உதயதாரகை

From Tamil Wiki
உதயதாரகை

உதயதாரகை (Morning Star)( 1841) தமிழில் வெளிவந்த முதல் தமிழ்ச் செய்தியிதழ் என கருதப்படுகிறது. தமிழில் உதயதாரகை என்றும் ஆங்கிலத்தில் Morning Star என்றும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது.

வெளியீடு

1841 ல் இலங்கையில் ஜாஃப்னா வட்க்கு மாவட்டத்தில் மானிப்பாய் ஊரில் இருந்த அமெரிக்கன் மிஷனில் பணியாற்றிய ஹென்றி மார்ட்டின் (Henry Martin), செத் பேய்சன் (Seth Payson) என்னும் கிறிஸ்தவ போதகர்களால் தொடங்கப்பட்டது இவ்விதழ். மானிப்பாயைச் சேர்ந்த நேத்தன் ஸ்ட்ரோங் என்ற அம்பலவாணர் சிற்றம்பலம் இதன் ஆசிரியர்.தெல்லிப்பழையில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.தொடங்கியபோது இது மாதமிருமுறை செய்தியிதழாக இருந்தது. 1856 முதல் வாரம் தோறும் வெளிவரத்தொடங்கியது. கரோல் விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தனர்.

உள்ளடக்கம்

உதயதாரகை சமகாலச் செய்திகளின் சுருக்கங்களை அளித்தது. இலக்கியம், வேளாண்மை, விவசாயம் சார்ந்து பலதுறைச் செய்திகளை அளித்திருக்கிறது. மதம் சார்ந்த செய்திகளும் மதக்கொள்கைகளின் விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

  • கதிரேசு, எஸ்; A Hand Book to the Jaffna Peninsula and a souvenir of the opening of the railway to the North; யாழ்ப்பாணம், 1905, (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2004).
  • மார்ட்டின், ஜோன். எச்.; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003).
  • ஜெபநேசன், எஸ்., இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு 2007 (மீள்பதிப்பு)