under review

எலிசபெத் தங்கராஜ்

From Tamil Wiki
Revision as of 11:17, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எலிசபெத் தங்கராஜ் (பிறப்பு: அக்டோபர் 31, 1984) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

எலிசபெத் தங்கராஜ் இலங்கை நுவரெலியா, தலவாக்கலையில் அக்டோபர் 31, 1984-ல் தங்கராஜ், சிவபதி இணையருக்குப் பிறந்தார். ஆரம்ப, இடைநிலைக்கல்வியை தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றார். மும்மொழி டிப்ளோமா களனிப் பல்கலைக்கழகத்திலும், இரண்டாம் மொழி சிங்களம் உயர் கல்வி அரச கரும மொழித்திணைக்களத்திலும் கற்றார். தற்போது ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

எலிசபெத் தங்கராஜின் முதல் படைப்பு வீரகேசரி வாரவெளியீட்டில் 2003-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுதை, நூல்விமர்சனம், நேர்க்காணல் ஆகியவை எழுதினார். இலங்கையில் வெளிவரும் இதழ்கள், இணையத்தளங்கள், வானொலி, தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்தன. உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் (2014) வெளியான நூலில் எழுத்தாளர் எலிசபெத்தின் கவிதையும் இடம்பெற்றது.

விருதுகள்

  • 2015-ம் ஆண்டு தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம் நடாத்திய விழாவில் 'கவியருவி' விருது
  • 2012-ம் ஆண் இலங்கை சிறந்த வலைத்தள பாவனையாளருக்கான விருது மற்றும் சான்றிதழ்.

உசாத்துணை


✅Finalised Page