ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) ஊத்துமலை ஜமீன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கு அருகேயுள்ள வீரகேரளம்புதூரைச் சார்ந்தது ஊத்துமலை ஜமீன். இவர்களின் குலதெய்வம் நவனீத கிருட்டிணப் பெருமாள். ஊத்துமலை ஜமீனில் புகழ்பெற்றவர் இருதயாலய மருதப்ப தேவர். இவருடைய காலத்தில் காவடிச்சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகளும் இருந்தனர். அண்ணாமலை ரெட்டியார் அவைக்களப்புலவராக இருந்தார்.
இலக்கிய ஈடுபாடு
புலவர்கள் பலரை ஆதரித்து அவர்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுத்து பேணினார். வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் நவனீதகிருட்டிண கலம்பகம் பாடவும், அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடவும் ஊக்குவித்தார். புலவர்களின் பாடல்களைக் கேட்டு நன்கொடைகள் வழங்கினார். இருதயாலய மருதப்ப தேவர் மீது பாடப்பட்ட செய்யுள்களை ”ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு” என்ற நூலாகத் தொகுத்தனர். பொருள் புலப்படாது திரிசொற்களை அமைத்து மடக்கு முதலிய சொல்லணிகள் அமையப் பாடினாலும் பொருள் உணர்ந்து கொள்ளும் திறன் பெற்றிருந்தார்.
ஆதரித்த புலவர்கள்
- அண்ணாமலை ரெட்டியார்
- தண்டபாணி ஸ்வாமிகள்
- புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
- செவற்குளம் கந்தசாமிப்புலவர்
- வண்டானம் முத்துசாமி ஐயர்
- முகவூர் கந்தசாமிக் கவிராயர்
- இராமசாமிக் கவிராயர்
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.