ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்: Difference between revisions
(changed single quotes) |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Ootrumalai | {{Read English|Name of target article=Ootrumalai Iruthayaalaya Maruthappa Devar|Title of target article=Ootrumalai Iruthayaalaya Maruthappa Devar}} | ||
[[File:ஊற்றுமலை ஜமீந்தார்.png|thumb|ஊற்றுமலை ஜமீந்தார்]] | [[File:ஊற்றுமலை ஜமீந்தார்.png|thumb|ஊற்றுமலை ஜமீந்தார்]] | ||
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) ஊத்துமலை ஜமீன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர். | ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) ஊத்துமலை ஜமீன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர். |
Revision as of 18:39, 10 October 2022
To read the article in English: Ootrumalai Iruthayaalaya Maruthappa Devar.
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) ஊத்துமலை ஜமீன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கு அருகேயுள்ள வீரகேரளம்புதூரைச் சார்ந்தது ஊற்றுமலை ஜமீன். திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள "கிலுவை" நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊற்றுமலை ஜமீன்தார்கள்.மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊற்றுமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலக் கட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். ஊத்துமலை ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவர்.
இவர்களின் குலதெய்வம் நவனீத கிருட்டிணப் பெருமாள். ஊத்துமலை ஜமீனில் புகழ்பெற்றவர் இருதயாலய மருதப்ப தேவர். (வீரகேரளம்புதூர் கோயிலின் இறைவனின் பெயர் இருதயாலயர்) இவருடைய காலத்தில் காவடிச்சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகளும் இருந்தனர். அண்ணாமலை ரெட்டியார் அவைக்களப்புலவராக இருந்தார்.
இலக்கிய ஈடுபாடு
புலவர்கள் பலரை ஆதரித்து அவர்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுத்து பேணினார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் நவனீதகிருட்டிண கலம்பகம் பாடவும், அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடவும் ஊக்குவித்தார். புலவர்களின் பாடல்களைக் கேட்டு நன்கொடைகள் வழங்கினார். இருதயாலய மருதப்ப தேவர் மீது பாடப்பட்ட செய்யுள்களை "ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு" என்ற நூலாகத் தொகுத்தனர். பொருள் புலப்படாது திரிசொற்களை அமைத்து மடக்கு முதலிய சொல்லணிகள் அமையப் பாடினாலும் பொருள் உணர்ந்து கொள்ளும் திறன் பெற்றிருந்தார்.
ஆதரித்த புலவர்கள்
- அண்ணாமலை ரெட்டியார்
- தண்டபாணி சுவாமிகள்
- புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
- செவற்குளம் கந்தசாமிப்புலவர்
- வண்டானம் முத்துசாமி ஐயர்
- முகவூர் கந்தசாமிக் கவிராயர்
- இராமசாமிக் கவிராயர்
உசாத்துணை
- தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்
- கலம்பகத்தில் "களி" - Dinamani
- https://nakarajan.blogspot.com/2018/02/oothumalai-jameen-oothumalai-jameen.html
- https://www.tagavalaatruppadai.in/archaeology-details?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6
✅Finalised Page