கலங்கிய நதி: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) |
||
Line 18: | Line 18: | ||
== கதை சுருக்கம் == | == கதை சுருக்கம் == | ||
பணிநீக்கம் செய்யப்பட்டு ஓர் விபத்தில் சிக்கி மெல்ல குணமடைந்து வரும் அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன் எழுதும் நாவலுக்குள் கதை விரிகிறது. தன் 10 வயது மகளின் இழப்பில் தவிக்கும் ரமேஷ் சந்திரனுக்கும் சுகன்யாவுக்கும் வாழ்வே கலங்கிய நதியாகிறது. ரமேஷ் தன் மூர்க்கமான நேர்மையாலும், துடுக்குத்தனத்தாலும் அஸ்ஸாமிற்குப் பணி மாற்றம் செய்யப்படுகிறான். அங்கு தன் துறையைச் சேர்ந்த, அஸ்ஸாம் போராளிகளால் கடத்தப்பட்டு பெருந்தொகை கேட்கப்படும் பொறியாளர் கோஷை விடுவிக்கும் முயற்சியில் பலியாடாக அனுப்பப்படுகிறான் | பணிநீக்கம் செய்யப்பட்டு ஓர் விபத்தில் சிக்கி மெல்ல குணமடைந்து வரும் அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன் எழுதும் நாவலுக்குள் கதை விரிகிறது. தன் 10 வயது மகளின் இழப்பில் தவிக்கும் ரமேஷ் சந்திரனுக்கும் சுகன்யாவுக்கும் வாழ்வே கலங்கிய நதியாகிறது. ரமேஷ் தன் மூர்க்கமான நேர்மையாலும், துடுக்குத்தனத்தாலும் அஸ்ஸாமிற்குப் பணி மாற்றம் செய்யப்படுகிறான். அங்கு தன் துறையைச் சேர்ந்த, அஸ்ஸாம் போராளிகளால் கடத்தப்பட்டு பெருந்தொகை கேட்கப்படும் பொறியாளர் கோஷை விடுவிக்கும் முயற்சியில் பலியாடாக அனுப்பப்படுகிறான்.அரசு, காவல்துறை, ஊடகம், ஒப்பந்தக்காரர்கள் , போராளிகள்,கோஷின் மனைவி இவர்களுக்கிடையே பந்தாடப்பட்டுக்கொண்டே ,தன்னால் இயன்ற எளிய முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்கிறான். அந்த உந்துதலைத் தன் தந்தை வழி அவன் கற்ற காந்தியின் சூத்திரமே அவனுக்கு அளிக்கிறது.அஸ்ஸாமில் நிர்வாகத்தின் ஒவ்வொரு படியிலும் உள்ள நம்பமுடியாத அபத்தங்களையும், காவல் துறைக்கும், போராளிகளுக்குமிடையே உள்ள வெகு நுட்பமான பரிவர்த்தனைகளையும் உணர்ந்து கொள்கிறான். அப்பழுக்கற்ற காந்தீயவாதியும் முன்னாள் முதல்வருமான ராஜவம்ஷியின் துணையும்,உதவியும் கிடைக்கிறது. கோஷ் விடுதலை செய்யப்படுகிறார். அதோடு துறையில் நடந்த மிகப் பெரிய ஊழல் ஒன்றையும் வெளியே கொண்டுவருகிறான்.நிறுவனம் ஆதாரம் இல்லாத அபாண்டமான குற்றச் சாட்டை சுமத்தி அவனைப் பணி நீக்கம் செய்கிறது. விபத்துக்குள்ளாகி மீண்டு வருகிறான். இவற்றை நாவலாக எழுதுகிறான் | ||
நாவலுக்குள் பாத்திரங்களாக வரும் நண்பர்கள் சபீர், ஹெர்பெர்ட் இருவரும் சுகன்யாவுக்கு எழுதும் கடிதங்கள், சுகன்யாவின் மறுமொழி இவை மூலம் சந்திரன் எழுதும் சம்பவங்களுக்குள் உள்ள இடைவெளி இட்டு நிரப்பபட்டு, உண்மையின் பல சாயல்கள் வெளிவருகின்றன. கோஷின் விடுதலையில் சந்திரனின் பங்கு மிகச் சிறியது என்பதும் அவற்றுள் ஒன்று. | நாவலுக்குள் பாத்திரங்களாக வரும் நண்பர்கள் சபீர், ஹெர்பெர்ட் இருவரும் சுகன்யாவுக்கு எழுதும் கடிதங்கள், சுகன்யாவின் மறுமொழி இவை மூலம் சந்திரன் எழுதும் சம்பவங்களுக்குள் உள்ள இடைவெளி இட்டு நிரப்பபட்டு, உண்மையின் பல சாயல்கள் வெளிவருகின்றன. கோஷின் விடுதலையில் சந்திரனின் பங்கு மிகச் சிறியது என்பதும் அவற்றுள் ஒன்று. | ||
== கதாபாத்திரங்கள் == | |||
* ரமேஷ் சந்திரன் - அரசு அதிகாரி, | |||
* சுகன்யா - சந்திரனின் மனைவி | |||
* கோஷ்- போராளிகளால் பிடிக்கப்பட்ட பணயக் கைதி | |||
* நந்திதா கோஷ் -கோஷின் மனைவி | |||
* நிர்மல் பூயான் - காவல்துறை அதிகாரி | |||
* ராஜவன்ஷி - காந்தியவாதி, முன்னாள் முதல்வர்,அப்பழுக்கற்ற நேர்மையாளர். முன்னாள் முதல்வர் சரத் சந்திர சின்ஹாவின் புனைவு வடிவம் | |||
* அனுபமா பூகன் - சந்திரனின் அமைப்பில் அதிகாரி, போராளி , பூயான் மற்றும் காலிதாவின் கல்லூரித்தோழி | |||
* காலிதா - போராளிகளின் ஒரு தலைவன் | |||
* பரூவா- மார்க்ஸியர், பேராசிரியர் | |||
* சுபீர்,ஹெர்பெர்ட்,- சந்திரன்,சுகன்யாவின் நண்பர்கள். கதையின் அடுத்த அடுக்கு இவர்களின் கடிதங்களால் ஆனது. | |||
* பக்ஷிராஜன் - சந்திரனின் தந்தை, காந்தியவாதி | |||
* நிறுவனத் தலைவர் |
Revision as of 00:07, 3 March 2022
இந்திய விடுதலைக்குப்பின் பிரிவினையின் போது ஓடும் ரத்தவெள்ளத்தின் போது நம் தேசப்பிதா சொன்னது ‘ “ஒரு நதியில் வெள்ளம் வரும்போது அது மண்ணடர்ந்து எப்போதையும்விடக் கலங்கலாக இருக்கும். ஆனால் வெள்ளம் வடிந்தபின்னர் அது தெளிவாகிவிடும். முன்னைவிடத் தெளிவாக’’.
பி.ஏ. கிருஷ்ணனின் கலங்கிய நதி யில் கலங்கிச், சுழித்தோடும் பிரமபுத்திரா அஸ்ஸாம் மாநிலப் பிரச்சனையின் குறியீடாகிறது-நம்மால் இயன்றதைச் செய்வோம் ,என்றாவது தெளிந்துவிடும் என்ற மாறா நம்பிக்கையோடு கரையில் காத்திருப்பதைவிட செய்யக்கூடுவதுதான் என்ன?.
அதிகார அமைப்பின் ஊழியன் தான் சார்ந்த அமைப்பின் முரண்களை, செயலின்மையை,அபத்தத்தை எதிர்கொண்டு, அதனால் வெளித்தள்ளப்பட்டு, கலங்கிய நதி தெளியும்போது கண்டடைவதும் காந்தியையே.
ஆசிரியர்
தமிழ்,ஆங்கிலம் இரு மொழிகளிலும் திறம்பட எழுதும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் புலிநகக் கொன்றை, கலங்கிய நதி ஆகிய புனைவுகளையும் திரும்பிச் சென்ற தருணம் மற்றும் அக்கிரகாரத்தில் பெரியார் ஆகிய அபுனைவுகளைடயும் எழுதியவர். கம்பராமாயணம் மற்றும் சங்க இலக்கியங்களில் பெரும்புலமை வாய்த்தவர்.
ஆசிரியர்
தமிழ்,ஆங்கிலம் இரு மொழிகளிலும் திறம்பட எழுதும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் புலிநகக் கொன்றை, கலங்கிய நதி ஆகிய புனைவுகளையும் திரும்பிச் சென்ற தருணம் மற்றும் அக்கிரகாரத்தில் பெரியார் ஆகிய அபுனைவுகளைடயும் எழுதியவர். கம்பராமாயணம் மற்றும் சங்க இலக்கியங்களில் பெரும்புலமை வாய்த்தவர்.
உருவாக்கம் மற்றும் பதிப்பு
கலங்கிய நதி பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘The Muddy River’ என்ற ஆங்கில நாவலின் தமிழ் வடிவம். அரசு அதிகாரியாக அவர் அஸ்ஸாமில் பணியாற்றியபோது நடந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு . தங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து போராடும் இலங்கை சகோதர சகோதரியருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
2002 ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நாவல் 2009 செம்மை செய்யப்பட்டு முதல்பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் டிசம்பர் 2011 ல் வெளியிட்டது. இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2012 இ வெளிவந்தது.
கதை சுருக்கம்
பணிநீக்கம் செய்யப்பட்டு ஓர் விபத்தில் சிக்கி மெல்ல குணமடைந்து வரும் அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன் எழுதும் நாவலுக்குள் கதை விரிகிறது. தன் 10 வயது மகளின் இழப்பில் தவிக்கும் ரமேஷ் சந்திரனுக்கும் சுகன்யாவுக்கும் வாழ்வே கலங்கிய நதியாகிறது. ரமேஷ் தன் மூர்க்கமான நேர்மையாலும், துடுக்குத்தனத்தாலும் அஸ்ஸாமிற்குப் பணி மாற்றம் செய்யப்படுகிறான். அங்கு தன் துறையைச் சேர்ந்த, அஸ்ஸாம் போராளிகளால் கடத்தப்பட்டு பெருந்தொகை கேட்கப்படும் பொறியாளர் கோஷை விடுவிக்கும் முயற்சியில் பலியாடாக அனுப்பப்படுகிறான்.அரசு, காவல்துறை, ஊடகம், ஒப்பந்தக்காரர்கள் , போராளிகள்,கோஷின் மனைவி இவர்களுக்கிடையே பந்தாடப்பட்டுக்கொண்டே ,தன்னால் இயன்ற எளிய முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்கிறான். அந்த உந்துதலைத் தன் தந்தை வழி அவன் கற்ற காந்தியின் சூத்திரமே அவனுக்கு அளிக்கிறது.அஸ்ஸாமில் நிர்வாகத்தின் ஒவ்வொரு படியிலும் உள்ள நம்பமுடியாத அபத்தங்களையும், காவல் துறைக்கும், போராளிகளுக்குமிடையே உள்ள வெகு நுட்பமான பரிவர்த்தனைகளையும் உணர்ந்து கொள்கிறான். அப்பழுக்கற்ற காந்தீயவாதியும் முன்னாள் முதல்வருமான ராஜவம்ஷியின் துணையும்,உதவியும் கிடைக்கிறது. கோஷ் விடுதலை செய்யப்படுகிறார். அதோடு துறையில் நடந்த மிகப் பெரிய ஊழல் ஒன்றையும் வெளியே கொண்டுவருகிறான்.நிறுவனம் ஆதாரம் இல்லாத அபாண்டமான குற்றச் சாட்டை சுமத்தி அவனைப் பணி நீக்கம் செய்கிறது. விபத்துக்குள்ளாகி மீண்டு வருகிறான். இவற்றை நாவலாக எழுதுகிறான்
நாவலுக்குள் பாத்திரங்களாக வரும் நண்பர்கள் சபீர், ஹெர்பெர்ட் இருவரும் சுகன்யாவுக்கு எழுதும் கடிதங்கள், சுகன்யாவின் மறுமொழி இவை மூலம் சந்திரன் எழுதும் சம்பவங்களுக்குள் உள்ள இடைவெளி இட்டு நிரப்பபட்டு, உண்மையின் பல சாயல்கள் வெளிவருகின்றன. கோஷின் விடுதலையில் சந்திரனின் பங்கு மிகச் சிறியது என்பதும் அவற்றுள் ஒன்று.
கதாபாத்திரங்கள்
- ரமேஷ் சந்திரன் - அரசு அதிகாரி,
- சுகன்யா - சந்திரனின் மனைவி
- கோஷ்- போராளிகளால் பிடிக்கப்பட்ட பணயக் கைதி
- நந்திதா கோஷ் -கோஷின் மனைவி
- நிர்மல் பூயான் - காவல்துறை அதிகாரி
- ராஜவன்ஷி - காந்தியவாதி, முன்னாள் முதல்வர்,அப்பழுக்கற்ற நேர்மையாளர். முன்னாள் முதல்வர் சரத் சந்திர சின்ஹாவின் புனைவு வடிவம்
- அனுபமா பூகன் - சந்திரனின் அமைப்பில் அதிகாரி, போராளி , பூயான் மற்றும் காலிதாவின் கல்லூரித்தோழி
- காலிதா - போராளிகளின் ஒரு தலைவன்
- பரூவா- மார்க்ஸியர், பேராசிரியர்
- சுபீர்,ஹெர்பெர்ட்,- சந்திரன்,சுகன்யாவின் நண்பர்கள். கதையின் அடுத்த அடுக்கு இவர்களின் கடிதங்களால் ஆனது.
- பக்ஷிராஜன் - சந்திரனின் தந்தை, காந்தியவாதி
- நிறுவனத் தலைவர்