ஆர். வேங்கடாசலம் பிள்ளை
ஆர். வேங்கடாசலம் பிள்ளை (அ. வேங்கடாசலம் பிள்ளை; அரங்க வேங்கடாசலம் பிள்ளை; கரந்தைக் கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை) (டிசம்பர் 20, 1886 - டிசம்பர் 4, 1953) தமிழ் அறிஞர். எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், தமிழ்ப் பொழில் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
ஆர். வேங்கடாசலம் பிள்ளை, டிசம்பர் 20, 1886-ல், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில், அரங்கசாமிப் பிள்ளை-தருமாம்பாள் இணையருக்குப் பிறந்தார். தஞ்சாவூரில் இருந்த தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஆசிரியர் சுப்பிரமணிய ஐயரிடம் தமிழ் பயின்றார். தனிக் கல்வியாக தமிழ் இலக்கண, இலக்கியங்களை, மா.ந. சோமசுந்தரம் பிள்ளையிடமும், கரந்தைப் புலவர் வேங்கடராமப் பிள்ளையிடம் கற்றார்.
தனி வாழ்க்கை
ஆர். வேங்கடாசலம் பிள்ளை, தந்தை காலமானதால் குடும்பத் தொழிலான உழவுத் தொழிலில் ஈடுபட்டார். கணக்குப் பிள்ளையாகவும் ஊர் மணியமாகவும் சில காலம் பணியாற்றினார். தமிழ் கற்றவர் என்பதால் கோனாபாட்டில் உள்ள சரஸ்வதி கலாசாலையில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தூய பேதுருப் பள்ளியில் வேங்கடாசலம் பிள்ளை பயின்றபோது உடன் படித்த இராதாகிருட்டினப்பிள்ளை, கரந்தையில் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார். அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார் வேங்கடாசலம் பிள்ளை.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட செந்தமிழ்க் கைத் தொழிற் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1932-ல், திருவையாறு அரசர் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.