகளி்ல் எழுத துவங்கிய நவீன தமிழ் கவிஞர். நேரடியாகச் சித்திரங்களை அடுக்கியபடியே போகும் பாணியை கொண்டது இவருடைய கவிதைகள். கவிதை, கட்டுரை, தன்வரலாறு, சிறுகதை, நாவல் என நாற்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

பிறப்பு, கல்வி

தி.சு. சோமசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட கலாப்பிரியா 30-7-1950 அன்று திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் (கடையநல்லூரில்*)பிறந்தார். தந்தை கந்தசாமி. தாய் சன்முகவடிவு.பள்ளி படிப்பை திருநெல்வேலி ஷாஃப்டர் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். இளங்கலை கணிதவியலை நெல்லை ம. தி. தா இந்துக் கல்லூரியிலும், முதுகலை கணிதவியலை நெல்லை யோவான் கல்லூரியிலும் படித்து முடித்தார்.

தனிவாழ்க்கை

2009 தில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் தற்பொழுது தென்காசி அருகே உள்ள இடக்கால் என்ற கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். மனைவி சரஸ்வதி, இவர் பள்ளியில் கணித ஆசிரியையாகவும் தலைமை ஆசிரியையாவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

குடும்ப சூழலும், பள்ளிப்பருவத்தில் ஒரே தெருவில் வசித்த வண்ணதாசன் உடனான நட்பும் எழுதுவதற்க்கான ஆர்வம் உருவாவதன் காரணமாக அமைந்தது. சி.என். அண்ணாதுரையின் மறைவை ஒட்டி இவர் எழுதிய இரங்கற்பா இவருடைய முதல் கவிதையாக சொல்லப்படுகிறது. பிரசுரமான தன்னுடைய முதல் கவிதையாக கவிஞர் நினைப்பது 'கசடதபற' இதழில் வெளியான 'என்னுடைய மேட்டுநிலம்' என்ற கவிதை.'கும்பம்' என்ற புனைபெயரில் முதலில் எழுதிய இவர், வண்ணநிலவனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த கையெழுத்து பத்திரிக்கையான பெருநை-யில் "கலாப்பிரியா" என்ற பெயரில் எழுததுவங்கினார். கசடதபற(1968), வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் அவருடைய ஆரம்பக்கால கவிதைகள் வெளிவந்தன. நவீன கவிஞராக ஆரம்பகாலங்களில் இவரை பாதித்த கவிஞர்கள் வைத்தீஸ்வரன் மற்றும் ஞானக்கூத்தன்.

1998, 2000, 2001 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை குற்றாலத்தில் "பதிவுகள்" என்ற கவிதை பட்டறையை ஒருங்கிணைத்துள்ளார். மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வில் தமிழ், மலையாள, கன்னட, கவிஞர்கள் பங்குபெற்று உரையாடல்களும் விவாதங்களும் நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின் வழியாக கவிதைகளில் நிகழ்ந்த பாதிப்பு 'குற்றாலம் எஃபெக்ட்' என்று இலக்கிய சூழலில் குறிப்பிடப்படுகிறது. அந்த சந்திப்பின் தாக்கம் பல எழுத்தாளர்களால் குறிப்பிடப்படுள்ளது.

இலக்கிய இடம்

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • கவிஞர் சிற்பி இலக்கியவிருது
  • ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
  • 2010, சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது
  • 2012, கண்ணதாசன் இலக்கிய விருது - கோவை
  • 2012, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
  • கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
  • 2017, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது.
  • 2017, திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் “அறிஞர் போற்றுதும்” விருது
  • 2017, மனோன்மணியம் சுந்தரனார் விருது
  • 2018, கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டதின் “ஜெயகாந்தன் விருது”
  • 2019, அமெரிக்கவாழ் தமிழர்களின் "விளக்கு" அமைப்பின் "புதுமைப்பித்தன் நினைவு விருது".

படைப்புகள்

கவிதை தொகுப்புகள்
  1. வெள்ளம், 1973
  2. தீர்த்த யாத்திரை, 1974
  3. மற்றாங்கே, 1979
  4. எட்டயபுரம், 1983
  5. சுயம்வரம், 1985
  6. உலகெல்லாம் சூரியன், 1993
  7. அனிச்சம், 2000
  8. வனம் புகுதல், 2003
  9. எல்லாம் கலந்த காற்று, 2007
  10. நான் நீ மீன், 2011
  11. உளமுற்ற தீ, 2013
  12. தண்ணீர்ச் சிறகுகள், 2014
  13. சொந்த ஊர் மழை, 2015- நற்றினை பதிப்பகம்
  14. தூண்டில்மிதவையின் குற்ற உணர்ச்சி, 2016- டிஸ்கவரி புக் பேலஸ்
  15. பனிக்கால ஊஞ்சல், 2016- உயிர்மை பதிப்பகம்
  16. பேனாவுக்குள் அலையாடும் கடல், 2017- டிஸ்கவரி புக் பேலஸ்
  17. சொல் உளி, 2018 - சந்தியா பதிப்பகம்
  18. மௌனத்தின் வயது, 2019 - சந்தியா பதிப்பகம்
  19. சங்க காலத்து வெயில், 2021 - சந்தியா பதிப்பகம்
  1. கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 1994-காவ்யா
  2. கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 2000-தமிழினி
  3. கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 2010-சந்தியா
  4. கலாப்ரியா கவிதைகள் (இரண்டாம் தொகுதி), 2020
கட்டுரை தொகுப்புகள்
  1. சுவரொட்டி, (தமிழ் திரைப்படக் கட்டுரைகள்), 2013.
  2. மறைந்து திரியும் நீரோடை (இலக்கியக் கட்டுரைகள்), 2014
  3. மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் (இலக்கியக் கட்டுரைகள்), 2015- சந்தியா பதிப்பகம்
  4. என் உள்ளம் அழகான வெள்ளித்திரை (தமிழ் திரைப்படக் கட்டுரைகள்), 2015- சந்தியா பதிப்பகம்
  5. சில செய்திகள் சில படிமங்கள் (இலக்கியக் கட்டுரைகள் ), 2016- சந்தியா பதிப்பகம்
  6. அபெனும் தனி ஊசல் ((இலக்கியக் கட்டுரைகள் ), 2018
  7. பாடலென்றும் புதியது (திரைப்படக் கட்டுரைகள்), 2018- சந்தியா பதிப்பகம்
  8. கல்லில் வடித்த சொல் போலே (கட்டுரைகள், நேர்காணல்கள்), 2021- சந்தியா பதிப்பகம்
தன்வரலாற்று நூல்கள்
  1. நினைவின் தாழ்வாரங்கள், 2009
  2. ஓடும் நதி, 2010
  3. உருள் பெருந்தேர், 2011
  4. காற்றின் பாடல், 2013
  5. போகின்ற பாதையெல்லாம், 2016- அந்திமழை பதிப்பகம்
சிறுகதை தொகுப்பு
  1. வானில் விழுந்த கோடுகள், 2018- சந்தியா பதிப்பகம்
நாவல்கள்
  1. வேணல், 2017- சந்தியா பதிப்பகம்
  2. பெயரிடப்படாத படம், 2019- சந்தியா பதிப்பகம்
  3. பேரருவி, 2020- சந்தியா பதிப்பகம்
  4. மாக்காளை, 2021- சந்தியா பதிப்பகம்

உசாத்துணை

25 ஆவது தடம் இதழ் - விகடன்

https://www.jeyamohan.in/83/

http://andhimazhai.com/news/view/vilakku-award-for-kalapriya.html

http://yuvabharathy.blogspot.com/2016/10/2000.html

இனைப்புகள்

https://kalapria.blogspot.com/

https://www.jeyamohan.in/13149/

https://vallinam.com.my/version2/?p=2968