being created

ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

From Tamil Wiki
Revision as of 21:37, 14 February 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் (பிறப்பு: ஜூன் 1, 1942-இறப்பு: அக்டோபர் 4, 2019) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், பதிப்பாளர். நூலகராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல பாடல்களை, கதைகளை எழுதினார். வசந்தா பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி, அச்சில் இல்லாத பழைய நூல்கள் பலவற்றை மீண்டும் பதிப்பித்தார். தமிழக அரசின் விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஆலந்தூர் கோ. மோகனரங்கன், சென்னையில் உள்ள ஆலந்தூரில், ஜூன் 1, 1942 அன்று, மா. கோபால்-மீனாம்பாள் இணையருக்குப் பிறந்தார். ஆலந்தூரில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். சென்னை தியாகராய நகர் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். பணியாற்றிக் கொண்டே அஞ்சல் வழி பயின்று புலவர் பட்டம் பெற்றார். முதுகலைத் தமிழ் பயின்றார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், நேரடி மாணவராகச் சேர்ந்து ‘தமிழ்க்

கவிதைகளில் சந்த அமைப்பு-வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் நூலகராகப் பணியாற்றினார். மனைவி வசந்தா. பிள்ளைகள் முனைவர் மோ.பாட்டழகன், மருத்துவர் கவிமணி, மருத்துவர் மோ.தேன்மொழி, மோ.வெற்றியரசி, மருத்துவர் மோ.அன்புமலர், மருத்துவர் மோ.கலைவாணன்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.