உமையவன்
ப. இராமசாமி (உமையவன்: பிறப்பு - மார்ச் 15, 1990) ஒரு தமிழக எழுத்தாளர், கவிஞர். ஹைக்கூ கவிதைகளில் ஆர்வமுடையவர். சிறார் இலக்கிய வளர்ச்சியில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். தனது இலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார்.
பிறப்பு, கல்வி
உமையவன் என்னும் புனைபெயரில் எழுதிவருபவர் ப.இராமசாமி. இவர், ஈரோட்டில் உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில், மார்ச் 15, 1990-ல், பழனிச்சாமி - சரஸ்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். உயர்நிலைக் கல்வியை முடித்ததும், வணிகவியலில் முதுகலைப் பட்டமும் தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார்.
தனி வாழ்க்கை
படிப்பை முடித்ததும் கோவையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். மனைவி ரேகாமணி.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.