being created

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 2: Line 2:


== இடம் ==
== இடம் ==
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் மலை மீது மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் சாலை, 200 படிகள் கொண்ட நடைபாதை உள்ளன.   
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7 அருகில் மலை மீது மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் சாலை, 200 படிகள் கொண்ட நடைபாதை உள்ளன.   


== பெயர் ==
== பெயர் ==
மூலவர் சந்திரசூடேஸ்வரர், சூடனதேசீவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் சேவுடை நாயனார் என்னும் பெயர் காணப்படுகிறது. அம்மன் மரகதாம்பிகை, பச்சையம்மன், பர்வதாம்மாள் என்ற பெயர்களில் அழைக்கபடுகிறார்.
கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது. கோவில் அமைந்திருக்கும் மலை விருமாச்சலம், சம்பகாத்ரி, கௌதியா பருவதம் என்னும் புராணப் பெயர்களால் அறியப்படுகிறது. 
 
கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது.  


== மூலவர் ==
== மூலவர் ==
மூலவர் லிங்க வரிவ சிவன். சந்திரசூடேஸ்வரர், சூடனதேசீவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் சேவுடை நாயனார் என்னும் பெயர் காணப்படுகிறது. மூலவரின் துணையான அம்மன் மரகதாம்பிகை, பச்சையம்மன், பர்வதாம்மாள் என்ற பெயர்களில் அழைக்கபடுகிறார்.


== தொன்மம் ==
== தொன்மம் ==
கோவிலைப் பற்றிய சில புராணக்கதைகள் வாய்மொழியாக உள்ளன.
====== உடும்புக் கதை ======
தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிய சிவன் காட்சியளித்தார். தன்னை சிவனின் வாகனமாக மாற்றும்படி சிவனைக் கேட்டார். சிவன் வரமளிக்க தருமதேவன் தனது வடிவில் மலை ஒன்றை இவ்விடத்தில் உருவாக்கி அதில் தம்பதியாக காட்சியளிக்க கேட்டுக்கொண்டார். சிவன் நந்தி வடிவிலில் மலைய உருவாக்கி பாரவதியை அங்கு வரவழைக்க திருவிளையாடல் ஒன்று புரிந்தார்.
சிவன் மரகத வண்ண வாக் கொண்ட பலவண்ண உடும்பு வேடம் கொண்டு விளையாட்டு காட்டி ஓடினார். பார்வதி அதனைத் துரத்திச் சென்று ஒருக் கட்டத்தில் அதன் வாலைப்பிடிக்க உடல் மரகத வண்ணம் ஆனது(மரகதாம்பிகை, பச்சையம்மன் - பெயர் காரணம்). பார்வதி உடலின் நிறமாற்றம் கண்டு சுதாரிப்பதற்குள் உடும்பு தப்பி ஓடியது. பார்வதியால் பல மலைகள் துரத்தப்பட்டு ஓசூர் மலைக்கு வந்தது. அங்கு தவம் செய்து கொண்டிருந்த இரு முனிவர்களில் ஒருவர் பலவண்ண உடும்பை கண்டு அதனை இன்னொருவருக்கு காட்ட அழைத்தார். சத்தம் கேட்டு உடும்பு தப்பி மறைந்தது. கோபும் கொண்ட பார்வை முனிவர்களை அழைத்தவரை ஊமையாகவும் கேட்டவரை செவிடாகவும் மாற்றினார்.
முனிவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி மனம் வருந்தி பிராத்திக்க சிவன் காட்சிக் கொடுத்து இரு முனிவர்களும் வேடர் குலத்தில் பிறந்து வளர்ந்து வேட்டைக்கு செல்கையில் தான் உடும்பு வடிவில் காட்சிக் கொடுத்து சாப விமோசனம் அழிப்பதாக வாக்களித்தார். பார்வதி ஓடி வந்ததால் ஏற்பட்ட தாகத்தை உணர்ந்து சிவனிடம் நீர் கோர சிவன் மலையில் ஊற்றுக் குளம் ஒன்றை உருவாக்கினார். குளத்து நீரில் பார்வதி கைப்பட்டதும் குளத்து நீர் பச்சை வண்ணம் பெற்றது(பார்வதி நீர் அருந்தியதாக நம்பப்படும் பச்சைக் குளம் ஆலய வளாகத்தில் உள்ளது).
முனிவர்கள் வேடர் பிறந்து வளர்ந்தனர், ஒரு நாள் வேட்டையாட  இம்மலைக்கு வருகையில் உடும்பு வடிவில் சிவனைக் கண்டு சாபத்திலிருந்து விடுபட்டனர்.


== கோவில் அமைப்பு ==
== கோவில் அமைப்பு ==

Revision as of 17:13, 28 August 2023

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் உள்ள சிறு மலைமீது அமைந்துள்ள சிவன் கோவில். கிழக்கு நோக்கிய கோவில் மூலவர் சந்திரசூடேஸ்வரர். சந்திரசூடேஸ்வரர் துணை மரகதாம்பிகை.

இடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7 அருகில் மலை மீது மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் சாலை, 200 படிகள் கொண்ட நடைபாதை உள்ளன.

பெயர்

கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது. கோவில் அமைந்திருக்கும் மலை விருமாச்சலம், சம்பகாத்ரி, கௌதியா பருவதம் என்னும் புராணப் பெயர்களால் அறியப்படுகிறது.

மூலவர்

மூலவர் லிங்க வரிவ சிவன். சந்திரசூடேஸ்வரர், சூடனதேசீவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் சேவுடை நாயனார் என்னும் பெயர் காணப்படுகிறது. மூலவரின் துணையான அம்மன் மரகதாம்பிகை, பச்சையம்மன், பர்வதாம்மாள் என்ற பெயர்களில் அழைக்கபடுகிறார்.

தொன்மம்

கோவிலைப் பற்றிய சில புராணக்கதைகள் வாய்மொழியாக உள்ளன.

உடும்புக் கதை

தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிய சிவன் காட்சியளித்தார். தன்னை சிவனின் வாகனமாக மாற்றும்படி சிவனைக் கேட்டார். சிவன் வரமளிக்க தருமதேவன் தனது வடிவில் மலை ஒன்றை இவ்விடத்தில் உருவாக்கி அதில் தம்பதியாக காட்சியளிக்க கேட்டுக்கொண்டார். சிவன் நந்தி வடிவிலில் மலைய உருவாக்கி பாரவதியை அங்கு வரவழைக்க திருவிளையாடல் ஒன்று புரிந்தார்.

சிவன் மரகத வண்ண வாக் கொண்ட பலவண்ண உடும்பு வேடம் கொண்டு விளையாட்டு காட்டி ஓடினார். பார்வதி அதனைத் துரத்திச் சென்று ஒருக் கட்டத்தில் அதன் வாலைப்பிடிக்க உடல் மரகத வண்ணம் ஆனது(மரகதாம்பிகை, பச்சையம்மன் - பெயர் காரணம்). பார்வதி உடலின் நிறமாற்றம் கண்டு சுதாரிப்பதற்குள் உடும்பு தப்பி ஓடியது. பார்வதியால் பல மலைகள் துரத்தப்பட்டு ஓசூர் மலைக்கு வந்தது. அங்கு தவம் செய்து கொண்டிருந்த இரு முனிவர்களில் ஒருவர் பலவண்ண உடும்பை கண்டு அதனை இன்னொருவருக்கு காட்ட அழைத்தார். சத்தம் கேட்டு உடும்பு தப்பி மறைந்தது. கோபும் கொண்ட பார்வை முனிவர்களை அழைத்தவரை ஊமையாகவும் கேட்டவரை செவிடாகவும் மாற்றினார்.

முனிவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி மனம் வருந்தி பிராத்திக்க சிவன் காட்சிக் கொடுத்து இரு முனிவர்களும் வேடர் குலத்தில் பிறந்து வளர்ந்து வேட்டைக்கு செல்கையில் தான் உடும்பு வடிவில் காட்சிக் கொடுத்து சாப விமோசனம் அழிப்பதாக வாக்களித்தார். பார்வதி ஓடி வந்ததால் ஏற்பட்ட தாகத்தை உணர்ந்து சிவனிடம் நீர் கோர சிவன் மலையில் ஊற்றுக் குளம் ஒன்றை உருவாக்கினார். குளத்து நீரில் பார்வதி கைப்பட்டதும் குளத்து நீர் பச்சை வண்ணம் பெற்றது(பார்வதி நீர் அருந்தியதாக நம்பப்படும் பச்சைக் குளம் ஆலய வளாகத்தில் உள்ளது).

முனிவர்கள் வேடர் பிறந்து வளர்ந்தனர், ஒரு நாள் வேட்டையாட இம்மலைக்கு வருகையில் உடும்பு வடிவில் சிவனைக் கண்டு சாபத்திலிருந்து விடுபட்டனர்.

கோவில் அமைப்பு

சிற்பங்கள்

வழிபாடு

திருவிழாக்கள்

வரலாறு

கல்வெட்டுகள்

உசாத்துணை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.