under review

கதிரவேற் கவிராயர்

From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கதிரவேற் கவிராயர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர். தனிப்பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கதிரவேற் கவிராயர் தரங்கம்பாடியில், வேளாளர் மரபில் பிறந்தார். சென்னபட்டணத்திலே ஸ்தாபிக்கப்பட்டிருந்த சதுர்வேத சித்தாந்த சபா பிரசங்கத் தமிழ்த் தலைமைப் புலமை நடத்திவந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கதிரவேற் கவிராயர் பாடும் பாக்கள் பளபளப்பும் இசைப் பொலிவும் இயைந்தவை. தனிப்பாக்கள் பல பாடினார். குடிவெறியரைச் கண்டித்து 'குடிகேடர் மாலை' என்னும் பாடலும் பாடினார். கிறிஸ்து மார்க்கத்துக்கு விரோதமாக 'கிறிஸ்துமத திமிர பானு' எனும் நூலை எழுதினர். இதனை நிராகரித்துக் கிறிஸ்தவர்களால் கண்டனம் ஒன்று எழுதப்பட்டது.

பட்டம்

  • கலாவல்லவர்
  • அஷ்டாவதானி

நூல்கள் பட்டியல்

  • குடிகேடர் மாலை
  • கிறிஸ்துமத திமிர பானு

உசாத்துணை



✅Finalised Page