உழவாரப்பணி
ஆலயங்களைத் தூய்மை செய்யும் பணி. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் பக்தர்களால், தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணி. ஆலயங்களில் குளம், கிணறு போன்றவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைத் தூய்மை செய்வது, தேவையற்ற புதர்களைக் களைவது, புற்களைச் செதுக்கி திருத்துவது போன்ற பணிகள் உழவாரப்பணி என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு
பெயர்க்காரணம்
புற்களைச் செதுக்க பயன்படுத்தப்படும் உழவாரம் என்னும் வேளாண்மைக் கருவியை ஆலயத் தூய்மை செய்யும் தொண்டிற்கு அறுபது மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவருமான அப்பர் பெருமான் என்னும் திருநாவுக்கரசர் பயன்படுத்தினார். சைவ பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என வழங்கப்படும் திருப்பதிகங்களை இயற்றி இறைவனை இயற்றமிழால் தொழுத அப்பர், உடலால் செய்யும் தொண்டாக சிவாலயங்களை உழவாரம் கொண்டு தூய்மை செய்யும் பணியைத் தன் வழக்கமாக கொண்டிருந்தார்.
உசாத்துணை
https://www.ulavaram.org/index.html
https://shaivam.org/devotees/thirunavukkarasu-nayanar-puranam
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.