இலக்கியவட்டம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 23:54, 15 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "இலக்கியவட்டம் (1963- ) க.நா.சுப்ரமணியம் தொடங்கி நடத்திய இலக்கியச் சிற்றிதழ். நவீன கவிதை, சிறுகதை பற்றிய விவாதங்களுக்காக இலக்கியத்தில் கவனிக்கப்பட்டது. வரலாறு சூறாவளி, சந்திரோதயம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இலக்கியவட்டம் (1963- ) க.நா.சுப்ரமணியம் தொடங்கி நடத்திய இலக்கியச் சிற்றிதழ். நவீன கவிதை, சிறுகதை பற்றிய விவாதங்களுக்காக இலக்கியத்தில் கவனிக்கப்பட்டது.

வரலாறு

சூறாவளி, சந்திரோதயம் இதழ்களை நடத்திய க. நா. சுப்ரமண்யம் இலக்கிய வட்டம் என்னும் மாதம் இருமுறை இதழை 22.நவம்பர் 1963 ல் தொடங்கினார். ‘பிரபலஸ்தர்களின் பாராட்டுக்கள் தேவையில்லை; சாஹித்ய அகாடமிக்காரர்களின் பரிசுகளோ பதவிச் சிபாரிசுகளே தேவையில்லை . இலக்கியத்தரம் உயர விமர்சகர்களும் வாசகர்களும் போதும் . . . அப்படிப்பட்ட ஒரு ஜாதியைத் தமிழில் தோன்றச் செய்வதற்காகவே இலக்கிய வட்டம்’ உருவெடுக்கிறது என்று உண்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தன் நிலைப்பாட்டை முதல் இதழ்த் தலையங்கத்தில் எழுதினார்.

1959ல் வெளிவந்த எழுத்து இதழில் க.நா.சுப்ரமணியம் தொடர்ந்து எழுதிவந்தார். பின்னர் அதில் இருந்து விலகினார். எழுத்து இதழுக்கு மாற்றாக அவர் ஆரம்பித்த இதழ் இலக்கிய வட்டம். 30-ஏப்ரல் -1965 ல் தன் 38வது இதழுடன் தன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது இலக்கிய வட்டம்

உள்ளடக்கம்

நவீன இலக்கியம் ஓர் இயக்கமாக ஆகவேண்டும் என்னும் எண்ணத்தை தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தவர் க.நா.சுப்ரமணியம். ’உலக இலக்கியப் பரப்பையும், அதில் சில பகுதிகளையுமாவது எடுத்துச் சொல்ல அவ்வப்போது இலக்கிய வட்டம் முயன்றுவரும்’ என்று 3. ஜனவரி1964 இதழில் எழுதினார். உலக இலக்கியாசிரியர்கள் பற்றிய குறிப்புகளையும் மொழிபெயாப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டது இலக்கிய வட்டம். இதே காலகட்டய்ஜ்ய்ஜொ; வெளிவந்த எழுத்து இதழில் புதுக்கவிதை இயக்கம் தீவிரமாக நடந்துவந்தது. இலக்கியவட்டத்தில் கவிதைகள் குறைவாகவே வெளிவந்தாலும் நவீனத்துவக் கவிதைக் கோட்பாடுகளை வெளியிட்டு வந்தது இலக்கியவட்டம்

நவீன இலக்கிய விமர்சனத்தை வெளியிட்ட இலக்கியவட்டம் க.நா.சுப்ரமணியத்தின் இலக்கிய பரிந்துரைப் பாணியை கடைப்பிடித்தது. கல்வித்துறையாளர்களை கடுமையாக தாக்கினாலும் ரசனை அடிப்படையில் மரபுக்கவிதையை அணுகிய டி.கே.சிதம்பரநாத முதலியாருக்குச் சிறப்பிதழ் வெளியிட்டது.

இலக்கிய இடம்

இலக்கிய வட்டம் இன்று