எம்.ஆர்.எம். சுந்தரம்
எம்.ஆர்.எம். சுந்தரம் (சுந்தா; சுந்தரம்; மீனாட்சிசுந்தரம்; மேலநத்தம் ராமச்சந்திர ஐயர் மீனாட்சிசுந்தரம்; மே.ரா.மீ.சுந்தரம்) (ஏப்ரல் 13, 1913 – நவம்பர் 11, 1995) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர். திருச்சி மற்றும் தில்லி வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றினார். லண்டன் பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றினார். ’பொன்னியின் புதல்வர்’ என்ற தலைப்பில் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
பிறப்பு, கல்வி
எம்.ஆர்.எம்.சுந்தரம், ஏப்ரல் 13, 1913 அன்று திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில், ராமசந்திர ஐயர் - ருக்மணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை திருநெல்வேலியில் கற்றார்.
தனி வாழ்க்கை
எம்.ஆர்.எம்.சுந்தரம் தொடக்க காலத்தில் கிராம முன்சீப்பாகப் பணியாற்றினார். பின் டி.கே. சிதம்பரநாதன் அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி வானொலி நிலையத்தில் சேர்ந்து பணியாற்றினார். பணியிட மாற்றத்தால் தில்லி வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றினார். தமிழ்ச் செய்திகள் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார். லண்டன் பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். மணமானவர். மனைவி: மீனாட்சி. இவர்களுக்கு இரு மகள்கள்.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.