ஓரிற்பிச்சையார்
From Tamil Wiki
ஓரிற்பிச்சையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
இவரது பெயர் தெரியவில்லை. இவரின் பாடலில் “ஓரிற் பிச்சை” என்ற வரி உள்ளதால் ஓரிற்பிச்சையார் என அழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
ஓரிற்பிச்சையார் குறுந்தொகையில் 277வது பாடல் பாடினார். பாலைத்திணைப்பாடல்.
பாடல்வழி அறியவரும் செய்திகள்
- நாய்கள் இல்லாத வீடுகள்
- பொருள் தேடிச் சென்ற தலைவன் வாடை காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறான். தலைவன் இல்லாத வீட்டிலுள்ள தலைவியர் இரவல் இடும் வழக்கமில்லை. எனவே இரவல் வேண்டி நிற்பவரிடம் ”வாடை காலம் எப்போது வரும். அப்போது என் தலைவன் வருவதாகச் சொல்லிச் சென்றான்” என குறிப்புணர்த்துகிறாள்.
- தூய்மையான/செழிப்பான/கவலையற்ற தெருவில், காவலுக்கு நாய்கள் இல்லாத வீட்டில் செந்நெல் சோறும், வெண்ணெயும், வெண்ணீரும் கிடைக்கட்டும் என தலைவி வாழ்த்துகிறாள்.
பாடல் நடை
- குறுந்தொகை: 277
ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச்
செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது
ஓரிற் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவ தென்றி
அக்கால் வருவரெங் காத லோரே.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.