எடப்பாடி ஆ. அழகேசன்
From Tamil Wiki
எடப்பாடி ஆ. அழகேசன் (ஆறுமுகம் அழகேசன்; எடப்பாடி அழகேசன்) (பிறப்பு: 1958) எழுத்தாளர். துணை ஆட்சியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய பல நாவல்களை, சிறுகதைகளை எழுதினார். ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது’ உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
ஆ. அழகேசன், சேலம் அருகே உள்ள எடப்பாடியில் 1958-ம் ஆண்டில் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்தார். பி.ஏ. கார்பரேட் செகரட்டரிஷிப் பட்டம் பெற்றார். பொது ஆட்சியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
எடப்பாடி ஆ. அழகேசன் தமிழக அரசில் துணை ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: அ. ராணி. மகன்கள்: அ.ரா. அருண்; அ.ரா. தியாகு. மகள்: அ.ரா. மணிமொழி.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.