உகாய்க்குடி கிழார்
From Tamil Wiki
உகாய்க்குடி கிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய ஒரு பாடல் குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
உகாய்க்குடியில் பிறந்தார். கிழார் எனபது அரசர் அளித்த சிறப்புப் பெயர். சங்ககாலப் புலவர்.
இலக்கிய வாழ்க்கை
இவர் பாடியப் பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் 63வது பாடலாக உள்ளது. பாலைத்திணைப் பாடல். "பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, 'பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது' என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது" என்ற துறையின் கீழ் உள்ள பாடல்.
பாடல் நடை
- குறுந்தொகை 63
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே!
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.