under review

கணபதி ஐயர்

From Tamil Wiki
Revision as of 06:48, 11 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "கணபதி ஐயர் (19ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், குருக்கள், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பொயு 19 ஆம் நூற்றாண்ட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கணபதி ஐயர் (19ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், குருக்கள், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பொயு 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தார். சைவ குருக்கள். இவரை பஞ்சலக்கண குருக்கள் என்றும் அழைப்பர்.

இலக்கிய வாழ்க்கை

யாழ்ப்பாணம் மதகலில் வாழ்ந்த சிற்றம்பலப் புலவர் இவரின் மாணவர். ஆண்டுதோறும் வேதாரணியத்திற்கு சென்று திரும்பும் இவர் தோணிக்காரருக்குப் பயன்படும் வகையில் கப்பற்பாட்டு எழுதினார். இதில் ஸ்கந்த புராணம் முற்றிலும் அடங்கியுள்ளது. வண்ணார்பண்ணையிலுள்ள வைத்தியலிங்க சுவாமியை பாட்டுடைத்தலைவனாக்கி வண்ணை வைத்தியலிங்க குறவஞ்சி எழுதினார். வட்டுநகர் பிட்டிவயல் பத்திரகாளிப் பதிகம் பாடினார்.

நூல்கள் பட்டியல்

பாட்டு
  • கப்பற்பாட்டு
குறவஞ்சி
  • வண்ணை வைத்தியலிங்க குறவஞ்சி
பதிகம்
  • வட்டுநகர் பிட்டிவயல் பத்திரகாளிப் பதிகம்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.