இன்பகவி
From Tamil Wiki
இன்பகவி (19ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருச்சியிலுள்ள மணப்பாறையில் இன்பகவி பிறந்தார். இவரது இயற்பெயர் சவியார் என்றிக்லேயாம். இவர் இலங்கைக்குச் சென்று ஆபிரகாம் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். தனிப்பாடல்கள் பல பாடியுள்ளார். கச்சேரி முதலியராக விளங்கிய பிலிப்பு உரோட்டிறிக்கோ, முத்துக் கிருட்டிணர் மீது முறவஞ்சி பாடினார்.
மறைவு
இன்பகவி 1835-ல் காலமானார்.
நூல்கள் பட்டியல்
குறவஞ்சி
- கச்சேரி முதலியார் குறவஞ்சி
- முத்துக்கிருட்டிணன் குறவஞ்சி
- யாழ்ப்பாணத்துச் செல்வர் குறவஞ்சி
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- https://noolaham.net/project/10/963/963.html
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.