being created

இமைக்கணம் (வெண்முரசு நாவலின் பகுதி - 17): Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 21: Line 21:
மானுடர்களின் உலகியல் அனுபவங்களால் உருவாகாத வினாக்கள் பயனற்றவை என உணர, இளைய யாதவரை சந்திக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மஹாபாரதக் கதைமாந்தர்களின் உள்ளத்தில் புகுந்து, அவரவர் உருவத்திலேயே வந்து, அவர்கள் வாழ்வின் அனுபவங்களால் எழுந்த வினாக்களை இளைய யாதவரிடம் கேட்கிறார் எமன்.  கர்ணன், பீஷ்மர், சிகண்டி எனப் பல்வேறு நபர்களின் வடிவில் புகுந்து வினாவிய யமன் இறுதியில், தன் மகன் சுகர் வடிவில் சென்று முழுத் தெளிவு பெறுகிறார். மாயையை வெறுக்காமல் மதித்தால் நலமாக வாழ முடியும் என்பதை அறியமுடிகிறது.  எளியோர், ஆள்வோர், அறிஞர், முனிவர் எனப் பலதரப்பட்டோருக்கான அறிவையும் மெய்மையையும் அவரவருக்கேற்பக் கண்டடையும் வாய்ப்பை இமைக்கணம் வழங்குகிறது.   
மானுடர்களின் உலகியல் அனுபவங்களால் உருவாகாத வினாக்கள் பயனற்றவை என உணர, இளைய யாதவரை சந்திக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மஹாபாரதக் கதைமாந்தர்களின் உள்ளத்தில் புகுந்து, அவரவர் உருவத்திலேயே வந்து, அவர்கள் வாழ்வின் அனுபவங்களால் எழுந்த வினாக்களை இளைய யாதவரிடம் கேட்கிறார் எமன்.  கர்ணன், பீஷ்மர், சிகண்டி எனப் பல்வேறு நபர்களின் வடிவில் புகுந்து வினாவிய யமன் இறுதியில், தன் மகன் சுகர் வடிவில் சென்று முழுத் தெளிவு பெறுகிறார். மாயையை வெறுக்காமல் மதித்தால் நலமாக வாழ முடியும் என்பதை அறியமுடிகிறது.  எளியோர், ஆள்வோர், அறிஞர், முனிவர் எனப் பலதரப்பட்டோருக்கான அறிவையும் மெய்மையையும் அவரவருக்கேற்பக் கண்டடையும் வாய்ப்பை இமைக்கணம் வழங்குகிறது.   
== கதை மாந்தர் ==
== கதை மாந்தர் ==
இளைய யாதவர் முதன்மைக் கதைமாந்தராகவும் யமன் துணைமைக் கதைமாந்தராகவும் இடம்பெற்றுள்ளனர்.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 14:11, 26 February 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

இமைக்கணம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 17)
இமைக்கணம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 17)

இமைக்கணம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 17) கீதையின் மறு ஆக்கம். மகாபாரத மாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாகக் கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விவரிக்கப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் தனக்கேயுரிய புனைவு நேர்த்தியால் கீதையை, அதன் சாரத்தை ஒரு கனவுநிலையில் இந்த இமைக்கணத்தில் மிகச் சுருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் 17ஆம் பகுதியான ‘இமைக்கணம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் மார்ச் 2018 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மே 2018இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

இமைக்கணத்தைக் கிழக்கு பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

‘கொலையைத் தொழிலாகச் செய்யும் தென் திசைத் தெய்வமான யமனை அறத்தின் இறைவனாகக் கருதுவது எப்படி?’ என்ற வினாவோடு துவங்குகிறது இமைக்கணம். திரேதாயுகத்தில் இறப்பு நின்றுவிட்டதை, தியானிகன் என்னும் புழு, பிரபாவன் என்னும் சிட்டுக்குருவியுடன் ஒரு நாள் திடீரென்று உணர்ந்திட, அதை மற்ற உயிர்களும் அறியச் செய்ததும் அனைத்து உயிர்களும் பெரும் கொண்டாட்டத்தில் திளைக்கின்றன. கொண்டாட்டமும் விடுதலையும் வெகு காலம் நீடிக்க நீடிக்க ஓர் அயர்ச்சி அடைவதைப் போல இறப்பு நின்றுவிட்டதால் வாழ்வுக்கும் பொருளே இல்லாமல் போனதை உணர்ந்து திகைக்கின்றன. இறப்பை அகற்ற உருவான பசி இல்லாமல் போனவுடன், பசியை அடிப்படையாகக் கொண்டுள்ள மொத்த உலக இயக்கமும் நின்றுவிட, உயிர்களின் உறுப்புகள் தனக்கான அர்த்தத்தை இழக்க, அவையும் அவற்றின் இயக்கத்தை நிறுத்தத் தொடங்குகின்றன. ‘இறப்பு இன்றி உலக இயக்கமும் இல்லை’ என்பதை உணர்ந்த தியானிகனும் பிரபாவனும் அதற்கான காரணத்தை அறிய நாரதரின் உதவியை நாட, உயிர்களின் எஞ்சிய தவ வலிமையின் மூலம் நாரதர் யமனைச் சந்தித்து காரணத்தை வினவுகிறார்.

ராமர் அவதாரத்தை முடித்து வைத்ததில், தனது அறம் பிழையானதாகக் குறிப்பு இருப்பதால், தான் இறப்புத் தொழிலை நிறுத்தியதாக யமன் கூறுவதோடு, பாசம் என்னும் மாயையியிலிருந்து விடுபடாமல் எமனுலகம் அடைந்த ராமரால், மாயை குறித்தும், அறம் குறித்தும் எண்ணற்ற வினாக்கள் தன்னுள் எழுவதாகவும் கூறுகிறார். அவ்வினாக்களுக்கான விடை, பெருமாளின் மறு அவதாரத்தில் ஸ்கண்ணன் மூலமே கிடைக்கும் என்பதை நாரதர் உணர்த்த, தான் காத்திருக்க முடிவெடுத்து தொழிலை தொடர்கிறார் யமன். மஹாபாரத காலத்தில் பெரும் போர் முற்றிப் போகும் சூழலில், தான் கொண்ட உறுதியைப் பேண இளைய யாதவர் நைமிசாரண்யம் என்னும் காலம் கடந்த காட்டில் தனித்திருக்க, அதுவே தன் ஐயங்களைத் தீர்க்கும் தருணம் என எமன் வருகிறார்.

மானுடர்களின் உலகியல் அனுபவங்களால் உருவாகாத வினாக்கள் பயனற்றவை என உணர, இளைய யாதவரை சந்திக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மஹாபாரதக் கதைமாந்தர்களின் உள்ளத்தில் புகுந்து, அவரவர் உருவத்திலேயே வந்து, அவர்கள் வாழ்வின் அனுபவங்களால் எழுந்த வினாக்களை இளைய யாதவரிடம் கேட்கிறார் எமன். கர்ணன், பீஷ்மர், சிகண்டி எனப் பல்வேறு நபர்களின் வடிவில் புகுந்து வினாவிய யமன் இறுதியில், தன் மகன் சுகர் வடிவில் சென்று முழுத் தெளிவு பெறுகிறார். மாயையை வெறுக்காமல் மதித்தால் நலமாக வாழ முடியும் என்பதை அறியமுடிகிறது. எளியோர், ஆள்வோர், அறிஞர், முனிவர் எனப் பலதரப்பட்டோருக்கான அறிவையும் மெய்மையையும் அவரவருக்கேற்பக் கண்டடையும் வாய்ப்பை இமைக்கணம் வழங்குகிறது.

கதை மாந்தர்

இளைய யாதவர் முதன்மைக் கதைமாந்தராகவும் யமன் துணைமைக் கதைமாந்தராகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்

[[Category:Tamil Content]]