under review

ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
Line 62: Line 62:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 19:30, 23 December 2022

To read the article in English: Aavoor Moolankizhar Maganar Perunthalai Sathanar. ‎


ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் சங்ககாலப் புலவர். அகநானூற்றிலும், புறநானூற்றிலும் இவரது ஒன்பது பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

ஆவூர் மூலங்கிழாரின் மகன். இவரது தலை சற்றுப் பெரிதாகக் காணப்பட்டதால் அல்லது இவரின் அறிவைக் கருத்தில் கொண்டு பெருந்தலைச்சாத்தனார் என்று குறிப்பிட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

இவரது ஒன்பது பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. பேரரசர்கள், குறுநில மன்னர்கள், அந்தணர்களைப் பாடினார்.

பாடல்கள்
பாடப்பட்ட மன்னர்கள்
  • குமணன்
  • இளங்கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தாரை
  • கடியநெடுவேட்டுவன்
  • மூவன்

பாடல் நடை

  • அகநானூறு 13

தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர,
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல, வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே!

  • புறநானூறு 151

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,
புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை
அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.

உசாத்துணை


✅Finalised Page