இல.சுபத்ரா: Difference between revisions

From Tamil Wiki
Line 15: Line 15:


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
இல.சுபத்ரா ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு புனைவிலக்கியங்களை மொழியாக்கம் செய்வதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதபப்டுகிறார்.  
இல.சுபத்ரா ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு புனைவிலக்கியங்களை மொழியாக்கம் செய்வதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். மொழியாக்கம் பற்றியும் பயிற்றியல் சார்ந்தும் உரையாடல்களில் ஈடுபட்டு வருகிறார்.  


== நூல்கள் ==
== நூல்கள் ==

Revision as of 04:37, 20 September 2023

சுபத்ரா

இல. சுபத்ரா (21. செப்டெம்பர்1984) தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளர். கல்வித்துறையில் பணியாற்றுகிறார். மொழியாக்கம் செய்வதுடன் மொழியாக்கம் சார்ந்த விவாதங்களிலும் ஈடுபட்டு வருகிறார்

பிறப்பு , கல்வி

இல.சுபத்ரா கேரளத்தில் இடுக்கி மாவட்டம் சூரியநல்லி ஊரில் மு. இலட்சுமணன் - லட்சுமி இணையருக்கு 21 செப்டெம்பர் 1984ல் பிறந்தார். தந்தை தலைமையாசிரியராகப் பணியாற்றினார். சுபத்ரா ஆரம்பப் பள்ளிக் கல்வியை இடுக்கி மாவட்டத்தில் டாடா உதவிபெறும் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியை தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியிலும்பயின்றார். ஆங்கில இலக்கியத்தை தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் பயின்று பின்னர் சேலம் சாரதா கல்வியியல் கல்லூரியில் பயிற்றியல் இளங்கலைப் படிப்பை முடித்தார். மதுரை பாத்திமா கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலைப் படிப்பை முடித்தார்

தனிவாழ்க்கை

இல.சுபத்ராவின் கணவர் உ. லட்சுமிகாந்தன், இரு குழந்தைகள், * அஷ்வின், மதிவதனி. இல சுபத்ரா சி.டி.எஸ் நிறுவனத்தில் வரைவு எழுத்தாளராக இரண்டு ஆண்டுக்காலம், 2009 ,2010 ஆண்டுகளில் பணியாற்றினார். 2010 முதல் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணியாற்றுகிறார்

இலக்கியவாழ்க்கை

இல. சுபத்ராவின் முதல் படைப்பு ’கட்டாயக்கல்வி உரிமைச் சட்டமும் தேசிய கல்விக் கொள்கையும்' கட்டுரை தமிழினி இணைய இதழில் ஆகஸ்டு 2019ல் வெளியாகியது. தொடர்ந்து மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். வெளியான முதல் நூல் 2021ல் வெளிவந்த ‘பாதி இரவு கடந்து விட்டது’ என்னும் மொழிபெயர்ப்பு நாவல். வெளியிட்டவர்கள் எதிர் வெளியீடு. சுபத்ரா இணைய இதழ்களில் தொடர்ச்சியாக மொழியாக்கங்களை வெளியிட்டுவருகிறார்

விருதுகள்

2004ல் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம்

இலக்கிய இடம்

இல.சுபத்ரா ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு புனைவிலக்கியங்களை மொழியாக்கம் செய்வதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். மொழியாக்கம் பற்றியும் பயிற்றியல் சார்ந்தும் உரையாடல்களில் ஈடுபட்டு வருகிறார்.

நூல்கள்

  • பாதி இரவு கடந்து விட்டது ( மொழிபெயர்ப்பு நாவல்)
  • அது உனது ரகசியம் மட்டுமல்ல - (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
  • ஆயன் (மொழிபெயர்ப்பு நாவல் )

உசாத்துணை