being created

கர்ணன் (எழுத்தாளர்): Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added; Image Added.)
 
(Para Added)
Line 1: Line 1:
[[File:Writer Karnan.jpg|thumb|எழுத்தாளர் கர்ணன்]]
[[File:Writer Karnan.jpg|thumb|எழுத்தாளர் கர்ணன்]]
பொது வாசிப்புக்கும் இலக்கிய வாசிப்புக்கும் இடையே ஆன பல படைப்புகளைத் தந்தவர் கர்ணன் (1938-2020). சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல களங்களில் இயங்கியவர்.
பொது வாசிப்புக்கும் இலக்கிய வாசிப்புக்கும் இடையே ஆன பல படைப்புகளைத் தந்தவர் கர்ணன் (1938-2020). சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல களங்களில் இயங்கியவர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கர்ணன், 1938-ல், மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூரில், பரஞ்சோதி-செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் 9 பேர். வறுமையான சூழலால் ஐந்தாம் வகுப்போடு இவரது கல்வி முற்றுப்பெற்றது.
கர்ணன், 1938-ல், மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூரில், பரஞ்சோதி-செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் 9 பேர். வறுமையான சூழலால் ஐந்தாம் வகுப்போடு இவரது கல்வி முற்றுப்பெற்றது.
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
கர்ணன் மாற்றுத் திறனாளியாக இருந்ததால் சரியான வேலை வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியில் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு, தையற் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ரஞ்சிதத்துடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர்.
கர்ணன் மாற்றுத் திறனாளியாக இருந்ததால் சரியான வேலை வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியில் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு, தையற் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ரஞ்சிதத்துடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர்.


== இலக்கிய வாழ்க்கை ==
சிறு வயது முதலே கல்கியின் எழுத்துக்களை விரும்பி வாசித்தவர் கர்ணன். மணிக்கொடி இதழின் தீவிர வாசகராக இருந்தார். புதுமைப்பித்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இவரது சிறுகதை ‘நீறுபூத்த நெருப்பு’, 1958-ல், ‘காவேரி’ இதழில் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கியில் இவரது சிறுகதைகள் வெளியாகின.


எழுத்தாளர் சி.சு.செல்லப்பா கர்ணனுள் இருக்கும் இலக்கியவாதியை அடையாளம் கண்டு கொண்டார். கர்ணனின் ’சுமை’ என்ற சிறுகதையை தனது ’எழுத்து’ இதழில் வெளியிட்டு ஊக்குவித்தார். கர்ணனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனவுப் பறவை’யை வெளியிட்டதும் சி.சு. செல்லப்பா தான். ந.பிச்சமூர்த்தி, அந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். அந்த நூலை புதுமைப்பித்தனுக்குக் காணிக்கையாக்கியிருந்தார் கர்ணன். தொடர்ந்து   கலைமகள், தீபம், தினமணிக்கதிர், அமுதசுரபி, கணையாழி, கண்ணதாசன், தாமரை, உதயம், குறிஞ்சி, இளந்தமிழன், செம்மலர் எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின.





Revision as of 21:55, 22 August 2022

எழுத்தாளர் கர்ணன்

பொது வாசிப்புக்கும் இலக்கிய வாசிப்புக்கும் இடையே ஆன பல படைப்புகளைத் தந்தவர் கர்ணன் (1938-2020). சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல களங்களில் இயங்கியவர்.

பிறப்பு, கல்வி

கர்ணன், 1938-ல், மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூரில், பரஞ்சோதி-செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் 9 பேர். வறுமையான சூழலால் ஐந்தாம் வகுப்போடு இவரது கல்வி முற்றுப்பெற்றது.

தனி வாழ்க்கை

கர்ணன் மாற்றுத் திறனாளியாக இருந்ததால் சரியான வேலை வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியில் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு, தையற் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ரஞ்சிதத்துடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர்.

இலக்கிய வாழ்க்கை

சிறு வயது முதலே கல்கியின் எழுத்துக்களை விரும்பி வாசித்தவர் கர்ணன். மணிக்கொடி இதழின் தீவிர வாசகராக இருந்தார். புதுமைப்பித்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இவரது சிறுகதை ‘நீறுபூத்த நெருப்பு’, 1958-ல், ‘காவேரி’ இதழில் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கியில் இவரது சிறுகதைகள் வெளியாகின.

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா கர்ணனுள் இருக்கும் இலக்கியவாதியை அடையாளம் கண்டு கொண்டார். கர்ணனின் ’சுமை’ என்ற சிறுகதையை தனது ’எழுத்து’ இதழில் வெளியிட்டு ஊக்குவித்தார். கர்ணனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனவுப் பறவை’யை வெளியிட்டதும் சி.சு. செல்லப்பா தான். ந.பிச்சமூர்த்தி, அந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். அந்த நூலை புதுமைப்பித்தனுக்குக் காணிக்கையாக்கியிருந்தார் கர்ணன். தொடர்ந்து   கலைமகள், தீபம், தினமணிக்கதிர், அமுதசுரபி, கணையாழி, கண்ணதாசன், தாமரை, உதயம், குறிஞ்சி, இளந்தமிழன், செம்மலர் எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.