being created

எஸ். டி. சுந்தரம்: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added; Image Added.)
 
(Para Added)
Line 1: Line 1:
[[File:Kavignar S.d.sundaram.jpg|thumb|எஸ். டி. சுந்தரம்]]
[[File:Kavignar S.d.sundaram.jpg|thumb|எஸ். டி. சுந்தரம்]]
எஸ். டி. சுந்தரம் (சேலம் துரைசாமி சுந்தரம்; பிறப்பு: ஜூலை, 22, 1921; இறப்பு: மார்ச் 3, 1979) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசன ஆசிரியர், திரைப்பாடலாசிரியர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். தமிழ்நாடு சட்டசபையில் மேலவை உறுப்பினராகப் பணி புரிந்தவர்.
எஸ். டி. சுந்தரம் (சேலம் துரைசாமி சுந்தரம்; பிறப்பு: ஜூலை, 22, 1921; இறப்பு: மார்ச் 3, 1979) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசன ஆசிரியர், திரைப்பாடலாசிரியர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். தமிழ்நாடு சட்டசபையில் மேலவை உறுப்பினராகப் பணி புரிந்தவர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சேலம் துரைசாமி சுந்தரம் என்னும் எஸ். டி. சுந்தரம், ஜூலை, 22, 1921ல், சேலம் மாவட்டம் ஆத்தூரில் துரைசாமி - பூங்கோதை அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வி பயின்ற இவர், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்தி வந்த நாடகக்குழுவில் சேர்ந்தார். பால பார்ட் வேடங்களில் நடித்தார்.
சேலம் துரைசாமி சுந்தரம் என்னும் எஸ். டி. சுந்தரம், ஜூலை, 22, 1921ல், சேலம் மாவட்டம் ஆத்தூரில் துரைசாமி - பூங்கோதை அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வி பயின்ற இவர், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்தி வந்த நாடகக்குழுவில் சேர்ந்தார். பால பார்ட் வேடங்களில் நடித்தார்.


சுந்தரத்திற்கு இருந்த தமிழார்வத்தை அறிந்த ராஜமாணிக்கம் பிள்ளை, திருவையாறு அரசுக் கலைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். திருவையாறில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார்.  
சுந்தரத்திற்கு இருந்த தமிழார்வத்தை அறிந்த ராஜமாணிக்கம் பிள்ளை, திருவையாறு அரசுக் கலைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். திருவையாறில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார்.  
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
1948-ல், ஜெயலட்சுமியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள்.
1948-ல், ஜெயலட்சுமியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள்.
== நாடக வாழ்க்கை ==
== நாடக வாழ்க்கை ==
சிறையில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில்  ‘கவியின் கனவு’ என்ற தலைப்பில் நாடக்ம் ஒன்றை எழுதினார் சுந்தரம். சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘சக்தி’ கிருஷ்ணசாமியின் நட்புக் கிடைத்தது. அவருடன் இணைந்து ‘சக்தி நாடக சபா’ என்ற நாடகக்குழுவை உருவாக்கினார். அதன் மூலம் தான் எழுதியிருந்த ‘கவியின் கனவு’ நாடகத்தை மேடையேற்றினார். அந்நாடகத்தில் சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி. சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்தனர். நாடகத்திற்கு மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான முறைகளுக்கும் மேல் இந்நாடகம் மேடையேறியது. ‘கவியின் கனவு ஸ்பெஷல்’ என்று திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வரை தனியாக ரயில் விடப்பட்டது.
சிறையில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில்  ‘கவியின் கனவு’ என்ற தலைப்பில் நாடக்ம் ஒன்றை எழுதினார் சுந்தரம். சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘சக்தி’ கிருஷ்ணசாமியின் நட்புக் கிடைத்தது. அவருடன் இணைந்து ‘சக்தி நாடக சபா’ என்ற நாடகக்குழுவை உருவாக்கினார். அதன் மூலம் தான் எழுதியிருந்த ‘கவியின் கனவு’ நாடகத்தை மேடையேற்றினார். அந்நாடகத்தில் சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி. சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்தனர். நாடகத்திற்கு மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான முறைகளுக்கும் மேல் இந்நாடகம் மேடையேறியது. ‘கவியின் கனவு ஸ்பெஷல்’ என்று திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வரை தனியாக ரயில் விடப்பட்டது.
== திரைப்பட வாழ்க்கை ==


== திரைப்பட வாழ்க்கை ==
நாடக வெற்றியால் எஸ். டி. சுந்தரத்திற்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. எம்.ஜி.ராமச்சந்திரன் - ஜானகி இணைந்து நடித்த ‘மோகினி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.  ‘லைலா மஜ்னு’ மொழிமாற்று தமிழ்ப் படத்திற்கு வசனம், பாடல்களை எழுதினார்.  ‘தாய் உள்ளம்’ படத்தின் திரைக்கதை எஸ். டி. சுந்தரம் எழுதியதுதான். கல்கி எழுதிய ‘கள்வனின் காதலி’ திரைப்படமானபோது அதற்கு வசனம் எழுதியதும் எஸ். டி. சுந்தரமே. ‘ரோகிணி’ என்ற திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்துத் தந்தவர் எஸ். டி. சுந்தரம். சிவாஜி நடித்து வெற்றி பெற்ற ‘சாரங்கதாரா’ படத்திற்குத் திரைக்கதை, வசனம் எஸ்.டி.சுந்தரம் தான். நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்துத் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘விப்ரநாராயணா’ படத்திற்குத் தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்கள் எஸ். டி. சுந்தரம் எழுதியவையே!
 
‘மனிதனும் மிருகமும்’ என்ற தலைப்பில் சொந்தமாகத் திரைப்படம் ஒன்றைத் தயாரித்து, கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்குநர் வேம்புவுடன் இணைந்து இயக்கினார்.  ‘ஓன்றே குலம்’, ‘பொம்மை கல்யாணம்’, ‘அவன்’, ‘பாட்டாளியின் சபதம்’ போன்ற திரைப்படங்கள் இவரது வசனத்தில் வெளியாகின. ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்திற்கு வசனம் எழுதியது எஸ்.டி. சுந்தரம் தான். “வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு..”, “காலமெனும் காட்டாறு” போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதியதும் எஸ். டி. சுந்தரமே!





Revision as of 22:07, 22 September 2022

எஸ். டி. சுந்தரம்

எஸ். டி. சுந்தரம் (சேலம் துரைசாமி சுந்தரம்; பிறப்பு: ஜூலை, 22, 1921; இறப்பு: மார்ச் 3, 1979) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசன ஆசிரியர், திரைப்பாடலாசிரியர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். தமிழ்நாடு சட்டசபையில் மேலவை உறுப்பினராகப் பணி புரிந்தவர்.

பிறப்பு, கல்வி

சேலம் துரைசாமி சுந்தரம் என்னும் எஸ். டி. சுந்தரம், ஜூலை, 22, 1921ல், சேலம் மாவட்டம் ஆத்தூரில் துரைசாமி - பூங்கோதை அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வி பயின்ற இவர், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்தி வந்த நாடகக்குழுவில் சேர்ந்தார். பால பார்ட் வேடங்களில் நடித்தார்.

சுந்தரத்திற்கு இருந்த தமிழார்வத்தை அறிந்த ராஜமாணிக்கம் பிள்ளை, திருவையாறு அரசுக் கலைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். திருவையாறில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனி வாழ்க்கை

1948-ல், ஜெயலட்சுமியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள்.

நாடக வாழ்க்கை

சிறையில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில்  ‘கவியின் கனவு’ என்ற தலைப்பில் நாடக்ம் ஒன்றை எழுதினார் சுந்தரம். சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘சக்தி’ கிருஷ்ணசாமியின் நட்புக் கிடைத்தது. அவருடன் இணைந்து ‘சக்தி நாடக சபா’ என்ற நாடகக்குழுவை உருவாக்கினார். அதன் மூலம் தான் எழுதியிருந்த ‘கவியின் கனவு’ நாடகத்தை மேடையேற்றினார். அந்நாடகத்தில் சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி. சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்தனர். நாடகத்திற்கு மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான முறைகளுக்கும் மேல் இந்நாடகம் மேடையேறியது. ‘கவியின் கனவு ஸ்பெஷல்’ என்று திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வரை தனியாக ரயில் விடப்பட்டது.

திரைப்பட வாழ்க்கை

நாடக வெற்றியால் எஸ். டி. சுந்தரத்திற்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. எம்.ஜி.ராமச்சந்திரன் - ஜானகி இணைந்து நடித்த ‘மோகினி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். ‘லைலா மஜ்னு’ மொழிமாற்று தமிழ்ப் படத்திற்கு வசனம், பாடல்களை எழுதினார்.  ‘தாய் உள்ளம்’ படத்தின் திரைக்கதை எஸ். டி. சுந்தரம் எழுதியதுதான். கல்கி எழுதிய ‘கள்வனின் காதலி’ திரைப்படமானபோது அதற்கு வசனம் எழுதியதும் எஸ். டி. சுந்தரமே. ‘ரோகிணி’ என்ற திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்துத் தந்தவர் எஸ். டி. சுந்தரம். சிவாஜி நடித்து வெற்றி பெற்ற ‘சாரங்கதாரா’ படத்திற்குத் திரைக்கதை, வசனம் எஸ்.டி.சுந்தரம் தான். நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்துத் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘விப்ரநாராயணா’ படத்திற்குத் தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்கள் எஸ். டி. சுந்தரம் எழுதியவையே!

‘மனிதனும் மிருகமும்’ என்ற தலைப்பில் சொந்தமாகத் திரைப்படம் ஒன்றைத் தயாரித்து, கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்குநர் வேம்புவுடன் இணைந்து இயக்கினார். ‘ஓன்றே குலம்’, ‘பொம்மை கல்யாணம்’, ‘அவன்’, ‘பாட்டாளியின் சபதம்’ போன்ற திரைப்படங்கள் இவரது வசனத்தில் வெளியாகின. ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்திற்கு வசனம் எழுதியது எஸ்.டி. சுந்தரம் தான். “வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு..”, “காலமெனும் காட்டாறு” போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதியதும் எஸ். டி. சுந்தரமே!






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.