கர்ணன் (எழுத்தாளர்)
From Tamil Wiki
பொது வாசிப்புக்கும் இலக்கிய வாசிப்புக்கும் இடையே ஆன பல படைப்புகளைத் தந்தவர் கர்ணன் (1938-2020). சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல களங்களில் இயங்கியவர்.
பிறப்பு, கல்வி
கர்ணன், 1938-ல், மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூரில், பரஞ்சோதி-செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் 9 பேர். வறுமையான சூழலால் ஐந்தாம் வகுப்போடு இவரது கல்வி முற்றுப்பெற்றது.
தனி வாழ்க்கை
கர்ணன் மாற்றுத் திறனாளியாக இருந்ததால் சரியான வேலை வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியில் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு, தையற் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ரஞ்சிதத்துடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.