under review

கனகசபாபதி ஐயர்

From Tamil Wiki
Revision as of 20:10, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

To read the article in English: Kanagasabapathy Iyer. ‎


கனகசபாபதி ஐயர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சைவ சமயத்தின் பல பொருள்களைப் பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணத்தில் வேங்கட சுப்பையருக்கு மகனாகப் பிறந்தார். இலக்கண இலக்கியங்களை ஆசிரியரிடத்தில் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சொற்பொழிவுகள் பல செய்தார். கொழும்பு, மேல்மோனி, பினாங்கி செட்டிமார்நாடு ஆகிய நாடுகளில் கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், கம்ப ராமாயணம் முதலிய புராணச் சொற்பொழிவுகளைச் செய்தார். புராணச் சொற்பொழிவு செய்த இடங்களில் நன்கொடைகள் பல பெற்றார். செய்யுள்களும், தனிபாடல்கள் பலவும் பாடினார். வண்ணப்பாடல்கள் பல இயற்றக்கூடியவராதலால் "பலவகை வண்ணப்பாராவாரம்" என்ற சிறப்புப் பெயரால் வழ்ங்கப்பட்டார்.

நூல்கள்

  • மஹாசிவராத்திரி இணைய நூலகம்
  • ஐயனார் வரலாறு
  • சைவசமயமே சமயம்
  • திருவிழா விளக்கம்
  • அர்த்தோதய விசேடம்
  • சேது மான்மியம்
  • சிவபுராண படனம்
  • நான்முகனாதியோர் சிவவழிபாடு செய்வோர்
  • சமயங்கள் பலவாக இருக்கக் காரணம்
  • இல்லாச் சிரமம்
  • நீலகண்ட சிவாச்சாரியார்
  • ஆசெளசம்
  • சேந்தனார் வரலாறு
  • பட்டினத்து பிள்ளையார் வரலாறு
  • சிவமூர்த்த பேதங்கள்
  • தண்ணீர்ப்பந்தல்
  • தேவாலய பரிபாலனம்
  • சிவமூர்த்த பேதங்கள்
  • கொடை
  • கற்பு
  • கல்வி

உசாத்துணை


✅Finalised Page